search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது - வாகனம் பறிமுதல்
    X

    ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது - வாகனம் பறிமுதல்

    • பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
    • அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள 4 ரோடு அருகே நாமக்கல் குடிமை பொருள் வழங்கல் துறை உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்கு வேகமாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்ததில் 37 மூட்டையில் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    2 பேர் கைது

    விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தி வந்த பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்த தனபால் மகன் பொன்னர் (6), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த அப்பாவு மகன் சக்திவேல் (47 )ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பரமத்திவேலூர் பகுதியில் அரிசி வியாபாரிகள் பல்வேறு கிராமங்களுக்கு சென்று ரேஷன் அரிசி வாங்கி வைத்திருக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களை அணுகி அவர்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து கைது செய்யும் நடவ டிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    Next Story
    ×