search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Grievance Meeting"

    • முன்னாள் ராணுவத்தினருக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) ராஜசேகரன் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், கடந்த கூட்டத்தில் பெறப்பட்ட 14 மனுக்களில் 12 மனுக்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

    2 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளது. தற்பொழுது 13 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இந்த மனுக்கள் மீது தொடர்புடைய அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தொடர்ந்து முன்னாள் படைவீரர் 2 பேருக்கு கண்கண்ணாடி வாங்குவதற்கான மானியம் தலா ரூ.4 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார். இதில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி ஆணையர் மதியழகன், கண்காணிப்பு அலுவலர் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் படை வீரர் நல வாரிய செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.
    • தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் வருகிற 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×