என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூரில் சித்த மருத்துவ முகாம், விழிப்புணர்வு பேரணி
- அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம்.
- பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு சித்த மருத்துவ பிரிவு மற்றும் கபிலர்மலை, பரமத்தி, நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சித்த மருத்துவ பிரிவு இணைந்து நடத்திய இலவச சித்த மருத்துவ முகாம் பரமத்திவேலூரில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டப வளாகத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு வர்த்தக சங்க தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். வர்த்தக சங்க நிர்வாகிகள் மகுடபதி, கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கோபால், நண்பர்கள் குழு தலைவர் கேதாரநாதன், நண்பர்கள் குழு முன்னாள் தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் அரிமா சங்க முன்னாள் ஆளுநர் மோகன் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் மூட்டு வலி, தோல் நோய்கள், சுவாச நோய்கள், மூலம், பெண்களுக்கான மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட நோய்களுக்கு சித்த மருத்துவ டாக்டர்கள் ஆலோசனைகள் வழங்கி இலவசமாக மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
முகாமில் வேலூர் சித்த மருத்துவர் பிரிவு டாக்டர் பிரவேஷ்பாபு, கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார சித்த மருத்துவ பிரிவு டாக்டர் சித்ரா மற்றும் சித்த மருத்துவ டாக்டர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.
பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேற்று முன்தினம் சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து பேரணி தொடங்கி அண்ணா சாலை, பஸ் நிலையம், பள்ளிசாலை வழியாக சென்று மீண்டும் அரசு மருத்துவமனையில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சித்த மருத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்