என் மலர்
சேலம்
- 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.
- விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள செந்தாரப்பட்டியை சேர்ந்தவர் அருண் (24), ஓட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரி. இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு லாவோஸ் நாட்டில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கிருந்த ஒரு கும்பல் அவரை அடைத்து வைத்து சைபர் குற்றத்தில் ஈடுபடும் நிறுவனத்தில் வேலையில் சேரும் படி வற்புறுத்தி உள்ளனர். பின்னர் அருண் தூதரகம் வழியாக சொந்த ஊர் திரும்பினார். இது குறித்து தம்மம்பட்டி போலீசில் அவர் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ. 1.65 லட்சம் வாங்கி கொண்டு மோசடி செய்த தஞ்சையை சேர்ந்த சையது, சென்னை பெரம்பூரை சேர்ந்த அப்துல் காதர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் முழுவதும் ஏராளமானவர்களை வெளிநாடுகளுக்கு இது போல அனுப்பி வைத்துதும், இதில் ஏஜெண்டுகள் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது பரபரப்பு தகவல்கள் வெளிடியானது, அதன் விவரம் வருமாறு-
தமிழ்நாடு முழுவதும் வெளிநாட்டில் வேலை தேடும் இளைஞர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை இந்த ஏஜெண்டுகள் தொடர்பு கொண்டு பேசி அவர்கள் விரும்பும் வேலை அதிக சம்பளத்தில் இருப்பதாக கூறி தாய்லாந்து, லாவோஸ் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களை தனித்தனி அறைகளில் தங்க வைத்து அவர்கள் விரும்பும் நிறுவனங்களுக்கு நேர்முகததேர்வுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிறுவனங்கள் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சட்ட விரோத நிறுவனங்கள் ஆகும். சரளமாக ஆங்கிலம் பேசும் இளைஞர்களை தேர்வு செய்து அவர்களை இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளில் வசிக்கும் நபர்களோடு பேச செய்து அவர்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் மோசடி வேலையில் ஈடுபட செய்கின்றனர்.
இப்படி மோசடி வேலைகளுக்கு தான் ஆட்களை அனுப்புகிறோம் என்று இங்குள்ள ஏஜெண்டுகளுக்கு தெரியும். அதற்காக அதிகப்படியான கமிஷன் தொகையை வெளிநாட்டு சைபர் குற்றவாளிகளிடம் இருந்து பெற்று வந்துள்ளனர். ஆத்தூர் பகுதியை சேர்ந்த அருணுடன் லாவோஸ் நாட்டிற்கு 15-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் 5 இளைஞர்களை சைபர் கிரைம் குற்ற செயலில் ஈடுபடும் வேலையை செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.
அதற்கான கம்பெனிகள் என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த வேலை தெரியாது என்று சொன்னவர்களிடம் ரூ. 5 முதல் 10 லட்சம் வரை தந்தால் தான் உங்கள் நாட்டிற்கு அனுப்பி வைப்போம் என்று அந்த கும்பல் மிரட்டி உள்ளது. அதன் பிறகே தூதரக அதிகாரிகள் உதவியுடன் மோசடி கும்பலிடம் இருந்து மீண்டு அருண் உள்பட 5 இளைஞர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிலையில் தான் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. விரைவில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உள்ளனர்.
சி.பி.ஐ.டி. போலீசார் முழுமையாக விசாரித்து ஆன்லைன் சைபர் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டு கும்பலையும் அவர்களுக்கு தேவையான ஆட்களை இங்கிருந்து அனுப்பி வைத்த ஏஜெண்டுகளையும் கைது செய்தால் மேலும் பலர் சிக்குவார்கள் என்பதும், அவர்கள் மூலம் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் இந்த வழக்கில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
- கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 5,248 கன அடி வீதம் தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
- நீர்வரத்தை கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 5,666 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 103.90 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று காலை அணையின் நீர்மட்டம் 82.68 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 6,453 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 4,667 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் மொத்தம் 5,248 கன அடி வீதம் தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நீர்வரத்தை கர்நாடக - தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதியில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,149 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 3,341 கன அடியாக அதிகரித்தது.
தொடர்ந்து இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 4,521 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நேற்று 40.59 அடியாக நீடித்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 41.15 அடியாக உயர்ந்தது. அணையில் 12.69 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- டாஸ் வென்ற மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய திருச்சி அணி 193 ரன்கள் குவித்தது.
சேலம்:
டி.என்.பி.எல் டி20 கிரிக்கெட் போட்டி சேலத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் டாப்- 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், இன்று இரவு நடந்த 7-வது லீக்கில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் சந்தித்தன. டாஸ் வென்ற
மதுரை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திருச்சி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அர்ஜுன் மூர்த்தி ஒரு ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து இறங்கிய ஷியாம் சுந்தர் 30 ரன்னில் வெளியேறினார்.
வசீம் அகமதுடன் ஜோடி சேர்ந்த சஞ்சய் யாதவ் பொறுப்புடன் ஆடினார். இருவரும் அரை சதமடித்தனர்.
இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களை குவித்தது. வசீம் அகமது 55 பந்தில் 90 ரன்னும், சஞ்சய் யாதவ் 60 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.
இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்குகிறது.
- மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
- நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ண ராஜசாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 6,600 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 103.40 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 574 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 82.45 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 6,148 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,000 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5000 ஆயிரம் கன அடியில் இருந்து 5,500 கன அடியாக அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5,500 கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,832 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,149 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று நீர்வரத்து அதிகரித்து விநாடிக்கு 3,341 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.59 அடியாக உயர்ந்தது. அணையில் 12.39 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார்.
- பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.
சேலம்:
சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 2026 தேர்தலில் பாஜக சவால்களை எப்படி சமாளிப்பது, அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்களிடம் வெற்றி வியூகங்களை எடப்பாடி பழனிசாமி எடுத்துரைத்தார். மேலும் பிரிந்த தலைவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்கவில்லை என தகவல் வெளியாகவில்லை.
மூத்த நிர்வாகிகள், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியுடன் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
- இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
- தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2019-ம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி தவ்பீக், அப்துல் தமீம் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக சேலம் மத்திய சிறையில் உயர் பதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த சோதனை குழுவினர் சிறையில் அனைத்து அறைகளிலும் சோதனை நடத்தினர். அதன்படி தவ்பீக் மற்றும் அப்துல் தமீம் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்த அறையில் சோதனையிட சென்றனர். அப்போது அவர்கள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வார்டன்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் அந்த அறை முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 2 பேரையும் வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை டி.ஜி.பி. மகேஸ்வர்தயாள் உத்தரவிட்டார். அதன்படி தவ்பீக் கடலூர் சிறைக்கும், அப்துல் தமீம் கோவை மத்திய சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டு அங்கு அடைக்கப்பட்டனர்.
- சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள காட்டுவளைவு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 31), இவர் சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மணி ஓமலூரில் இருந்து மேச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி மணி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
- 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் 8-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, தான் மோதி உள்ள இரண்டு ஆட்டங்களிலும் தோற்றது. கோவை கிங்சிடம் 13 ரன்கள் வித்தியாசத்திலும், நெல்லை அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றியை பறி கொடுத்தது.
முன்னாள் சாம்பியனான அந்த அணி வெற்றி கணக்கை தொடங்கும் வேட்கையில் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன்பால், சந்தோஷ்குமார், ஆண்ட்ரே சித்தார்த் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், சதீஷ், பெராரியோ ஆகியோரும் பந்து வீச்சில் பெரியசாமி, ரஹில்ஷா, அஸ்வின் கிறஸ்ட் ஆகியோரும் உள்ளனர்.
விஜய் சங்கர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் கோவையிடம் தோற்றது. அந்த அணியும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.
அந்த அணியில் துஷார் ரஹேஜா, சாத்வீக், அனிரூத், முகமது அலி, கணேஷ் அஜித்ராம், புவனேஷ்வரன், டி.நடராஜன், மதிவாணன், கருப்பசாமி ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
- கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு கிராமம் குண்டு மலைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பாலு (வயது 36). லாரி டிரைவர்.
இவர் சமீபகாலமாக தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை ஆடியோ பதிவாக சமூக வலைதளங்களில் பரப்பி வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பூலாம்பட்டி போலீசார் இன்று அதிகாலை பாலுவை கைது செய்து அவரிடம் முதலமைச்சரை பற்றி அவதூறான கருத்துக்களை பரப்பியது தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பாலு சமீபத்தில் தி.மு.க.விலிருந்து விலகி பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
- முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.
சேலம்:
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். காவல் அதிகாரிகளுக்கு சுதந்திரம் இல்லாததால் அவர்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
* தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது.
* ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.
* ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.
* தமிழ்நாட்டில் கொலைகள் நடக்காத நாளே இல்லை.
* எங்கு பார்த்தாலும் ரவுடிகளின் ராஜ்ஜியமாக உள்ளது.
* காவல் அதிகாரிகளை மாற்றுவதால் சட்டம் ஒழுங்கை காக்க முடியாது.
* ஓபிஎஸ் அதிமுகவில் இல்லை. அவரை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை.
* முதலமைச்சர் சிறப்பாக செயல்பட்டிருந்தால் சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டிருக்கும்.
* எந்தெந்த துறைகளில் எவ்வளவு கொள்ளையடிக்கலாம் என்பதே இந்த ஆட்சியின் திட்டம் என்று கூறினார்.
- திண்டுக்கல் டிராகன்ஸ் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
- சேலம் அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது.
சேலம்:
8-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
திண்டுக்கல் தனது தொடக்க ஆட்டத்தில் திருச்சியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணியில் ஷிவம் சிங், பாபா இந்திரஜித், பூபதிகுமார், விமல்குமார் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.
பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர், வி.பி.தீரன், விக்னேஷ் ஆகியோர் உள்ளனர்.
சேலம் தனது தொடக்க ஆட்டத்தில் மதுரையிடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை எதிர்நோக்கி இருக்கிறது. அந்த அணியில் கவின், அபிஷேக், விஷால் வைத்யா, ஹரீஷ்குமார், சன்னி சந்து, பொய்யாமொழி, விவேக் ஆகிய வீரர்கள் உள்ளனர்.
- கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும்.
- ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:
கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் அங்குள்ள கிருஷ்ண ராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். இன்று அணைக்கு வினாடிக்கு 8,425 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் நீர்மட்டம் 102.80 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 562 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கபினி அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 84 அடியாகும். இன்று அணையின் நீர்மட்டம் 81.89 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,711 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இந்த அணையில் இருந்து விநாடிக்கு 2,292 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த 2 அணைகளில் இருந்தும் 2,859 கன அடி நீர் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கன அடி அதிகரித்துள்ளது. இங்கு நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் நடைபாதை, மீன் அருங்காட்சியகம், முதலைப் பண்ணை, தொங்குப்பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தும், காவிரி ஆறு, மெயின் அருவி, சினிபால்ஸ உள்ளிட்ட இடங்களில் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 1,465 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,832 கன அடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து சிறிது குறைந்து 2,149 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 39.76 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 40.05 அடியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 40.22 அடி உயர்ந்தது. அணையில் 12.20 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
இனிவரும் காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் மளமளவென அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.






