search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்
    X

    காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    • மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

    நாமக்கல்:

    நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் கோட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின்சார விநியோகம் செய்வதற்காக ஒவ்வொரு துணை மின் நிலையத்திற்கு உட்பட பகுதியிலும், மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் மாவட்டம் காளப்பநாய்க்கன்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 12-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுஉள்ளது.

    Next Story
    ×