என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முளைப்பாரி உற்சவம்"

    • ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் -முளைப்பாரி உற்சவம் நடந்தது.
    • 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாநகர் 28-வது வட்டம் ஜம்புரோபுரம் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் முளைப்பாரி 83-வது ஆண்டு உற்சவம் கடந்த 28-ந்தேதி கொடியேற்றத் துடன் தொடங்கியது. அன்று நேர்த்திகடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கயிறு கட்டினர். விழாவை முன்னிட்டு தினமும் கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இன்று (4-ந்தேதி) மாலை 5 மணிக்கு நையாண்டி மேளத்துடன் வைகை ஆற்றுக்கு சென்று சாமி கரகம் எடுத்து வீதி உலா வரும் நிகழ்ச்சி, மாவிளக்கு வழிபாடு, பொங்கல் பூஜை நடக்கிறது.

    நாளை (5-ந்தேதி )மாலை 6 மணிக்கு மேல் செல்லூர் மகாதேவன் குழுவினர் நாசிக் டோல் மேளதாளத்துடன் கீழமாசிவீதி, ரகுராம் குழுவினர் வான வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு கிராமத்து பிள்ளையார் கோவில், கிராமத்து மாரியம்மன் கோவில், அழகர்கோவில் ரோடு வழியாக தல்லாகுளம் பெருமாள் கோவில், கருப்பணசாமி கோவில் சென்று கோரிப்பாளையம் பள்ளிவாசலில் இறக்கி வைத்து கல்பாலம் ரோடு வழியாக பவனி வந்து வைகை ஆற்றில் சாமி கரகமும், முளைப்பாரியும் கரைக்கப்படும். 6-ந்தேதி காலை 6 மணி முதல் 8 வரை மஞ்சள் நீராட்டு நடக்கிறது. 7-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    ×