search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சருக்கு வர்த்தக சங்கம் நன்றி
    X

    முதல்-அமைச்சருக்கு வர்த்தக சங்கம் நன்றி

    • ராமநாதபுரம் மாநகராட்சியாக விரைவில் தரம் உயர்த்திய அரசுகக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
    • அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் ராமநாதபுரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கு ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச்ச ருக்கும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரம் வர்த்தக சங்கத்தினர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் வர்த்தக சங்கம் சார்பில் ராமநாதபுரம் நகராட்சியை மாநகராட்சி யாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுக ளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் ராமநாதபுரம் மாநகராட்சி யாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்த தமிழ்நாடு அரசுக்கும், முதல்-அமைச் சருக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    மாவட்ட தலைநகராக உள்ள ராமநாதபுரம் விரை வாக வளர்ச்சி அடையவும், பல புதிய தொழில்கள் தொடங்கவும், அதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும், அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கவும் இந்த அறிவிப்பு உதவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×