என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது.
- இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை கடந்த 2 வாரத் துக்கு மேலாக 490 காசுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று என்இசி சார்பில், மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால், நாமக்கல் மண்டலத்தில் முட் டையின் பண்ணை கொள் முதல் விலை 510 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில வாரங்களாக முட்டை உற்பத்தி குறைந்து வருகிறது. புரட்டாசி மாதம் என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டையின் விற்பனை குறைவாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு பண்ணையாளர்கள் முட்டை உற்பத்தியை குறைத்துக் கொண்டனர். தற்போது, புரட்டாசி முடியும் தருவாயில் முட்டையின் விற்பனை திடீரென அதிகரித்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாக கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
- தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
- தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் பால் குளிரூட்டும் நிலையம் எதிரே உள்ள தாபா மற்றும் ரெஸ்டாரண்டுகளில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள தாபா, ரெஸ்டாரண்ட்களில் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பாக தாபா, ரெஸ்டாரண்ட்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.
தொடர்ந்து பொத்தனூர், ஜேடர்பாளையம், செல்லப்பம்பாளையம் பகுதிகளில் செயல்படும் கடைகளிலும் சோதனை செய்தனர். அப்போது உணவு பாதுகாப்பு தணிக்கைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை செய்தபோது சுகாதாரமற்ற முறையில் சாம்பார், சட்னி, குருமா வைத்திருந்த தலா 2 கடைகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பான சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
- அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது.
- வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. மேலும் ஆஸ்பத்திரி முன் பகுதியில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாவதாகவும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு அங்குள்ள ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் பேரூராட்சி பணியாளர்கள் அக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர்.
அப்போது ஆக்கிரமிப் பாளர்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வேலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருவம்மாள் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்களிடமும் ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை காலி செய்ய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆம்புலன்ஸ் வாகனங்களை காலி செய்ய ஒரு நாள் அவகாசம் கேட்டனர். அதன் பேரில் இன்று காலி செய்ய வேண்டுமென போலீசார் அவர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர்.
- நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
- அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த மாதம் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர் உள்பட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள உணவகங்களில் அவ்வப்போது உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் நாமக்கல் நகரப் பகுதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் உணவு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்கள், பேக்கரி மற்றும் இறைச்சிக் கடைகள் என மொத்தம் 45 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் 5 கடைகளில் இருந்து 24 கிலோ சுகாதார மற்ற சிக்கன், மட்டன், மீன் உள்ளிட்ட இறைச்சி மற்றும் பிற உணவு வகைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதுபோல் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்படும். ஓட்டல்களில் சுகாதாரமற்ற இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்.
- பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள் மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கோபால், நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன், நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேற்று முன்தினம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சாலை, பஸ் நிலையம், பள்ளிசாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.
- ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அஜீத் (வயது 18). கூலி தொழிலாளி.
ஆழமான பகுதியில்...
இவர் தனது நண்பருடன் நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அஜித் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துபோது எதிர்பாராத விதமாக ராஜாவாய்க்காலில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
இதை பார்த்த ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இது குறித்து ஜேடர்பாளையம் போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மீனவர்கள் உதவியுடன் பரிசல் மூலம் ராஜா வாய்க்காலில் இழுத்து செல்லப்பட்ட அஜீத்தை நேற்று மாலை வரை தேடினர். இரவு ஆகிவிட்டதால் தேடுதல் பணியை நிறுத்தி விட்டனர்.
2-வது நாளாக
இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை 8 மணி முதல் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீண்டும் மீனவர்கள் உதவியுடன் மீன்பிடி படகுமூலம் அஜீத்தை தீவிரமாக தேடி வந்தனர்.
பிணமாக மீட்பு
அஜீத் குளித்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் கரைேயாரம் தண்ணீரில் காலை 9.15 மணி அளவில் பிணமாக மிதந்தார். இதையடுத்து அவரை உடலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து அவரது உடல் போலீசார் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி பரமத்தி வட்டார வள மையம் சார்பில் பரமத்தி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பயிற்சியை முதுநிலை விரிவுரையாளர் வேலு, வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுபா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இணை இயக்குநர் ராஜேந்திரன் பயிற்சியை பார்வையிட்டு ஆசிரியர்களுக்கு வகுப்பறை செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு படைப்பாற்றல் சிந்தனைகள் வளர்த்தல், அன்றாட வாழ்வியலில் கணக்குகளின் பயன்பாடு, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாணவர்களை அணுகி அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் முறை ஆகியவை குறித்து அறிவுரை வழங்கினார்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் புதிய இணைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியில் 61 தொடக்க நிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகன் ஜெகநாதன் (வயது 32). இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இழுத்துச் செல்லப்பட்டார்
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அவரை ேஜடர்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் உதவியுடன் பரிசல், மீன்பிடி படகு மூலமாக தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தண்ணீரில் மாயமாகி இன்றுடன் 7 நாட்கள் ஆகிறது.
இன்று 7-வது நாளாக தொடருகிறது
இன்றும் 7-வது நாளாக தொடர்ந்து காலை முதல் காவிரி ஆற்றில் மீண்டும் ஜெகநாதனை தேடி வருகின்றனர்.
7 நாட்கள் ஆகியும் ஜெகநாதனை கண்டுபிடிக்க முடியாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர். ஜெகநாதன் என்ன ஆனார்? என்பது குறித்து எந்த தடயங்களும் கிடைக்காததால் போலீசார் செய்வதறியாது உள்ளனர்.
- தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
- இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
எருமப்பட்டி:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் உள்ள வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வள மையம் சார்பில் எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 2-ம் பருவத்திற்கான பயிற்சி வட்டார அளவில் 2 கட்டமாக வட்டார கல்வி அலுவலர் அருண் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி
முதற்கட்டமாக 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3, 4 -ந் தேதி ஆகிய 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. 2-ம் கட்டமாக 4-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5, 6-ந்தேதிகளில் பயிற்சி நடைபெற்றது.
இதில் வட்டார வள மைய பார்வையாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மணிவண்ணன் பயிற்சியினை பார்வையிட்டு எண்ணும் எழுத்தும் பயிற்சி குறித்த சிறப்பு தகவல்களை வழங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி பயிற்சியை கண்காணித்தார்.
புதுமைகள்
இதில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல், துணை கல்விகள் பயன்படுத்தும் உத்திகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளர்களாக எருமப்பட்டி வட்டார ஆசிரியர்கள் செயல்பட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பானுமதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.
- 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
- சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமாரபாளையம் நகராட்சி சொத்து வரி விதிப்பாளர்கள் 2023-2024-ம் ஆண்டிற்கான முதல் அரையாண்டிற்கு சொத்து வரியினை செலுத்துவதற்கான கால அவகாசம் கடந்த 30-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.
சொத்துவரியினை செலுத்த தவறியவர்களுக்கு மாதம் தோறும் ஒரு சதவீதம் அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. எனவே முதல் அரையாண்டு சொத்துவரியினை நகராட்சியில் உடன் செலுத்தி அபராதத்தை தவிர்க்குமாறு தெரிவிக்கபப்டுகிறது.
மேலும் 2-ம் அரையாண்டு சொத்துவரியினை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத சலுகை பெற்றுக்கொள்ளலாம். எனவே சொத்துவரி செலுத்துபவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 சதவீத சலுகையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.
- மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர்.
கொல்லிமலை:
சேந்தமங்கலம் அடுத்த செவிந்திப்பட்டியை சேர்ந்த பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரி ராஜேஷ்கண்ணின் மனைவி மணிமேகலை (29) என்பவர் வீட்டின் வெளியே படுத்து தூங்கி கொண்டிருந்த போது 5 பவுன் தாலிக்கொடியை கடந்த 2016-ம் ஆண்டு மர்ம நபர் ஒருவர் கொள்ளை அடித்து சென்றார்.
சம்பவம் குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் வெள்ளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த மணிகண்டன்(59) என்பவர் திருடியது தெரியவந்தது. எருமப்பட்டி போலீசார் அவரை கைது செய்தனர். அந்த வழக்கு நேற்று சேந்தமங்கலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் விசாரணை நடந்தது. விசாரணையில் மணிகண்டனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.1000 அபராதமும் விதித்து நீதிமன்ற நீதிபதி ஹரிஹரன் தீர்ப்பளித்தார்.
மணிகண்டன் உட்பட அவரது உறவினர்கள் 5 பேர் பல்வேறு வேலைகள் செய்து கொண்டு வீடுகளை நோட்டம் மிட்டு இரவு நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தண்டணை வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் தலைமறைவாக உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
- பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
- போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
பரமத்திவேலூர்:
சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.






