என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை

    கீழக்கரை பி.எஸ்.எஸ். ஜெ.நாடார் மெட்ரிக் பள்ளி 26-ம் ஆண்டு விழா, விளையாட்டு, பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் 18 மாணவ- மாணவிகளுக்கு நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் பட்டம் வழங்கினார்.

    நாடார் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் களரி குகன், கீழக்கரை வட்டகை நாடார் ஜனோபகார சங்க தலைவர் ஜெயமுருகன், துணைத்தலைவர் கோவிந்தராஜ், பொதுச்செயலாளர் நாகராஜன், துணை செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் விஸ்வநாதன், நாடார் மகாஜன சங்க நகர் தலைவர் மணிகண்டன், நாடார் மகாஜன சங்க மாவட்ட மகளிரணி தலைவர் பாப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விளையாட்டு விழாவில் கீழக்கரை நகராட்சி துணைத்தலைவர் வழக்கறிஞர் வி.எஸ்.ஹமீது சுல்தான், தேவகோட்டை தி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் பவுலியன்ஸ், சரவணன், திருப்புல்லாணி முத்தரையர் சங்க தலைவர் முனியசாமி, வீரமுத்தரையர் சங்கத்தலைவர் செல்வம், தாளாளர் இளையராஜா, கல்வி குழு தலைவர் சுந்தரம், முதல்வர் உமா லிங்கேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்ததன. இதில் ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    • செய்யது அம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது.
    • ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யதம் மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடந்தது. தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் டாக்டர் பழனிச்சாமி 821 இளங்கலை பட்டம் முடித்த மாணவ- மாணவிகளுக்கும், 89 முதுகலை பட்டம் முடித்த மாணவ மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.

    செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பி னர்கள் டாக்டர் செய்யதா அப்துல்லா, செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர். முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.அழகப்பா பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்ற செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் 5 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது.

    இதேபோல் பல்கலைக்கழக அளவில் முதல் 10 ரேங்குக்குள் பெற்ற 52 மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.விழா ஏற்பாடுகளை செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் செய்திருந்தார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள விருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    ராமநாதபுரம்

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ்கான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் மறைந்த சயீத் சாஹிப் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில் நினைவு தின உறுதி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு நகரத் தலைவர் நவாஸ்கான் தலைமையில் நடக்கிறது. நகரச் செயலாளர் ஹாஜா குத்பு வரவேற்கிறார். மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக்,எஸ்.டி.டி.யு. மாவட்டத் தலைவர் காதர்கனி, ராமநாதபுரம் மேற்கு தொகுதி செயலாளர் அக்பர் அலி, விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்ட தலைவர் ரம்ஜான் பீவி முன்னிலை வகிக்கின்றனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பெரியபட்டினம் ரியாஸ் கான், பொதுச் செயலாளர் அப்துல் ஜமீல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ேபசுகின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நினைவேந்தல் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் கட்சியின் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகி கூறி உள்ளார்.
    • மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் காசிநாத துறை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டுத்துறையிலும் இந்தக் கல்வி ஆண்டிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

    இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் இயற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்து விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்தார்.

    அவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளியேறி விட்டனர். அவர்களை மீண்டும் விளையாட்டு துறைகளில் நியமிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையிலும் யோகா போட்டியை சேர்க்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் யோகா கல்விக்கு தனி கவனம் செலுத்தி யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சி யாளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தனர். அதை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டும்.

    எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பட்சத்தில் ஜூன் 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • கடலாடி யூனியன் துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் ஜெய ஆனந்தன், துணை சேர்மன் ஆத்தி, முன்னாள் யூனியன் தலைவர் முனியசாமி பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் குமரையா முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கிய வுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் யூனியன் தலைவரிடம் தமிழக அரசு மீது அவதூறாகபொய் பிரசாரம் செய்யும் துணை தலைவர் ஆத்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    மனுவை பரிசீலிப்பதாக ஆணையாளர் கூறியதன் அடிப்படையில் கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்ந்தனர். பின்பு நடந்த விவாதம் வருமாறு:-

    கவுன்சிலர் மாய கிருஷ்ணன்: ஓரிவயல், மாரந்தை, வேப்பங்குளம், பகுதிகளில் உள்ள ஊரணி களில் படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் குமரையா: கீழச்செல்வனூர் கிராமத்தில் இருந்து நொண்டி கருப்பணசாமி கோவில் செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் பிச்சை: ஏர்வாடி பகுதியில் கோடை காலம் நெருங்குவதால் காவிரி கூட்டு குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முருகலட்சுமி மலைராஜ்: ஏர்வாடி தர்கா பகுதியில் இருந்து சடைய முனியன் வலசை கிராமம் வரை தார்சாலை அமைக்க வேண்டும். சின்ன ஏர்வாடி, ஆதஞ்சேரி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    கவுன்சிலர் ஜெயச்சந்திரன்: மீனங்குடி, கருங்குளம், கடுகு சந்தை ஊராட்சி பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கவுன்சிலர் ராஜேந்திரன்: சிறைக்குளம் கவுன்சிலுக்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி கூட்டு குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும்.

    கவுன்சிலர் நரிப்பையூர் முருகன்: நரிப்பையூர் ஊராட்சி மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். மாணிக்க நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பாரதமாதா பள்ளி செல்ல தார் சாலை அமைக்க வேண்டும்.

    கவுன்சிலர் சேது பாண்டியன்: பீ.கீரந்தை தொடக்கப்பள்ளிக்கு செல்லும் சாலையில் பேவர் பிளாக் அமைக்க வேண்டும். கொத்தங்குளம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல தார் சாலை அமைக்க வேண்டும். சேரந்தை கிராமத்தில் உள்ள ஊரணியில் படித்துறை அமைக்க வேண்டும்.

    துணை சேர்மன் ஆத்தி: கன்னிராஜபுரம் ஊராட்சி ரோச்மாநகர் கிராமத்தில் அங்கன்வாடி அமைக்கப்பட்டு 7 வருடம் ஆகியும் அந்த கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்க வில்லை. இதுகுறித்து மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இதேபோல் கவுன்சிலர்கள் பார்வதி ஜெயபாலன், குஞ்சரம் முருகன், பானுமதி ராம மூர்த்தி, செய்யது ராவியா, ஞானம்மாள், மகேசுவரி சக்திவேல் உள்ளிட்ட பலர் கோரிக்கை களை மனுக்களாக அளித்தனர்.

    கவுன்சிலர்கள் கொடுத்த கோரிக்கைகள் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலாடி யூனியன் தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தெரிவித்தார்.

    • மக்கள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்று தலைவர் செஹானஸ் ஆபிதா உறுதியளிக்கப்பட்டது.
    • கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர் மன்ற கூட்டரங்கில் நகர சபை தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகரசபை துணைத்தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான் மற்றும் வார்டு உறுப்பி னர்கள் முன்னிலை வகித்த னர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள 1 கோடி தகுதி வாய்ந்த குடும்ப தலைவி களுக்கு மாதந்தோ றும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திதற்கு 2023-24-ம் ஆண்டில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசின் திராவிட மாடல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி யதற்கு நகர்மன்றத்தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:-

    14-வது வார்டு உறுப்பினர் முஹம்மது ஹாஜா சுகைபு:- புதிய பஸ் நிலையம் பின்புறமாக கழிப்பறைகள் சேதம் அடைந்துள்ளதால் மது பிரியர்கள் மற்றும் சமூக விரோதிகள் அதை தவறாக பயன்படுத்துவதால் உடனடியாக கழிப்பறையை சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    18-வது வார்டு உறுப்பினர் ஷக்கீனா :- எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பேவர் பிளாக் கற்கள் போடப்பட்டு ஒரு இடத்திற்கு மட்டும் கற்கள் போடாததால் அந்தப்பகுதி மக்கள் என்னிடம் பலமுறை கேள்வி கேட்டு வருகின்றனர். நான் நகர் மன்றத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் இன்று வரை சரி செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஆகையால் உடனடியாக கற்கள் போட்டு தர வேண்டும் என்றார்.

    20-வது வார்டு உறுப்பி னர் சேக் உசைன்:- கீழக் கரை ஊருக்குள் வரக்கூடிய வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். எங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதி யில் முறையாக கால்வாயை சீர் செய்வதற்கு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    24-வது வார்டு உறுப்பினர் சித்திக் :- எங்கள் வார்டுக்குட்பட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினைகள் அதிகம் காணப்படுவதால் முறையாக குடிநீர் வழங்க வேண்டும். வெளிப்பகுதியில் கால்வாய் நீரோட்டம் அதிகரித்து வருவதால் அதை சரி செய்வதற்கு எங்கள் பகுதியில் முறையாக குழாய்கள் அமைத்து தர வேண்டும் என்றார்.

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்து மக்கள் நலத்திட்டங்கள் நிறைவேற்றி தரப்படும் என்று தலைவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகராட்சி பொறியாளர் அருள், நகராட்சி அலுவ லர்கள் வார்டு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்திய அரசுகக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    • அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ராமநாதபுரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கு ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்ச ருக்கும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சி யாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ராமநாதபுரம் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச் சருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரம் விரை வாக வளர்ச்சி அடையவும், பல புதிய தொழில்கள் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்துவோம் என்று மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பேட்டியளித்துள்ளார்.
    • பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட பா.ஜனதா புதிய தலைவராக தரணி முருகேசன் பொறுப் பேற்றுக் கொண்டார்.

    ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி இயற்கை வேளாண் விவசாயியும், தரணி வேளாண் ஆராய்ச்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் தலைவரும், மாவட்ட பா.ஜனதா பொருளாளருமான தரணி முருகேசனை ராமநாதபுரம் புதிய மாவட்ட தலைவராக மாநில தலைவர் அண்ணா மலை நியமித்தார். இதனை தொடர்ந்து நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தரணி முருகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடியின் சாதனைகளால் இந்தியா வல்லரசு நாடாக திகழ்ந்து வருகிறது. மத்தியில் மட்டுமின்றி பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகி றது. அகில இந்திய அளவி லும் அசைக்க முடியாத சக்தியாக பா.ஜனதா விளங்கி வருகிறது.

    அதேபோல தமிழகத்தில் மாநில தலைவர் அண்ணா மலையின் செயலாற்றல் காரணமாக பா.ஜனதா எழுச்சியுடன் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது.மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்திலும் தாமரை சின்னமும், பா.ஜனதா கொடியும் சென்றடைந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தில் பா.ஜனதா சிறப்பான வளர்ச்சி கண்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கைப்பற்ற கூடிய அள விற்கு எங்களின் கட்சிப் பணியும், செயல்பாடும் அமையும்.

    அனைத்து சமுதாய மக்களின் ஆதரவைவும் பெறுவதற்கு தீவிரமாக பணியாற்றுவோம். மூத்த நிர்வாகிகள், முன்னோடி களின் ஆலோசனையும் பெற்று அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்வோம்.

    எந்த தேர்தல் நடை பெற்றாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் அளவிற்கு கட்சியை வலுப்படுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 14 மனுக்களில் 12 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

    2 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கண்கண்ணாடி வாங்குவதற்கான மானியம் தலா ரூ.4 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி ஆணையர் மதியழகன், கண்காணிப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் படை வீரர் நல வாரிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அமைந்துள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவையொட்டி பூக்குழி வைபவம், பால்குடம் எடுத்தல், சாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • ரூ.2.87 லட்சத்திற்கு மிளகாய் வத்தல் விற்பனை செய்யப்பட்டது.
    • உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டில் உள்ள முதுகுளத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மிளகாய் வத்தல் ஏலம் நடந்தது. ஏலத்தில் முதுகுளத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் உள்ள விவசாயிகள் 13 பேர் தாங்கள் கொண்டு வந்த 16.7 குவிண்டால் மிளகாய் வத்தலை ஏலத்திற்கு வைத்தனர். இதனை அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.19 ஆயிரத்து 200-க்கும், குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.16ஆயிரத்து 500-க்கும் ஒட்டுமொத்தமாக ரூ.2 லட்சத்து 87 ஆயிரத்து 598க்கு விற்றனர்.

    இந்த ஏலம் குறித்து ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா பேசுகையில், இனிவரும் காலங்களில் விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு தங்கள் வேளாண் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்க வரும் போது உள்ளூர் வணிகர்களுடன் வெளியூர்களிலிருந்தும் வணிகர்களை வரவழைத்து ஏலத்தில் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    இந்த வசதியை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி விளை பொருட்களை லாபகரமான விலைக்கு விற்று பயனடையலாம் என்றார்.

    முதுகுளத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் நூர்ஷிபா, இ-நாம் திட்ட பணியாளர்கள் இந்த ஏலத்தின் போது உடனிருந்தனர்.

    ×