என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • மவுன சித்தர் பீடத்தில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    வேதாரண்யம்:

    வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    வனதுர்க்கை அம்மன் கோவில்

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு புனிதநீர் அடங்கிய கடங்கள் வைத்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, வண்ண மலர்க ளால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    மாணிக்கவாசகர் மடம்

    இதேபோல், வேதாரண்யம் நகரின் மேல வீதியில் உள்ள மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகருக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சுவாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விக்னேஸ்வரன் தலைமையில் பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் பாடி மாணிக்கவாசகரை வழிபட்டனர்.

    முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா, யாழ்ப்பாணம் வரணி ஆதீனம், செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மவுன சித்தர் பீடம் இதேபோல், வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காடு தெற்கு பகுதியில் அமைந்துள்ள மவுன சித்தர் பீடத்தில் தினசரி பூஜைகள் நடைபெறும். நேற்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    இதில் மகானுக்கு பிடித்த பலகாரங்கள், பொங்கல் ஆகியவை படையல் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.தொடர்ந்து, பக்தர்கள் பீடத்துக்கு வந்து தியானம் மேற்கொண்டு வழிபாடு நடத்தினார்கள். மேலும், பவுர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு பக்தர்கள் தீப ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

    • இரட்டைமடி வலைகள் மீனவர்கள் பயன்படுத்துவதை தடுக்கவேண்டும்.
    • மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    நாகப்பட்டினம்:

    காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களின் ஆலோசனை கூட்டம் அக்கரைப்பேட்டை மீன் பிடித் துறைமுகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் நாகப்ப ட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மீனவர் கிராம நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள இரட்டை மடி வலைகளை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் பயன்படுத்தி தொழில் செய்வதை தடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தமிழ்நாடு கடல் எல்லையில் தொழில் செய்ய வந்தால் விசைப்படகுகளை சிறைபிடித்து மீன்வளத்து றையில் ஒப்படைக்க வேண்டும் என்றும், காரைக்கால் மாவட்ட விசைப்படகுகளுக்கு வியாபார ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள கூடாது எனவும், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை நாகை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் வழங்க கூடாது என முடிவு செய்துள்ளனர்.

    மேலும் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறி தொழில் செய்தால் மீன்பிடி தடைக்காலம் முடிந்தவுடன் வரும் 14ம் தேதி முதல் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொழில் மறியல் போராட்ட த்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் (மே) 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 6-ந் தேதி வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில்அமைந்துள்ளது.இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா,தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சௌரிராஜ பெருமாள்,பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று முதல் நாள் இரவு நடைபெற்றது.தொடர்ந்து நேற்று பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விழாவையொட்டி, வருகிற 6-ஆம் தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ஆம் தேதி விடையாற்றியும் நடைபெறு கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் தக்கார் முருகன்,செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்கள் ரதக்காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குப்பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் முன்னாள் செல்ல ஒன்றன்பின் ஒருவராக மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    இதைத்தொடர்ந்து ரதக்காவடி அலகு காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.

    • சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 180 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
    • நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை கோட்டம், வேதாரண்யம் உட்கோட்ட த்தில் நடைபெற்று வரும் சாலை பணிகளை திருச்சி, நெடுஞ்சாலைத்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் விஜயலெட்சுமி தலைமையில் பொறியாளர் குழுவினர் ஆய்வு செய்தனர். செங்காதலைபாலம்- வேதாரண்யம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை பணிகளின் தரம் குறித்து தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது, தஞ்சாவூர், நெடுஞ்சாலை த்துறை, நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்ட பொறியாளர் சரவணன் மற்றும் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டப்பொ–றியாளர் நாகராஜன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

    • பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    வேதாரண்யம்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வருகிற 7-ந்தேதி (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. அதனால் பள்ளிகள் அனைத்தையும் சுத்தம் செய்யும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆதனூர் ஊராட்சியில் உள்ள அண்டர்காடு சுந்தரேச விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் வசந்தா என்பவர் தொழிலாளர்களுடன் சேர்ந்து பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையல் கூடம் என பள்ளியின் அனைத்து பகுதியிலும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆசிரியர் வசந்தா பள்ளியை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஆசிரியரை பாராட்டி வருகின்றனர்.

    • பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு அடுத்த மணக்குடியில் உலகநாயகி அம்பாள் சமேத தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 29-ந் தேதி விக்னேஷ்வர பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, 4-ம் கால யாகசாலை பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்று, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியர்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, தான்தோன்றீஸ்வரர், உலகநாயகி அம்பாள், விநாயகர், நவக்கிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தனர்.
    • நோக்கு திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு வைக்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நொடக்கப் பள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி இயக்கங்கள் இணைந்து நடத்தும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்றது.

    பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் எழிலாரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகேசன், சத்தியா, ஜோதிலட்சுமி தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள் ஜெயம், அன்னமேரி ஜான்சிலின் வரவேற்றனர்.

    விழாவில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்காள் தயாநிதி, நிறைவாணி, உமா, யோகா, அஸியா, சிவசங்கரி, சுவேதா, எழிலாரசி, பத்மா, கயல்விழி, ஆனந்தி, பிரதீபா, ஹேமமாலினி, சுகந்தி, பிரியா, கலைச்செல்வி, பங்கேற்றனர்.

    திருவிழாவில் வானவில் மன்ற கருத்தாளர்கள் பிரகாஷ் மேனன், அனுப்பிரியா, பித்தௌஸ் பர்வின், தயாநிதி ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித நுணுக்கங்களை விளை யாட்டின் மூலமாகவும், பாடல் மற்றும் செயல்பாடுகள் மூலமாகவும் கற்றுக் கொடுத்தனர்.

    மாண வர்களின் உற்று நோக்குத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் பொம்மலாட்ட கலைஞர்கள் ஆர்த்தி, ஆஷா, ஹரிணி ஆகியோர் பொம்மலாட்ட கலையை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தி மீண்டும் மஞ்சப்பை எனும் கருத்தை அவர்களுக்கு கண் முன் நிறுத்தினார்கள்.

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் நிறைவாணி நன்றி கூறினார். 

    • வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பாலித்து வருகிறார்.
    • பல்வேறு திரவியங்களால் முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காடு அமிர்தக டேஷ்வரர் கோவிலில் தனி சன்னதியில் வள்ளி தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணியர் அருள்பா லித்து வருகிறார்.

    இந்த ஆண்டு வைகாசி பெருவிழா 7-ம் நாள் மண்டகபடியில் முருகனுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரா தனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, இரவு முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் வீதிஉலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனு அளித்தார்.
    • கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட அளவிலான அனைத்து த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

    அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டு பேசியதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு புதிய பொறுப்பு அமைச்சர், புதிய மாவட்ட ஆட்சியர், புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்ட பிறகு நடக்கும் இந்த முதல் ஆய்வுக் கூட்டத்தில் நாகை சட்டமன்ற தொகுதியின் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை கவனப்படுத்துகிறேன்.

    நாகை புதிய புறநகர் பேருந்து நிலையம், நாகை அக்கரைப்பேட்டை ரயில்வே மேம்பாலம், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனை புதிய கட்டடம், சாமந்தான் பேட்டை மீன்பிடி துறைமுகம், பட்டினச்சேரி கடல் அரிப்பு தடுப்புச் சுவர், நாகையில் பணிபுரியும் மகளிர்க்கு அரசு தங்கும் விடுதி, நாகூர் நெய்தல் பூங்கா, நாகை புதிய கடற்கரையை நீலக்கொடி திட்டத்தின் கீழ் மேம்படுத்துவது, நாகூர் துணை மின் நிலையம், நம்பியார் நகர் புயல் பாதுகாப்பு மையம், நாகை வருவாய் அலுவலகம் பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு ஆகிய திட்டப்பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும்.அதுபோல் நாகை தொகுதி சார்ந்த கோரிக்கைகள் நிறைய உள்ளன.

    குறிப்பாக, திருமருகல் தனி தாலுகா, நாகையில் அரசு சட்டக் கல்லூரி, காடம்பாடி நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகை நகராட்சியை தரம் உயர்த்துதல்,

    நாகூர் சில்லடி கடற்க ரையை மேம்படுத்துவது, நாகூர் பேருந்து நிலையம் சீரமைப்பது, நாகை நீதிமன்ற வளாகத்தில் உள்ள சூடாமணி விகாரம் கட்டடத்தில் அருங்காட்சியம் அமைப்பது, பாரதி மார்கெட் புதிய கட்டடம், நாகை அரசு மருத்துவமனையை மேம்படுத்துவது, ஏனங்குடி விளையாட்டு மைதானம் மேம்படுத்துவது, திட்டச்சேரி பேரூராட்சிக்கு சிறப்பு திட்டங்கள், திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, நாகையில் பீச் வாலிபால் அகாடமி, அழிஞ்சமங்கலம் ஆதி திராவிடர் நல உயர் நிலைப் பள்ளியை தரம் உயர்த்துதல், நாகூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு, நாகூர் சில்லடி மற்றும் நாகை புதிய கடற்கரையில் புறக்காவல் நிலையம், நாகை நகராட்சி பாரம்பரிய கட்டடம் புனரமைப்பு, நாகையில் மறைமலை அடிகள் நினைவு கலையரங்கம், நாகை செல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி உட்கட்டமைப்பு மேம்பாடு, நாகூர் திட்டச்சேரி திருமருகல் நூலகங்களுக்கு புதிய கட்டடம் ஆகிய கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு ஷா நவாஸ் எம்.எல்.ஏ பேசினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

    • மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.
    • தனது உறவினரின் வீட்டில் தங்கி இருந்து திருட்டு தொழிலில் ஈடுப்பட்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள காய்கறி கடை, பழக்கடை, உணவகம், கறி கடைகள் உள்ளிட்ட 6 கடைகளில் நள்ளிரவில் பூட்டை உடைத்து மர்ம நபர் பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றார்.

    இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டவரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திட்டச்சேரி கடைதெருவில் சந்தேகத்திற்கு உரிய வகையில் சுற்றி நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் செட்டிமண்டபம் மேலப்புளி யம்பேட்டை டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 38) என்பதும், இவர் துண்டம் ஆற்றங்கரை பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் தங்கி கொண்டு திட்டசேரி கடைகளில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து ஐயப்பனை கைது செய்தார்.

    மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ×