என் மலர்tooltip icon

    சேலம்

    • சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
    • இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு வருகிற 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி கள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் என 1500-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாவட்டத்தில் ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

    இப்பள்ளி, கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் மாண வர்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள், கைடுகள் மற்றும் எழுதுப் பொருட்கள், புத்தகப் பை, டிபன் கேரியர்கள் போன்றவை விற்பனையும் களை கட்ட தொடங்கி யுள்ளன.

    சேலத்தில் உள்ள ஸ்டேஷ னரி கடைகளில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட பகுதி களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நோட்டு புத்தகங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், இவற்றின் விலை கடந்த ஆண்டை விட 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்டு புத்தகங்கள் மட்டு மின்றி உரைநடை (கைடு) புத்தகங்கள் விலையும் உயர்ந்துள்ளது. விலை குறைவாக உள்ள உரைநடை நூல்கள், நோட்டு புத்தகங்களில் உள்ள தாள்களின் தரம் சற்று குறைவாகவே இருப்பதால் பெற்றோர்கள் விலை அதிகம் உள்ள நோட்டு புத்தகங்கள், கைடுகள் ஆகியவற்றை வாங்கிச் செல்கின்றனர். 

    • ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது.
    • மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

    சேலம்:

    ஏற்காடு பகுதியில் விளிம்பிப்பழம் என்ற ழைக்கப்படும் நட்சத்திர பழம் விளைச்சல் அதிக ரித்துள்ளது. தனியார் தோட்டங்களிலும், சாலை யோரத்திலும் பரா மரிக்கப்பட்டு வரும் விளிம்பு மரங்களில் இருந்து இந்த பழங்கள் கிடைக்கிறது.

    மே மாதம் முதல் 3 மாதங்கள் வரை மகசூல் கிடைக்கிறது. மரத்தில் தானாக பழுத்து கீழே விழும் பழங்களை சேகரித்து விற்பனைக்காக வியாபாரி கள் சேலத்திற்கு கொண்டு வருகின்றனர்.

    மருத்துவ குணம்

    மருத்துவ குணம் அதிகம் கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் பி,சி மற்றும் பொட்டாசியம், இரும்பு சத்து, நார்சத்து உளளது. இப்பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது.

    இந்த பழம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்ப டுகிறது. ஏற்காடுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த பழத்தை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    • சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது.

    சேலம்:

    தமிழ்நாடு தீயணைப்புத்துறையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிக்கு நவீன வாகனங்கள், கருவிகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தீயணைப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் அதிநவீன கருவிகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணியையும், மீட்பு குழுவினருக்கு தொடர் பயிற்சிகள் அளிப்பதையும் அதிகாரிகள் மேற்ெகாண்டுள்ளனர்.

    2 நவீன வாகனங்கள்

    அந்த வகையில், சேலம் மாவட்டத்துக்கு ரூ.1.8 கோடி மதிப்புள்ள 2 நவீன தீயணைப்பு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த நவீன வாகனங்கள் தலா 12 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு பிடிக்கக்கூடியது. வழக்க மாக உள்ள தீயணைப்பு வாகனங்கள் 4,500 லிட்டர் தண்ணீர் பிடிக்கக்கூடிய தாக உள்ளது.

    அதனுடன் இந்த வாக னங்களை சேர்த்துள்ளதால் பெரிய அளவில் பற்றி எரியும் தீயை வேகமாக கட்டுப்படுத்த இயலும். இந்த புதிய வாகனத்தில் ஒளிரும் விளக்குகள் உள்ளன. இரவு நேரத்தில் தீயணைப்பு வாகனம் விரைந்து செல்ல ஏதுவாக வடிவமைத்துள்ளனர்.

    தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்காக 100 அடி தூரத்திற்கு குழாய் இருக்கி றது. இவ்வகை வாகனத்தை இயக்கி தீயை கட்டுப்படுத்து வது மிக எளிது. அதனால், இந்த வாகனத்தை பயன்ப டுத்த தீயணைப்பு வீரர்க ளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    • சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது.
    • லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகள், தினசரி காய்கறி மார்க்கெ ட்டுகள், சேலம் லீபஜார் மார்க்கெட் ஆகியவற்றுக்கு பெரிய வெங்காயம் மேட்டுப்பாளை யம், பெங்களூரு, மகா ராஷ்டிரா, குஜராத் மாநி லங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

    3 மாதங்கள் வரை அழுகாமல் இருக்க நன்கு உலர்த்தப்பட்டு, ஈரத்தன்மை எதுவும் இல்லாதபடி குடோன், குளிர்பதன கிடங்குகளில் பதப்படுத்தப்ப டுகிறது. ேம, ஜூன் மாதங்க ளில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகள் அதிகளவில் வெங்காயத்தை இருப்பு வைப்பர்.

    சுட்டெரிக்கும் வெயில்

    தற்போது சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை, இரவில் மழை பெய்கிறது. இதனால் குடோன்களில் இருப்பு வைத்த வெங்காயம், மழைநீர், குளிர் காற்றால் விரைவில் அழுகும் நிலையை எட்டி விடுகிறது.

    அத்துடன் லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்க ளில் எடுத்து வரப்படும் வெங்காயம் வரும் வழியில் மழையில் நனைந்து விடுவ தால் விரைவில் அழுகி விடுகின்றன.

    இப்படி அழுகும் வெங்கா யத்தை அப்புறப்ப டுத்த செலவு செய்ய வேண்டும் என்பதால், ஒரு சில வியா பாரிகள் சேலத்தில் லீபஜார் சாலை, சூரமங்கலம் பிரதான சாலை, செவ்வாய்ப்பேட்டை ஆகிய இடங்களில் கொட்டி விடுகின்றனர். பருவ நிலை மாற்றத்தால் வெங்காயம் விரைவில் அழுகி விடுவதால் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    • சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.
    • பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு வந்த போது, காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டு இருந்தது.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 34), பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், நேற்று சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் காருக்கு வந்த போது, காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப் திருடப்பட்டு இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிகு மார், சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் காரை உடைத்து லேப்டாப்பை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிராவில் மர்ம நபரின் உருவம் ஏதும் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் தீவிர ஆய்வு நடத்தி வருகிறார்கள். 

    • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஊ.மாரமங்கலம் ஊராட்சி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26 ). இவர் ஓமலூர் அருகே உள்ள பஞ்சகாளிப்பட்டி பகுதியில் பட்டு நெசவுத் தொழில் செய்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொ டுமை செய்தார். இதுபற்றி ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யபப்ட்டது.

    புகாரின் பேரில் மணி கண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடு வதை அறிந்த மணிகண்டன் இரவு நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டுவிட்டு சிறுமியின் அக்கா 19 வயது பெண்ணை கூட்டி சென்றார்.

    இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர்களுக்கு அடைகலம் கொடுத்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதனிடையே தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதாக அறிந்து அங்கு சென்ற போலீசார் பார்த்தபோது மணிகண்டன் நெசவு தொழிலில் செய்து வருவ தும், அவருடன் சென்ற சிறுமியின் அக்காள் அதே பகுதியில் தனியார் கம்பெ னிக்கு வேலைக்கு செல்வ தும் இருவரும் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்துவதும் தெரிய வந்தது.

    இருவரையும் அழைத்து வந்த போலீசார் மணி கண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் சிறையில் அடைத்த னர். இளம்பெண்ணை அவர்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். சம்ப வம் நடைபெற்று 11 மாதங்க ளுக்கு பிறகு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது.
    • இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது.

    வாழப்பாடி:

    வாழப்பாடியில் பழு டைந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அப்புறப்படுத்தி விட்டு, கீழ்தளத்தில் பயணி கள் நிழற்குடை, பேருந்து தள மேடை வசதிகளும், மேல் தளத்தில் வணிக வளாகம், சிறு வியாபாரக் கடைகள் மற்றும் நடை மேடையுடன், ஒருங்கி ணைந்த நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.8.70 கோடி செலவில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம் 2 ஆண்டுகளுக்கு முன் செயல்படுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களால் ஆமை வேகத்தில் நடை பெற்று வந்த பேருந்து நிலைய கட்டுமானப்பணி கள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    வாழப்பாடி பேருந்து நிலையத்தின் நுழைவு வாயி லில், டாக்டர் அம்பேத்கர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகி யோரது முழு உருவ சிமெண்ட கான்கிரீட் சிலை கள் உள்ளன. தலைவர்களின் சிலைகள் அமைந்துள்ள பகுதியில் தான், நவீன ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்குள் பேருந்துகள் வந்து செல்ல நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள் ளது.

    எனவே, இந்த சிலைகளை அகற்றி வேறு இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம், சிலைகளை அமைத்து பாராமரித்து வரும் அரசியல் கட்சியினரை கேட்டுக்கொண் டது. இது குறித்து வாழப்பாடி தாசில்தார் தலைமையில் கடந்த மார்ச் 10–ந்தேதி அமைதிக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், சிலைகளை வேறு இடத்தில் மாற்றுவது குறித்து இது வரை இறுதி முடிவு எடுக்கப் படவில்லை.இதனையடுத்து, வாழப்பாடி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலை மையில், நேற்று மீண்டும் அனைத்துக்கட்சி நிர்வாகி கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் அமைதிக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால், வருவாய் ஆய்வாளர் கார்த்திக், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல், தேசிய நெடுஞ்சா லைத்துறை, நெடுஞ்சா லைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் த.மா.கா. வி.எம்.சொக்கலிங்கம், அ.தி.மு.க. என்.சிவக்குமார், தி.மு.க. சேட்டு ஆறுமுகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முல்லைவாணன், காங்கிரஸ் எம்.கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால் திறப்பு விழா நடத்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி பெற்று, கடலுார் பிரதான சாலையோரத்தில் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மற்றும் மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்க கட்டடத்திற்கு அருகில், 3 சிலைகளையும் மாற்றி அமைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர்.
    • சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவமனை சிகிச்சையாக அனுமதிக்கப்பட்டார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள தாரமங்கலம் அருகே துட்டம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் கோனேரி வளவு என்ற பகுதியில் தாபா ஹோட்டல் நடத்தி வருகிறார், மேலும் ஆட்டோ கன்சல்டிங் தொழிலும் செய்து வருகிறார்.

    இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தாரமங்கலம் நகர செயலாளர் சக்தி உள்ளிட்ட 3 பேர் தாபாவிற்கு சென்று மது அருந்த வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு மது அருந்த அனுமதி இல்லை என சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சக்தி உள்ளிட்ட 3 பேரும் போன் செய்து உறவினர்களை வரவழைத்தனர். பின்னர் சந்திரசேகரை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் கூச்சல் போட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர் ஓமலூர் அரசு மருத்துவ மனை சிகிச்சையாக அனு மதிக்கப்பட்டார். ஓட்டல் உரிமையாளரை கும்பல் தாக்கும் சி.சி.டி.வி. காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்த புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சக்தி, அவரது சகோதரர்கள் அருள் மற்றும் அஜித் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே 3 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக் கூறி ஓட்டல் உரிமையாளர் சந்திரசேகரனின் உறவினர்கள் ஓமலூர் டி.எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து டி.எஸ்.பி. சங்கீதா, தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள 3 பேரையும் தீவிர மாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஓமலூர், தாரமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

    பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.

    அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.

    3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.

    அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.

    பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பெங்களூருவில் இருந்து வந்த பஸ்களை நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது ஓமலூர் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசு பேருந்திலிருந்து இறங்கி சென்றனர். அப்போது அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராஜன் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கைதானவர்கள் சங்ககிரி தாலுகா அரசிராமணி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற ஆனந்தராஜ், அதே பகுதியைச் சேர்ந்த பூபதி ராஜா, சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த பூபதி என தெரிய வந்தது. மேலும் விசாரணையில் ஆனந்தராஜ் ஆந்திர மாநிலத்தில் இருந்து பலமுறை கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக அவர் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்கு இருப்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் ஆட்களை வைத்து ஆந்திராவில் இருந்து யாருக்கும் சந்தேகம் வராதபடி பஸ்களில் கஞ்சாவை கடத்தி வந்து ஓமலூர் எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவர்கள் 3 பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஓமலூர் அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 200 கிலோ கஞ்சா கடத்தி வந்து குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில், தொடர்ந்து தற்போது 21 கிலோ கஞ்சா கடத்தி வந்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.
    • தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிகடை பகுதி யில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்யப் படுவதாக ஏற்காடு போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் சோதனை செய்ததில் வெள்ள கடை கிராமத்தை சேர்ந்த அசோக் குமார் (வயது 40), கோவில் மேடு பகுதியை சேர்ந்த பவுல்ராஜ் (49) ஆகிய இரு வரும் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து, ஏற்காடு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து லாட்டரி விற்ற இருவரையும் கைது செய்தனர்.

    • பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    • ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை யான இக்கோவில் தேர், ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது. மிகுந்த ஆர்வத்தோடு வடம் பிடித்த பொதுமக்களும் பக்தர்களும் ராஜ வீதிகளில் வெள்ளோட்டம் நடத்தினர்.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், வெகு விமரிசையாக தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஊர் பெரியதனக்காரர்கள் தெரிவித்தனர்.

    ×