என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • 8-ம் நாள் விழாவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர், எழுந்தருளினர்.
    • இரவு அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது

    இந்த நிலையில்நேற்று எட்டாம் நாள் திருவிழாவில் அப்பர் சம்பந்தர் சுந்தரர் எழுந்தருளினர்கள்பின்பு அர்த்தநாரீஸ்வரர் படி இறங்கி ராஜ நாராயண மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    இரவு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி அப்பர் சம்பந்தர் சுந்தரருக்கு எழுந்தருளி காட்சி கொடுத்தார்பின்பு சுவாமி வீதி உலா காட்சி நடைபெற்றது

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதாரண்யேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் மகர தோரணவாயில் உள்ள கதவிற்கு வெள்ளிகவசம் அமைத்துக் கொடுத்த சண்முகானந்தம் குடும்ப த்தினர் செய்திருந்தனர்.

    • ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்றுள்ளார்.
    • சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் சவுந்தரபா ண்டியன் (வயது 37).

    இவர் மணக்குடி கடைத்தெரு அருகே சாலை ஓரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி விட்டு கடைக்கு நடந்து சென்று ள்ளார்.

    அப்போது அந்த வழி யாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாரத விதமாக மோதியது.

    இதில் சவுந்தர பாண்டியன் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தலைஞாயிறு போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    கடல்வாழ் உயிரினங்களில் கடல் அட்டை உள்ளிட்ட அழிந்துவரும் அரிய வகை உயிரினங்களை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், நாகையில் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல அதிகளவில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நாகை கீரைக்கொல்லைத்தெரு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு குடோனில் பெட்டி, பெட்டியாக பதப்படுத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், நாகையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கடல் அட்டைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைத்திருந்ததும், போலீசாரை கண்டதும் அவர் தப்பி ஓடியதும் தெரியவந்தது.

    இதுகுறித்து நாகை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முருகானந்தத்தை வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை நாகை வனச்சரக அலுவலத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஒப்படைத்தனர்.

    • அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.
    • சிவாச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேசுவரர் கோவிலில் தமிழ்ப் பதிகம் பாடி கதவு திறக்கும் ஐதீக (வரலாற்று) திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோவிலில் ரிக் யஜூர் சாம அதர்வண ஆகிய நான்கு வேதங்களும் இறைவனை வழிபட்டு வந்ததாகவும் பின்னர் கோயிலின் பிரதான கதவுகளை மூடிச் சென்ற தாகவும் பின்பு இங்கு வந்த திருநாவுக்கரச சுவாமிகளும், திருஞானசம்பந்த சுவாமிகளும் தேவார பதிகம் பாடி கதவு திறந்ததாக வரலாறு.

    அப்பர் கதவை திறக்கவும் சம்பந்தர் கதவை மீண்டும் திருக்காப்பு செய்யவும் பாடியதாக ஐதீகம்.

    இந்த ஐதீக திருவிழா ஆண்டு தோறும் மாசிமக பெருவிழாவில் தமிழ் பதிகம் பாடி கதவு திறக்கும் விழா நடைப்பெற்று வருகிறது.

    இதையெட்டி இந்த ஆண்டு நடைபெற்ற ஐதீக வரலாற்று திருவிழாவில் மகரதோரண வாயிலில் அப்பர் சம்மந்தர் எழுந்தருளினர்.

    பின்பு ஓதுவார் மூர்த்திகள் பரஞ்சோதி ஓதுவார் அப்பராகவும் ஓதுவார் வடுகநாததேசிகர் திருஞான சம்பந்தராகவும் உருவகப்படுத்தப்பட்டு தேவார தமிழ் பதிகம் பாடினர். ராஜேந்திரன் ஓதுவார் திருவிழாவின் வரலாறு பற்றி விளக்கி பேசினார்.

    அப்போது கோவில் கதவு வண்ண மலர்களால் அலகரிக்கப்பட்டு, கபாட பூஜை எனப்படும் திருக்கதவுக்கு சிவராஜா சிவச்சாரியார் மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்து திருக்கதவு திறக்கப்ப ட்டது.

    இந்நிகழ்ச்சியில்; வேதாரண்யம் விளக்கழகு என்பதற்குகேற்ப வேதாரண்யேஸ்வரர் சுவாமி சன்னதி முழுவதும் சரவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பின்பு அப்பர் சம்மந்தர் வீதியுலா காட்சியும் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் யாழ்பாணம் வரனிஆதினம் செவ்வந்தநாத பண்டார சன்னதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன், குருகுலம் அறங்காவலர்கள் கயிலைமணி வேதரெத்தினம் கேடிலியப்பன் மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் வேதபாராயணன் ஓதப்பட்டது.

    • ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
    • குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த காக்கழனி, வெண்மணி, ஆந்தக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் தலா ரூ.11.62 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டதால் அங்கன்வாடி மைய குழந்தைகள் தற்காலிக இடங்களில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் நிலை இருந்து வந்தது.

    இந்த நிலையில் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு வெட்ட வெளியில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. மேலும் வெயிலில் குழந்தைகள் அமர்ந்திருக்கும் அவலமும் உள்ளது.

    எனவே உடனடியாக அங்கன்வாடி கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது.
    • பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாரமாக கனமழை பெய்தது இதனால் அறுவடைக்கு தயாராக சம்பா தாலடி மற்றும் ஊடுபயிராக உளுந்து அழுகி சேதமடைந்தது. இதை அடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட்டு நிவாரணம் வழங்க உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி காரப்பிடாகை வடக்கு பகுதியில் சுமார் 50ஏக்கருக்கு மேல் ஊடு பயிராக பயிரிடப்–பட்டிருந்த உளுந்து பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் அதிகாரிகளிடம் முறை–யிட்டும் பயிர் சேதங்களை பார்வையிட வரவில்லை என குற்றச்–சாட்டு எழுந்துள்ளது.

    விவசாயிகள் கீழையூர் வேளாண் விரிவாக்கம் மையத்தில் விதைகள் வாங்கி சாகுபடி செய்த உளுந்து பயிர்கள் விதைத்து 50 நாட்கள் ஆகி அறுவடை நேரத்தில் மழையால் சேதமடைந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே உடனடியாக பாதிக்கப்பட்ட உளுந்து பயிர்களை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்விக் கடன் பெறுவதில் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.
    • வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஏ.டி.எம். மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி ஆகியோர் தொடங்கி வைத்து, பணி நியமன ஆணையினை வழங்கினர்.

    முகாமில் ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசியதாவது, மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக தனியார் நிறுவனங்களை தேடி அலைந்த காலம் உண்டு.

    ஆனால் இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு கடந்த 20 மாதங்களில் மாவட்டம் தோறும் கல்விக் கடன் முகாம்களும் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, வங்கிகளையும் தனியார் நிறுவனங்களையும் எளிதில் அணுகும் நிலை உருவாகியுள்ளது.

    கல்விக் கடன் பெறுவதிலும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் இருந்த இறுக்கம் தளர்ந்து நெகிழ்வுத் தன்மை ஏற்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட அளவில்கல்விக் கடன் முகாம் நடத்தப்பட்டு அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர். அதுபோல் மாவட்ட அளவில் 4 பெரிய வேலை வாய்ப்பு முகாம்களும், வட்டார அளவில் 6 முகாம்களும் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.

    சுமார் 10,000 பேர் பங்கேற்ற அம்முகாம்களின் மூலம் சுமார் 4,000 பேருக்கு இதுவரை வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அளவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வேலையின்மை ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலாஜி (வயது 23). கைப்பந்து விளையாட்டு வீரர். பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் வாங்கியவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )பசுபதி மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மீதமுள்ள ஒரு கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படும்.
    • விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது,

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

    அதில் நாகை தொகுதியில் மட்டும் 3 கட்டடங்கள் கட்டப்பட்டு அதில் 2 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள ஒரு கட்டடம் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்,

    ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறும்போது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேங்கிக் கிடக்காமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும், விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    நிகழ்வில், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் கெளரி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற து.தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.
    • 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கடைவீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரன் இருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

    அப்படி மீன் பிடிக்க வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கோட்டை மணி (வயது 49) மற்றும் மணிகண்டன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதில் கோட்டை மணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடை பெற்றது.

    யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்யர், ராமர், நவக்கிரஹக பரிகார பூஜைகளுடன் வேதவல்லி மற்றும் வாராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி பல்வேறு திரவியங்கள், நிகும்பல (மிளகாய்) வேள்வியுடன் பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×