என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 குழந்தைகளும் பலியானதால் சோகத்தில் மூழ்கிய கிராமம்
- ஒரே குடும்பத்தை ேசர்ந்த 3 குழந்தைகளும் பலியானதால் கிராமம் சோகத்தில் மூழ்கியது.
- குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா உலகம்பட்டி ஊராட்சி படமிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன், நாகராஜன். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இதில் லட்சுமணன் சமீபத்தில் இறந்துவிட்டார். அவரது மனைவி தனம் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இவர்க ளின் குழந்தைகள் மகேந்தி ரன் (7), சந்தோஷ்(4), நாகராஜன் தம்பதியின் மகள் யாமினி என்ற மீனாட்சி (10).
இவர்களின் பெற்றோர் நேற்று வேலைக்கு சென்று விட்ட நிலையில் 3 குழந்தை களும் அருகில் உள்ள செட்டி ஊரணியில் குளித்த னர். அப்போது அடுத்தடுத்து 3 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பெற்றோர்கள் குழந்தைகளை தேடினர். அப்போது ஊரணியில் மூழ்கி 3 குழந்தைகளும் பலியானது தெரியவந்தது. பின்னர் பலியான 3 குழந்தைகளின் உடல்களும் மீட்கப்பட்டன.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் உலகம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான 3 குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பொன்னமராவதியில் உள்ள வலையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் 3 குழந்தைகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன்-தம்பியின் குழந்தைகள் 3 பேர் பலியான சம்பவம் படமிஞ்சி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உளளது.
பாதிக்கப்பட்ட குழந்தை களின் குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி வழங்குவ தோடு பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்