search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yoga Teachers"

    • யோகா ஆசிரியர்கள் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது.
    • சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்.

    கடலூர்:

    தமிழ்நாடு யோகா ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு யோகா ஆசிரி யர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிதம்பரம் கீழரத வீதி பதஞ்சலி யோகா மையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச் செயாளர் காசிநாத துரை தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர வடிவேல், சுந்தரராஜன், கென்னடி, கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, ஹெலன், மயிலாடு துறை மாவட்ட பொறுப் பாளர்கள் திருமுருகன், மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். பின்னர் மாநில பொதுச் செயலாளர் காசிநாததுரை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரி. அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆகியவற்றில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சி யாளர்களை இந்த கல்வி ஆண்டிலேயே நியமிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாரார நிலையத்தில் யோகா பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றி தர வலியுறுத்தி வருகின்ற ஜூன் 20-ந்தேதி சென்னை யில் மாபெரும் பேரணி நடந்த திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்

    • அரசு பள்ளி, கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று நிர்வாகி கூறி உள்ளார்.
    • மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் காசிநாத துறை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகளில், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். விளையாட்டுத்துறையிலும் இந்தக் கல்வி ஆண்டிலேயே நியமிக்கப்பட வேண்டும்.

    இந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் யோகா ஆசிரியர்களை நியமிக்க தீர்மானம் இயற்றி தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி, அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளிலும் யோகா ஆசிரியர் நியமிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அனைத்து விளையாட்டு துறையிலும் யோகா பயிற்சியாளர்களை தற்காலிக பணியாளர்களாக நியமித்தார்.

    அவர்கள் தற்போது அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வெளியேறி விட்டனர். அவர்களை மீண்டும் விளையாட்டு துறைகளில் நியமிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டுத் துறையிலும் யோகா போட்டியை சேர்க்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் யோகா கல்விக்கு தனி கவனம் செலுத்தி யோகா ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 13 ஆயிரம் யோகா பயிற்சி யாளர்கள் நியமிக்கப்படும் என்று அறிவித்தனர். அதை இந்த ஆட்சி நிறைவேற்ற வேண்டும்.

    எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் நிராகரிக்கும் பட்சத்தில் ஜூன் 20-ந் தேதி சென்னையில் பேரணி நடத்தி சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாநிலத் தலைவர் ஷாஜகான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள 448 சிறைக்கைதிகள் விடுதலையான பிறகு யோகா ஆசிரியர்களாக பணிபுரிய உள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #Yoga
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் ‌ஷர்னபூர் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இங்கு கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யோகா குரு பாரத்பூ‌ஷன் வழி காட்டுதலின் பேரில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அதற்கான ஏற்பாடுகளை ஜெயில் சூப்பிரண்டு டாக்டர் விரேஷ்ராஜ் சர்மா செய்துள்ளார். கைதிகளுக்கு தினமும் யோகாசன பயிற்சி வகுப்புகளும், செய்முறை விளக்கமும் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலை ஆனதும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவர்களை யோகா ஆசிரியர்களாக்க கடும் பயிற்சி அளிக்கப்பட்டது.


    அதில் 448 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடுதலையானதும் இவர்கள் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றுவார்கள்.

    இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு டாக்டர் விரேஷ்ராஜ்சர்மா கூறும் போது, “நான் கைதிகளுடன் அவர்களது எதிர்காலம் குறித்து பேசினேன். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என விரும்பினேன். எனவே அவர்கள் விரும்பினால் யோகா கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன்.

    அதை ஏற்று அவர்களில் 449 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். தற்போது அவர்கள் யோகா பயிற்சியில் முழு திறமையும் பெற்று விட்டனர். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணி புரிவார்கள்” என்றார்.

    லக்னோ சிறையிலும் இதே பாணியில் கைதிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு கொலைக் கைதி கிருஷ்ணானந்த் டிவேடி யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். #Yoga
    ×