search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Narthamalai temple festival"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோவில் திருவிழாவையொட்டி வருகிற 8-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் 8-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக 27-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 28-ந்தேதி பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்படுகிறது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும்

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    ×