என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dsp dispute
நீங்கள் தேடியது "dsp dispute"
அறந்தாங்கி அருகே டி.எஸ்.பி.யிடம் தகராறு செய்து செல்போனில் படம்பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அடுத்த மூக்குடி பொற்குடையார் பகுதியில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முறையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனரா? என அறந்தாங்கி டி.எஸ்.பி. கோகிலா நேற்று இரவு ரோந்து சென்றார்.
அப்போது செல்போன் பேசியபடி ஒருவர் பைக்கில் வந்துகொண்டிருந்தார். இதனைப்பார்த்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த முகமது அலி (வயது 27) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரிடம் செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டக்கூடாது என அறிவுரை கூறினர். அப்போது அவர் தனது செல்போன் கேமராவை வைத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கேள்வியெழுப்பியுள்ளார். அப்போது டி.எஸ்.பி. கோகிலா உள்ளிட்ட அனைத்து போலீசாரையும் படம் எடுத்துள்ளார்.
அதனை தொடர்ந்து டி.எஸ்.பி. கோகிலா அறந்தாங்கி இன்ஸ்பெக்டரிடம் இது குறித்து புகார் செய்தார். போலீசார் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல், அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, முகமது அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X