என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 27-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28-ந்தேதி பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும்
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம் புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை பொது அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் பழைய பஸ் நிலையம், கீழராஜா வீதி, பிருந்தாவனம், பால் பண்ணை, அரசு மகளிர் கலைக்கல்லூரி, புதிய பஸ் நிலையம் வழியாக மீண்டும் பொது அலுவலக வளாகத்தை வந்தடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் 800-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோரும் ஓடினர்.
இதைதொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு தேர்தல் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 77.37 சத வீதமும், 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது 76.45 சத வீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளின் படி வாக்காளர்கள் அனைவரும் விடுபடாமல் வாக்களிப்பதை வலியுறுத்தி அனைத்து தாலுகாக்களிலும் ஊர்வலங்கள், இருசக்கர வாகன ஊர்வலம், மனித சங்கிலி, துண்டு பிரசுரங்கள், பதாகைகள், சுவரெட்டிகள் ஆகியவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது முதல் 21 வயது வரையிலான வாக்காளர் களின் வாக்குப்பதிவை அதி கரிக்கும் விதமாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி, கோலப்போட்டி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது. வாரச்சந்தை, தினசரி சந்தை, வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து வங்கி ஏ.டி.எம். மையங்களிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. எனவே வாக் காளர்கள் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தலின் போது தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துறவிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் நீலகண்டன் மனைவி நடாயி (வயது 42). பிச்சை எடுக்கும் தொழில் செய்து வரும் அவர், கிடைக்கும் வருமானத்தில் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர் நேற்று காலை அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம் ஒரு மது பாட்டிலில் இருந்து மது அருந்தியுள்ளார். பின்னர் அவர் தான் மடியில் வைத்திருந்த ஒன்றரை வயது கைக்குழந்தையின் வாயில் மதுவை ஊற்றியுள்ளார். இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அறந்தாங்கி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் வந்து நடாயியையும், குழந்தையையும் மீட்டு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் புதுக்கோட்டை சைல்டுலைன் திட்ட இயக்குனர் லில்லிக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சைல்டுலைன் பணியாளர்கள் ரஞ்சிதா, முருகேஸ்வரி ஆகியோர் வந்து, மது போதையில் இருந்த நடாயியையும், ஒன்றரை வயது குழந்தையையும் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரித்து வருகின்றனர். அறந்தாங்கியில் ஒன்றரை வயது குழந்தைக்கு தாயே மது கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் தற்போது மதுபானம் பெட்டிக்கடைகளில் கூட சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. இதுகுறித்து மது விலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் கண்டுகொள்வதில்லை.
அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்களில் மதுவிற்பனை தீவிரமாக நடந்து வருகிறது. 24 மணி நேரமும் மதுபானம் தடையின்றி கிடைப்பதால், இளைஞர்கள் பலர் மது போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான பெண் ஒருவர் தனது ஒன்றரை வயது குழந்தைக்கு பால் புகட்டுவதற்கு பதிலாக மது புகட்டியது பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.
குழந்தைக்கு மது கொடுத்தது பற்றி நடாயி கூறுகையில், மது அருந்தும் தான் போதையில் மயங்கி விட்டால், ஒன்றரை வயது குழந்தை எங்காவது சென்று விடும் என்பதால், அந்த குழந்தைக்கும் மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி விடுவதாக கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிக்கான வேட்பாளர்கள் கடந்த 23-ந் தேதி நள்ளிரவில் அறிவிக்கப்பட்டனர்.
இதில் சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி சென்னையில் நிருபர்களிடம் கூறிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (நேற்று) மாலை அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
அதன்படி நேற்று மாலை சிவகங்கை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். பின்னர் அவர் கார் மூலம் சிவகங்கை தொகுதிக்கு புறப்பட்டு சென்றார்.

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் தொழில் வளர்ச்சி என்பது எதுவும் இல்லை. எனவே தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து அவர் சிவகங்கை புறப்பட்டு சென்றார். #KartiChidambaram #RahulGandhi #MKStalin
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பட்டுக்கோட்டை சாலையில் எருக்கனகோட்டை பகுதியில் மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.
இங்கு நேற்று இரவு பணியில் சுவாதிராஜன், அருள், கார்த்தி ஆகியோர் இருந்தனர். நள்ளிரவில் அவர்கள் விற்பனை முடிந்ததும் விளக்குகளை அணைத்து விட்டு பங்க் அருகே உள்ள அறையில் தூங்க சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் பெட் ரோல் பங்கிற்கு வந்தனர். அவர்கள் கையில் இரும்பு பொருட்கள் வைத்திருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பங்கின் அலுவலக அறை கண்ணாடிகளை உடைத்தனர்.
அருகில் இருந்த அறையில் தூங்கி கொண்டிருந்த ஊழியர்களுக்கு இது தெரியவில்லை. இதற்கிடையே அந்த மர்ம நபர்கள் அலுவலக அறைக்குள் புகுந்து அங்கு கல்லாவில் இருந்த விற்பனை பணம் ரூ.1½ லட்சம் மற்றும் கம்ப்யூட்டர் சி.பி.யு.வையும் திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இன்று காலை ஊழியர்கள் எழுந்து பார்த்தபோதுதான் கொள்ளை நடந்திருப்பதை உணர்ந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் அறந்தாங்கி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதேபோல் அறந்தாங்கி அருகே ஆவணத்தான் கோட்டை கிராமத்தில் உச்சி மாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நள்ளிரவில் இந்த பகுதியில் மர்ம நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.
உடனே உஷாரடைந்த அவர்கள் திரண்டு சென்று பார்த்தனர். அப்போது அங்கு விழுப்புரம் மாவட்டம் அரசூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை விசாரித்தபோது மது போதையில் இருந்தார். மேலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்.
அதே சமயம் கோவிலில் சென்று பார்த்தபோது அங்கு, உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உடனே இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அறந்தாங்கி போலீசார் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வெங்கடேசனை கைது செய்தனர்.
மேலும் அதே பகுதியில் நடந்த பெட்ரோல் பங்க் கொள்ளையிலும் வெங்கடேசனுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.
அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமிஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls
அறந்தாங்கி:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டி என்ற ஊரை சேர்ந்த மகாலிங்கம், ஆறுமுகம், செல்வம், ராஜசேகர், ராஜேஷ், காளியப்பன், சுந்தரம், செந்தில்குமார் மற்றும் 4 பெண்கள் அடங்கிய ஒரு குழுவினர் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று குறி சொல்லி வந்தனர்.
இந்நிலையில் மாங்குடி கிராமத்திற்கு 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் சென்று, அங்குள்ள பொது மக்களிடம் குறி சொல்லினர்.
பின்னர் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை ஏமாற்றி பணம், மோதிரம், செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொண்டு, ஆவணத்தான் கோட்டைக்கு சென்று விட்டனர்.
இதைத் தொடர்ந்து பணம், நகை, செல்போன் போன்றவற்றை குறிசொல்பவர்கள் பறித்துச் சென்றதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள்ஆவணத்தான்கோட்டைக்கு சென்று, பணம், நகை,செல்போன்களை பறித்துச் சென்றவர்களை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் மீட்கபட்டது.
இது குறித்துஅறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






