என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா
    X

    பால்காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபட்டனர்.

    நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா

    • ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
    • அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

    ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.

    இந்நிலையில், திருவிழாவின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையலிட்டும், பால் காவடி, பன்னீர் காவடி, வேப்பிலை காவடி மற்றும் பாடை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    Next Story
    ×