என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
- சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார்.
நாமக்கல்:
மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர். சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி, அங்கன்வாடி பணியாளர்கள் மாநில உதவி தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.
குறைந்த பட்ச ஊதியம்
ஆர்ப்பாட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். பணிநேரம், பணிளை வரைமுறை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
Next Story






