என் மலர்
நாகப்பட்டினம்
- கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
- மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
- நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.
அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முகமது இத்ரீஸ் (வயது29), கண்ணன் (27), சமீர் (19), ஹஜ்புதீன் (21), முகமது சைபு (19) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு ரூ.2 லட்சத்தது 10 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
- கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டின் முன்பு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
- வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
- தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.
இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புதுறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,
வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணி முடிவு பெறும் நேரத்திற்கு ஏற்றவாறு மின் வினியோகம் முன்கூட்டியே வழங்க வாய்ப்பு உள்ளது.
எனவே தனிநபர்கள் தன்னிச்சையாக மின்வாரிய பணியாளர் துணையின்றி மின் பாதைகளில் மரம்வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியளார் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
- பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு.
- மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.
நாகப்பட்டினம்:
அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி விழுந்தமா வடியிலுள்ள சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி-யில் பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு பயிற்சியாளராக சென்சை நாசர் தீன் கலந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சிகளை அளித்தார்.
தொடர்ந்து கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக்,குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.
நாகை அருகே அழிந்து வரும் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
விழாவினை அகில இந்திய கராத்த சங்கத்தின் உடைய டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான எஸ் சாய் புருஸ் துவக்கி வைத்தார். ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கரத்தைச் சங்கத் தலைவர் சென்சாய் ராஜா செய்திருந்தார்.
- ஆதிதிராவிடர்- பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காக பி.வி.சி. குழாய்கள் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com தாட்கோ இணைய தளம் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை
04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும், தாட்கோ மாவட்ட மேலாளரை 9445029466 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
- நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நம்பியார் நகரை சார்ந்த மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அவர்களின் மீன்கள், வலைகள், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சின்னத்தம்பி, சந்த்ரு, மாதேஸ், சிவபாலன் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படுவதும், கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
ஒன்றிய அரசு எப்போதும் போல் அலட்சியமாக நடந்து கொள்கிறது.
இனியாவது ஒன்றிய அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
- திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதினங்குடி அவுரி மேட்டு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 18). இவர் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல நேற்று பஸ்ஸில் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது பஸ்சின் படியிலேயே நின்று கொண்டு சென்றுள்ளார். திருமருகல் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தபோது வேகத்தடையில் ஏறி இறங்கியது.
அப்போது எதிர்பாராத விதமாக பிரவீன்குமாரின் கால் பஸ் படிகட்டுக்கும், கீேழ தரைக்கும் இடையே சிக்கியது.
இதில் அவரின் காலில் மூன்று விரல்கள் எலும்பு நொறுங்கியது.
இது குறித்து அறிந்ததும் அக்கம்பக்கத்தினர் பிரவீன் குமாரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு பிரவீன்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து திட்டச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.
இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.
இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.
இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது.
- மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு வைத்து விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியின் ஆண்டு விழா அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மேலாண்மை குழு தலைவர் நிஷாந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தராஜன், துணை தலைவர் வீரராசு, துணை செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட ஆசிரியர்கள் கொஞ்சம் வித்தியாசமாக திருமண விழாக்களுக்கு தாம்பூலம் வைத்து அழைப்பது போல் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடு வீடாக சென்று வெற்றிலை, பாக்கு, பழம், வைத்து பள்ளி ஆண்டு விழாற்கான அழைப்பிதழ்களை வழங்கினர்.
- பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
- அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் ஜெயராஜ பவுலின் தலைமையில் நடந்தது.
கூட்டத்துக்கு வந்த விவசாயிகள், பருவம் தவறி பெய்த மழையால் சம்பா சாகுபடி பாதிக்கபட்டுள்ளது.
இதனை முறையாக கணக்கெடுத்து கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
மேலும், தாசில்தார் அலுவலகம் முன்பு மழையால் பாதிக்கப்பட்ட முளைத்த நெற்பயிர்களுடன் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் பாதிக்கப்பட்ட வயல்களை முறையாக கணக்கெடுக்க கோரியும், உரிய நிவாரண தொகை வழங்க கோரியும் முழக்கமிட்டனர்.
பின்பு தாசில்தார் ஜெயசீலன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை அரசுக்கு தெரிவிப்பதாக உறுதி அளித்த பின் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பலர், வேதாரண்யம் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் முற்றிலும் சாய்ந்து முளைத்துவிட்டது.
எனவே, அரசு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.
- லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200 பறிமுதல்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் பெரியகுத்தகை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பள்ளிக்கூடம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரி த்தனர்.
விசாரணை யில் அவர் அதே ஊரைச் சேர்ந்த காளியப்பன் (வயது63) என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதும் தெரியவந்தது.
அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி சீட்டு விற்றதன் மூலம் கிடைத்த ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.






