என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பங்குனி பொங்கல்"

    • தயாபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா தொடங்கியது.
    • வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை ரோட்டில் உள்ள காட்டுடை குளத்தில் உள்ளபிரசித்தி பெற்ற தயாபுரம் முத்து மாரியம்மன் கோவிலில் 41-ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று (வியாழக்கிழமை) காலை காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சி யான பங்குனி பொங்கல் விழா மற்றும் தீச்சட்டிகள், பால்குடங்கள், பூ கரகம் எடுக்கும் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று கோவில் பூசாரி சுப்பிரமணியன் மற்றும் பக்தர்கள் மானாமதுரை வைகை ஆற்றில் இருந்து பூ கரகம், தீச்சட்டிகள், பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்து கோவில் முன்பு பூக்குழி இறங்குவர். வருகிற 28ந்தேதி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.

    பக்தர்கள் சார்பில் தினமும் மண்டகப் படிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிஸ்டிகள் சுப்பிரமணியன், நாகராஜன், முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் -முளைப்பாரி உற்சவம் நடந்தது.
    • 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் 28-வது வட்டம் ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் முளைப்பாரி 83-வது ஆண்டு உற்சவம் கடந்த 28-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. அன்று நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கயிறு கட்டினர். விழாவை முன்னிட்டு தினமும் கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று (4-ந்தேதி) மாலை 5 மணிக்கு நையாண்டி மேளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சாமி கரகம் எடுத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி, மாவிளக்கு வழிபாடு, பொங்கல் பூஜை நடக்கிறது.

    நாளை (5-ந்தேதி )மாலை 6 மணிக்கு மேல் செல்லூர் மகாதேவன் குழுவினர் நாசிக் டோல் மேளதாளத்துடன் கீழமாசிவீதி, ரகுராம் குழுவினர் வான வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமத்து பிள்ளையார் கோவில், கிராமத்து மாரியம்மன் கோவில், அழகர்கோவில் ரோடு வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில், கருப்பணசாமி கோவில் சென்று கோரிப்பாளையம் பள்ளிவாசலில் இறக்கி வைத்து கல்பாலம் ரோடு வழியாக பவனி வந்து வைகை ஆற்றில் சாமி கரகமும், முளைப்பாரியும் கரைக்கப்படும். 6-ந்தேதி காலை 6 மணி முதல் 8 வரை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    ×