என் மலர்
உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர் தற்கொலை
- வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலாஜி (வயது 23). கைப்பந்து விளையாட்டு வீரர். பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் வாங்கியவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )பசுபதி மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






