என் மலர்tooltip icon

    சேலம்

    • என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.
    • பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டில் 2 பாதுகாப்பு வளாகத்தை உருவாக்குகிறது.

    * 2 பாதுகாப்பு வளாகங்களில் ஒன்று தமிழ்நாட்டில் அமைகிறது.

    * தமிழ்நாட்டில் ஒரு ஜவுளி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது.

    * சேலம் பகுதியில் ரெயில்வே கட்டமைப்புக்கு ரூ.260 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    * பாஜக கூட்டணியில் இணைந்திருக்கின்ற கூட்டணி தலைவர்களை நான் வணங்குகிறேன்.

    * உங்கள் ஆதரவோடு தமிழகத்தை புதிய உயரத்திற்கு நாங்கள் எடுத்து செல்வோம்.

    * இது எங்கள் அனைவரின் உத்தரவாதம்.

    * தமிழ் மொழி இந்தியாவின் மிகவும் பழமையான மொழி.

    * எந்த நாட்டில் உலகின் பழமையான மொழி இருக்கிறதோ அந்த நாடு பெருமையுடன் மார்தட்டி கொள்ளும்.

    * என்னால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

    * நமோ இன் தமிழ் செயலியை அனைவரும் பயன்படுத்துங்கள்.

    * தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நான் தமிழில் பேச தொடங்கி உள்ளேன்.

    * அடுத்த 5 ஆண்டுகளில் ஊழலை எதிர்த்து நமது போராட்டம் அமையும்.

    * பாஜக, கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கூறினார்.

    • திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.
    • மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:

    * உங்களுடைய சேவகனான இந்த மோடி, பெண்களின் நலனுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.

    * தமிழ்நாட்டில் 3.65 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கிறது.

    * தமிழ்நாட்டில் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.

    * இன்று பெண்கள் சக்தி மோடியின் பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.

    * அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நலத்திட்டங்கள் இன்னும் வேகமாக பெண்களுக்கு வந்து சேரும்.

    * ஜெயலலிதாவை திமுகவினர் எந்தவிதமாக நடத்தினார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.

    * திமுகவின் பெண்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக ஏப்ரல் 19ல் பெண்கள் வாக்களிக்க வேண்டும்.

    * ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் திமுக, காங்கிரஸ்.

    * திமுக, காங்கிரஸ் என்றால் ஊழல், குடும்ப ஆட்சி.

    * திமுக, காங்கிரசின் ஊழலை பற்றி பேசினால் ஒரு நாள் போதாது.

    * தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி நிதி வழங்கப்படுகிறது.

    * மத்திய அரசு வழங்கும் நிதியை திமுக அரசு வீணடிக்கிறது.

    * மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாரை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

    * பெருந்தலைவர் காமராஜரை போன்ற மாபெரும் தலைவரை தந்த மண் இந்த தமிழக மண்.

    * மதிய உணவு திட்டம் கொண்டு வந்து தமிழகத்தில் கல்வியை வளர்த்தவர் காமராஜர்.

    * பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் பெரிய கனவுகளை காண்கிறது. அந்த கனவுகளை நிச்சயம் அடைந்தே தீர்வோம் என்று கூறினார்.

    • இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.
    • வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    சேலம்:

    சேலம் பொதுக்கூட்டத்தில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி,

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    * ஆடிட்டர் ரமேஷ் பா.ஜ.க.வுக்காக கடினமாக உழைத்தவர், அவரை கொன்று விட்டனர்.

    * இந்தியா கூட்டணி மும்பையில் இந்து தர்மத்தின் சக்தியை அழிக்க வேண்டும் என்று பிரகடனம்

    * இந்து மதத்தில் சக்தியை நாம் எப்படி வழிபடுகிறோம் என்பது தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும்.

    * காங்கிரஸ், திமுக கூட்டணி சக்தியை அழித்துவிடுவோம் என்று கூறுவதை அனுமதிக்க முடியுமா?

    * இந்தியா கூட்டணி பலமுறை இந்து தர்மத்தை அவமதித்துள்ளது.

    * வேறு எந்த மதத்தையும் இந்தியா கூட்டணி எப்போதும் குற்றம் சொன்னதில்லை.

    * பிற மதங்களை பற்றி இந்தியா கூட்டணி ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.

    * ஆனால் இந்து மதம் குறித்து பேச இந்தியா கூட்டணி ஒரு விநாடி கூட தயங்கியதில்லை.

    * பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்ததை இவர்கள் அவமதித்தார்கள்.

    * செங்கோல் இங்கிருக்கும் இந்து சமய மடங்களை குறிக்கிறது என்பதால் அதனை அவமதித்தார்கள்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து விடுவார்கள்.

    * பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையை பாடினார்.

    * சக்தியை அழிக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாடு பாடம் புகட்டும். இது மோடியின் உத்தரவாதம் என்றார்.

    மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சேலம் கோட்டை மாரியம்மன் ஆகியவற்றை சுட்டிக்காட்டி சக்தியின் பெருமையை பிரதமர் மோடி விளக்கினார்.


    • தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.
    • தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    சேலம்:

    பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் பேச்சை தொடங்கினார்.

    முதலில் சேலம் கோட்டை மாரியம்மனை வணங்குகிறேன் என்றார்.

    அதன்பின் தொடர்ந்து பேச தொடங்கிய பிரதமர் மோடி,

    * தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை நாடே ஆச்சரியமாக பார்க்கிறது.

    * பா.ஜ.க.வுக்கு பெருகும் ஆதரவு தி.மு.க.வின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

    * வளர்ச்சியடைந்த பாரதத்திற்காக 400-க்கும் அதிகமான இடங்களை பெற வேண்டும்.

    * தமிழகம் வளர்ச்சியடைய 400-க்கும் மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும்.

    * தமிழ்நாட்டின் வளர்ச்சியே தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நோக்கம்.

    * தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ராமதாஸ், அன்புமணி பா.ஜ.க.வுடன் இணைந்துள்ளனர்.

    * சேலத்திற்கு பலமுறை வந்துள்ளேன். இன்று பழைய நினைவுகள் எனக்கு வருகின்றன.

    * சேலத்தை சேர்ந்த ரத்தினவேல் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார்.

    * ரத்தினவேல் இன்று நம்மிடையே இல்லை, அவரின் நினைவு மட்டுமே உள்ளது.

    * சேலம் வந்ததும், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்த்த லட்சுமணன் என் நினைவுக்கு வருகிறார்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசி வருகிறார்.

    இதனிடையே ஆடிட்டர் ரமேஷ் மரணம் குறித்து பேசும் போது பிரதமர் மோடி கண் கலங்கினார்.


    • தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி.
    • 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும்.

    சேலம்:

    சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பா.ஜ.க. வின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மேடைக்கு வந்த பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு வெள்ளி பேழையில் ஜவ்வரிசி பரிசாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார்.

    கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், சமூக நீதி இலக்கணத்திற்கு முன்னுதாரணமாக பிரதமர் மோடி, ராமதாஸ் திகழ்கின்றனர். கடந்த 5 நாட்களாக தென்னிந்தியா முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செய்துள்ளார் என்றார்.

    பின்னர் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டின் பலம் பொருந்திய தலைவர்களை அழைத்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 400 தொகுதிகளுக்கு மேல் வென்று, 3-வது முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கும். ராமதாசின் கனவுகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்றார்.

    • பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
    • பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

    சேலம்:

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் அதிக தொகுதிகளை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்பில் பாரதிய ஜனதா கட்சி களம் இறங்கி உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த இரு மாநிலங்களிலும் கடந்த மாதம் முதலே, அடுத்தடுத்து வந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் கடந்த 15-ந்தேதி பிரசாரம் மேற்கொண்ட மோடி, இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் அஞ்சு விளக்கு பகுதியில் இருந்து சுல்தான்பேட்டை வழியாக பாலக்காடு தலைமை தபால் நிலையம் வரையிலான ஒன்றரை கிலோமீட்டர் தூரம் திறந்த வாகனத்தில் நின்றபடி வாகன பேரணி சென்றார்.

    அப்போது பாலக்காடு, மலப்புரம், பொன்னானி ஆகிய மக்களவை தொகுதி களில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.

    கேரளாவில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் மோடி சேலம் வந்தடைந்தார். அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் வரவேற்றனர். அதனை தொடர்ந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

    பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சரத்குமார், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.


    பொதுக்கூட்டத்தில் பேசிய சரத்குமார், இந்தியா மேலும் வலிமை அடைவதற்கு மோடியின் ஆட்சி தேவை. தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

    இதையடுத்து பேசிய அன்புமணி ராமதாஸ், பொதுக்கூட்டத்தில் நாங்கள் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி வரவேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம் என்றார்.

    இதனிடையே பொதுக்கூட்ட மைதானத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்று பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பிரதமர் மோடியின் வாகனத்தில் அண்ணாமலை, எல்.முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

    பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
    • பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

    பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள். மோடியின் வருகையையொட்டி அவரை வரவேற்று அந்த பகுதியில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சேலத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

    சேலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க சாலையில் கட்டப்பட்டுள்ள கட்சி கொடிகள் - பொதுக்கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் நுழைவாயில்.

    சேலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க சாலையில் கட்டப்பட்டுள்ள கட்சி கொடிகள் - பொதுக்கூட்ட மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டர் நுழைவாயில்.

    பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள். சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைதலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    பிரதமர் மோடி வருகையையொட்டி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 ஆயிரத்து 700 போலீசார் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று மாலை முதல் மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை.

    பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். 

    • சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆனந்தா பிரிஜ் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சஞ்சய் (வயது 23). இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் பி.பி.ஏ 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் காலையில் கல்லூரிக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பகுதி நேர வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சஞ்சய் ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறைக்கு சென்றார். பின்னர் வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அறைக்குள் சென்று பார்த்த போது சஞ்சய் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அவர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தாய் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப் பதிவு செய்து சஞ்சய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது.
    • கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், ஆனால் இந்தாண்டு பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது.

    சேலம் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து நேற்று உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் 102.2 டிகிரியாக இருந்த வெயிலின் தாக்கம் நேற்று மேலும் அதிகரித்து 103.3 டிகிரியாக பதிவானது.

    இதனால் காலையில் தொடங்கிய வெயில் மாலை 6 மணி வரை சுட்டெரித்தது. மேலும் 7 மணி வரை அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். மதிய நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சாலைகளில் சென்றவர்கள் குடைகள் பிடித்தபடியும், துணிகளால் தலையை மூடியபடியும் சென்றனர். நேற்றிரவும் கடும் புழுக்கம் நீடித்ததால் இரவிலும் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    கோடை வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பான கடைகளான நுங்கு, பழச்சாறு, இளநீர், தர்பூசணி, கம்பங்கூழ், மோர் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர். குளிர்பானங்களை பருகி உஷ்ணத்தை தவிர்த்தனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதியது. இளநீர் 30 முதல் 60 ரூபாய் வரையும், தர்பூசணி ஒரு கிலோ 25 ரூபாய் வரையும் விற்பனையானது. இதனால் அதிக அளவில் தர்பூசணிகளை வாங்கி சாப்பிட்டனர்.

    இன்று மேலும் 2 முதல் 3 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோடை வெயிலில் இருந்து தப்பிக்க அதிக அளவிலான நீர் பருக வேண்டும், மோர், இளநீர், உப்பு கலந்த அரிசி கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு, ஆகியவற்றை அதிக அளவில் பருகலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
    • கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை போலீசார் நேற்றிரவு உடையாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றனர்.

    அப்போது காருக்குள் இருந்த 2 பேர் தப்பியோட முயன்றனர். இதனை பார்த்த போலீசார் தப்பியோட முயன்ற ராஜஸ்தானை சேர்ந்த லெட்சமணன் (19) என்பவரை மடக்கி பிடித்தனர். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தப்பியோடி விட்டார்.

    தொடர்ந்து காரை சோதனை செய்த போது காரில் குட்கா, ஹான்ஸ் உள்பட 440 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதன் கொள்முதல் மதிப்பு 2 லட்சத்து 27 ஆயிரம் என்றும், விற்பனை மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குஜராத் பதிவெண் கொண்ட அந்த காரையும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் இருந்து ஆத்தூருக்கு புகையிலை பொருட்களை கடத்தி சென்றதாகவும், கார் பழுது ஆனதால் அங்கு நிறுத்தி வைத்திருந்த நிலையில் போலீசாரிடம் சிக்கி கொண்டதாகவும் கூறி உள்ளார்.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    சேலம்:

    தமிழகம்-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து பெங்களூரு நகர மக்களின் குடிநீர் தேவைக்காகவும், தமிழகத்திற்கும் சேர்த்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    நேற்று காலை விநாடிக்கு 67 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று அதிகரித்து 148 கன அடியாக வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 62.36 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 62.24 அடியானது. நீர் இருப்பு 26.38 டி.எம்.சி.யாக உள்ளது.

    ×