என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா
    X

    திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா

    • திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நயினார்கோவிலில் அமைந்துள்ள ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரவுபதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருவிழாவையொட்டி பூக்குழி வைபவம், பால்குடம் எடுத்தல், சாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×