search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல்- அதிமுக பிரமுகரிடம் விசாரணை
    X

    புதுக்கோட்டையில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல்- அதிமுக பிரமுகரிடம் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் தேர்தல் அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய ரூ.17.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை அடுத்துள்ள வடுகப்பட்டி பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்தனலட்சுமி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மறித்து அவர் வைத்திருந்த பையில் சோதனையிட்டனர். அப்போது அதில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800 இருந்தது.

    அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தும் போது அவர் வீரடிப்பட்டியை சேர்ந்த அய்யப்பன் என்பதும், அந்த பணத்தை கந்தர்வக்கோட்டையை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் அருள் என்பவரிடம் இருந்து வாங்கி வந்ததாகவும் கூறினார்.

    மேலும் அவர் கூறும்போது, வெளிநாட்டு பணத்தை பண பரிமாற்றம் செய்து, அதனை உரியவரிடம் ஒப்படைத்து கமி‌ஷன் பெறுவதற்காக பணத்தை கொண்டு சென்றதாகவும் கூறினார்.

    இருப்பினும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்ததால் அந்த பணத்தை வருமான வரித்துறையிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அ.தி.மு.க. பிரமுகர் அருளிடமும் விசாரணை நடத்த உள்ளனர். #LSPolls

    Next Story
    ×