என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது.
    • ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பயன்ப டுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 2 சக்கரம், 4 சக்கர வாகனங்கள் என 11 போலீஸ் வாகனங்கள் வருகிற 18-ந் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படுகிறது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் 18-ந் தேதி காலை 8 மணி முதல் 9.45 மணிக்குள் முன்பணமாக 5000 ரூபாய் நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். முன் பணத்தொகை செலுத்தும் நபர் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆதார் கார்டு அல்லது ஓட்டுனர் உரிமம் 2 நகல்கள் எடுத்து வர வேண்டும். ஏல வாகனங்களை அக்டோபர் 17-ந் தேதி காலை 10:30 மணி முதல் பார்வையிடலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
    • இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் துறையில் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் தற்போது வலுவடைந்ததின் அடிப்படையில் கழிவு நீக்கம் செய்வதற்காக வரும் 17-ந் தேதி நாமக்கல் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது. இதற்காக கழிவு பொருட்கள் வருகிற 16-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. ஏலத்தில் அரசு விதிகளின் வழிகாட்டுதலுக்கு இணங்க தகுதிச் சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் ஏலத்தில் பங்கேற்று கழிவு பொருட்களை ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகை முழுவதையும் மற்றும் அப்பொருளுக்கு உண்டான ஜி.எஸ்.டி. தொகையுடன் செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

    • சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
    • வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அரவிந்த் (27).

    தற்கொலை

    இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாததிற்கு முன்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதால் அங்கிருந்து பொத்தனூருக்கு வந்து விட்டார்.

    வீட்டிற்கு வந்ததில் இருந்தே அரவிந்த் மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த் வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அரவிந்த் அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு அவர் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அரவிந்தை காப்பாற்றி வேலூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விசாரணை

    இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக வேலூர் அரசு மருத்துவ மனை யில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    ரூ.5 லட்சம்

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 72.32 குவிண்டால் எடை கொண்ட 237 மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.85.69-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.63.33-க்கும், சராசரி விலையாக ரூ.83.60-க்கும் என ரூ.5 லட்சத்து 35ஆயிரத்து 683-க்கு ஏலம் போனது.

    • பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
    • அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2 பேர் கைது

    விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தி வந்த பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தனபால் மகன் பொன்னர் (6), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த அப்பாவு மகன் சக்திவேல் (47 )ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர் பகுதியில் அரிசி வியாபாரிகள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ரேஷன் அரிசி வாங்கி வைத்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களை அணுகி அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவ டிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.
    • புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளன.

    அதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.

    ஒரே குடும்பத்தில் உள்ள ஒரு சிலர் இங்கேயும் தான் சார்ந்த மாநிலத்திலும் ஒரு சிலர் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும், தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரங்களை முழுமையாகப் பெற்று அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட அவர் சார்ந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே இ-ஷ்ராம் போர்டலில் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்கள் உரிய படிவத்தினைப் பூர்த்தி செய்து தொடர்புடைய தாசில்தார் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.
    • மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

    பரமத்திவேலூர்:

    நவராத்திரி விழாவை முன்னிட்டு பரமத்தி வேலூரில் கொலு பொம்மைகள் விற்கப்படுகிறது. ஒரு பொம்மை ரூ.60 முதல் ரூ.750 வரை விற்கப்படுகிறது.

    வருகிற 15-ந் தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது. நவராத்திரி விழாவில் கொலு பொம்மைகள் முக்கிய பங்கு வகிக்கும். நவராத்திரி அன்று அம்மன் சன்னதிகளிலும், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் 9 படிகள் அமைத்து பல விதமாக சாமி பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதே கொலுவாகும். மேலும் பலவிதமான சாமி பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள் கொலு பொம்மைகள் வைப்பது வழக்கம்.

    பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொலு பொம்மை கடைகளில் கொலு பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. இதுகுறித்து கொலு பொம்மைகள் தயாரிக்கும் தொழிலாளி கூறுகையில், கொலு பொம்மைகளை களிமண்ணாலும், காகிதகூழ் மூலமாகவும் தயாரித்து விற்பனை செய்கிறோம். சாய்பாபா, லட்சுமி, கிருஷ்ணர், ராமர், சரஸ்வதி, சீதை, விநாயகர் என 50-க்கும் மேற்பட்ட சாமி பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த பொம்மைகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என கூறினார்.

    • மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர்.
    • சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார்.

    நாமக்கல்:

    மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக் கையை வலியுறுத்தி மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடத்தினர். சங்க தலைவர் சத்யா தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரங்கசாமி, அங்கன்வாடி பணியாளர்கள் மாநில உதவி தலைவர் ஜெயக்கொடி ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கினர்.

    குறைந்த பட்ச ஊதியம்

    ஆர்ப்பாட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் காலதாமதமின்றி வழங்க வேண்டும். பணிநேரம், பணிளை வரைமுறை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை.
    • நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.

    எருமப்பட்டி:

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் தாட்கோ காலனியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (46). இவர்களுக்கு புனிதா(29) என்ற மகளும், கண்ணதாசன்(26) என்ற மகனும் உள்ளனர். புனிதாவிற்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். கண்ணதாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று கண்ணதாசன் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தபோது, உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

    நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த கண்ணதாசன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பெரியசாமி, சாந்தா ஆகியோர் வீட்டின் விட்டத்தில் ஒயரால் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணதாசன் இதுகுறித்து எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி போலீசார் பெரியசாமி, சாந்தாவின் உடல்களை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.

    பெரியசாமிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிக்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இவருடைய மனைவி சாந்தாவுக்கும் கர்ப்பப்பை கோளாறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாந்தா தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக அடிக்கடி வலியால் சாந்தாவும், பெரியசாமியும் அவதிபட்டு வந்தனர்.

    இதனிடையே இவர்களது மகன் கண்ணதாசன் மது பழக்கத்திற்கு அடிமையாகி, அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரின் மருத்துவ செலவிற்கும், குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வந்து பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனால் மனவேதனையில் இருந்த தம்பதி, மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததாலும், நோய் தாக்கத்தாலும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    • ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே பேக்கரி வைத்து நடத்தி வருபவர் ஜெயன் (45). சம்பவத்தன்று இரவு பேக்கரியை மூடிவிட்டு ஜெயன் வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் மறுநாள் காலை வழக்கம் போல் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது கடையில் இருந்த கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதிலிருந்த ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெயன் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கடையின் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர் ஒருவர் கடையின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவிலிருந்த பணத்தை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

    இந்த பதிவுகளை வைத்து பேக்கரியில் திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தளிர்விடும் பாரதம் சமூக சேவை குழு இணைந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாசு கட்டுப்பாட்டு பொறியாளர் குணசேகரன் தலைமை வகித்து கொடிய சைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் உதயன் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் தளிர்விடும் பாரதம் சார்பாக தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள், எக்ஸல் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு தகவல் ஆணையம் அக்டோபர் 5 முதல் 12-ந் தேதி வரை தகவல் பெறும் உரிமைச் சட்ட வார விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் நடைபெற்ற இப்பேரணியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஒரு இந்திய குடிமகன் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் ஆகியவற்றின் மூலம் எந்த விதமான தகவலாக இருப்பினும் அதனை உரிய மனுசெய்து சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலரிடம் பெறலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த பேரணியானது குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் அருகில் தொடங்கி ஜே.கே.கே ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவு பெற்றது. பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை குமாரபாளையம் போலீசார் செய்திருந்தனர்.

    • கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவ பயிற்சி.

    நாமக்கல்:

    நாமக்கல் மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மைய தலைவர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது:-

    கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு குறித்த விளக்க பயிற்சி பட்டறை நாமக்கல்-திருச்சி ரோட்டில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பண்ணையாளர்களுக்கு லாபகரமான கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு வருகிற 12-ந் தேதி (வியாழக்கிழை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. முகாமில், பண்ணையாளர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×