என் மலர்
நாகப்பட்டினம்
- வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
- ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி, வவ்வாலடி நடுநிலைப் பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரண த்தால் முழுவதுமாக இடிக்க ப்பட்டுவிட்ட நிலையில், போதிய இடவசதி இன்றி பள்ளி இயங்கி வருவதை அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, உடனடியாக புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க ப்படுமென உறுதியளித்தார்.
அதன்படி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 23 லட்சம் மதிப்பீட்டில், இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளி ட்டோர் பங்கேற்றனர்.
- கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
- காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு அரசு உதவி பெறும் சுந்தரேசவிலாஸ் தொடக்கப்பள்ளியில் சிரியா மற்றும் துருக்கி நாடுகளில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நிலநடுக்கத்தால் காயமடைந்து மருத்துவம னையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் பள்ளி ஆசிரியர் வசந்தா, ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்திரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
- கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் ஊராட்சியில்துளசிபுரம் ஊராட்சிஉள்ள கிராம நிர்வாக அலுவலககட்டிடம் கடந்த 2004 கட்டபட்டது.
தற்போது இரண்டு ஆண்டு களாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நாள்தோறும் பொதுமக்கள் பல்வேறு சான்றுகள் வாங்க வந்து செல்கின்றனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டத்திற்கு அருகில் அங்கன்வாடிமைய கட்டிடமும் அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.
எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என இப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டது.
- ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி, மேலப்போலகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்காலி கமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் பள்ளி இயங்கி வந்தது.
இது குறித்து அறிந்த நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த இன்னலை சந்திப்பதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
இதைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், விசிக மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ளவர்கள் விவசாய துறையினரை அணுக வேண்டும்.
- மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
வேதாரண்யம் பகுதியில் தற்போது பெய்த மழை ஈரத்தை பயன்படுத்தி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வம் உள்ள விவசாயிகள் விவசாய துறையினர அணுக வேண்டும் வேளாண்மை துறையினர் அழைப்புவிடுத்துள்ளனர்
விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசின் பசுமைக்காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகள் மரக்கன்றுகளை இலவசமாக பெற கீழ்க்கண்ட ஆவணங்களோடு நீர்முளை வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு கணினி சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பேங்க் பாஸ்புக் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் நேரில் வர வேண்டும் எனவும்மரக்கன்று வளர்ப்புக்கு பராமரிப்பு செலவுத்தொகையும் வழங்கப்படும்.
விவசாயிகள் தங்களிடம் உள்ளபராமரிப்பற்று கிடக்கும் திடல்கள், வயல் வரப்புகள், வீட்டைச்சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை மரக்கன்றுகள் வளர்க்க பயன்படுத்தலாம். மரங்களை வளர்த்து வருங்கால நம் சந்ததியை காப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வகுப்பறை கட்டடம் இன்றி மாணவ ர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர்.
- கட்டிடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி, கோதண்டராஜபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வகுப்பறை கட்டடம் பழுதடைந்த காரணத்தால் முழுவதுமாக இடிக்கப்பட்டுவிட்ட நிலையில், தனியார் கட்டிடத்தில் பள்ளி இயங்கி வந்தது.
இதை அறிந்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், அண்மையில் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, வகுப்பறை கட்டடம் இன்றி மாணவர்களும், ஆசிரியர்களும் அவதி அடைவதாக பொதுமக்கள் முறையிட்டனர். உடனடியாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.23 லட்சம் மதிப்பீட்டில், 2 வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ஷா நவாஸ் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர் செல்வ செங்குட்டுவன், வி.சி.க. மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, ஒன்றிய துணைத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவ டைக்கு தயாராக இருந்த சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், கனமழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையினை பாகுபாடின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிறுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பச்சை பயிறு, உளுந்துக்கான காப்பீட்டுத் தொகையை குறைக்காமல் சென்ற ஆண்டுக்கான தொகையினையும் காப்பீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷ ங்கள் எழுப்பப்பட்டது.
முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.
- முத்தரசபுரத்தில் ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
- அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நெல் வயல்களின் வழியாக வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அருகே உள்ள முத்தரசபுரத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த விஜயகுமார் உடல்நிலை குறைவால் உயிரிழந்தார்.
அவரை அடக்கம் செய்வதற்கு சாலை இல்லாமல் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சேறும், சகதியுமான நெல் வயல்களின் வழியாக விவசாயிகள் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்த நெற்பயிர்களின் நடுவில் தூக்கி சென்றனர்.
மேலும் பல ஆண்டுகளாக இந்த துயரத்தை சந்தித்து வருவதாக வேதனையுடன் கூறும் அப்பகுதி மக்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் ஒவ்வொரு முறையும் வயலில் தூக்கி சென்று பாடுபட்டு வளர்த்த நெற்பயிர்கள் நாசமாவதாக வேதனையோடு கூறியுள்ளனர்.
மேலும், மழைகாலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்லும் நிலை ஏற்படுவதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமலும் கீற்று கொட்ட கைகள் அவ்வப்போது அமைத்து சடலங்களை எரி ஊட்டுவதாகவும், பல நேரங்களில் மழையினால் நனைந்து சடலங்கள் பாதியிலேயே எரிந்து நின்று விடுவவும் கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கிராம மக்கள் பல ஆண்டுகளாக புகார் மனு கொடுத்தும் நாகை மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், விரைவில் சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டும் என்றும் தமிழக அரசு இதில் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடினான்.
- மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த வலிவலம் ஊராட்சி காருக்குடியைச் சேர்ந்தவர் இளைய ராஜா பாசமலர் தம்பதியினர். இவர்களின் மகன் கவிப்ரியன்.
இவர் வலிவலத்தில் உள்ள அரசு உதவிபெறும் வலிவலம் தேசிகர் மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
இந்த நிலையில் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற கவிப்ரியன் பள்ளி விளையாட்டு நேரத்தில் மாணவர்களோடு ஓட்ட பந்தயத்தில் ஓடியதாக கூறப்படுகிறது.
அப்போது மாணவர் கவிப்ரியன் மயங்கி விழுந்துள்ளார்.
அவரை மீட்டு வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுப்பி உள்ளனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கவிப்ரியன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
- மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.
பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.
திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.
முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.
அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.
தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
- நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
மன்னார்குடி:
மன்னார்குடியில் அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் சார்பில் நகர மன்ற தலைவர் மன்னை த.சோழராஜனிடம் முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.எஸ். ராஜேந்திரன், தேசிய மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் எஸ்.சேதுராமன், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு செயலாளர் வேல்முருகன், விலங்கியல் ஆர்வலர்கள் விவேக், அண்ணாதுரை, நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பாரதிதாசன், ஜெயக்குமார், ஜான்சன் லயன்ஸ் சங்கம் சந்தோஷ், ஜே.சி.ஐ சங்கம் நந்தகுமார் உட்பட பலர் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மன்னார்குடி நகரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, மனித நேயத்தோடு வரையறுக்கப்பட்டுள்ள சட்ட விதிமுறை களின்படி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மன்னார்குடி நகரத்தில் தற்சமயம் சுமார் 6000 தெரு நாய்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளன. இந்தத் தெரு நாய்கள் உணவுக்காக அலையும் நிலையில் உணவு கிடைக்காத சூழலில் வெறிபிடிக்க வாய்ப்பு உள்ளது.
விரைவாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவில்லை யெனில், தெரு நாய்கள் அதிகரித்து உணவு கிடைக்காமலும், குறைந்த அளவு கிடைக்கின்ற உணவால் நாய்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டும் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, நமது மன்னார்குடி நகராட்சி பகுதிகளில் சுற்றித் திரிகின்ற அனைத்து தெரு நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதோடு, அதற்கான நவீன அறுவை சிகிச்சை கூடம், தெருநாயை பிடிப்பது முதல் அறுவை சிகிச்சை செய்து முடித்து பிடிபட்ட இடத்திலேயே விடுவது வரையிலான பணிகளை உறுதிப்படுத்த வேண்டும்.
நாய் வளர்ப்போருக்கு ஏற்கனவே நடைமுறையில் இருந்த லைசன்ஸ் வழங்கும் திட்டத்தை மன்னார்குடி நகரத்தில் மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை பெற்ற கொண்ட நகர் மன்ற தலைவர் சோழராஜன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
- விவசாயம் மீது ஆர்வம் கொண்ட புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்றார்.
- தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்தார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்.
இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார்.
விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது:-
தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்து உள்ளேன்.
இந்த பூ கிலோ ரூ. 75 முதல் 100 வரை சந்தையில் விற்ப்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்.
என எதிர்பார்க்கிறேன் மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.






