என் மலர்
நாகப்பட்டினம்
- வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் குழுவிற்கு போட்டிகள் நடைபெற்றன.
- வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் மகளிர் திட்ட நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுவிற்கு கவிதை கட்டுரை ஓவிய போட்டிகள் நடைபெற்றன.
இதையடுத்து பரிசளிக்கும் விழா மகளிர் திட்ட இயக்குனர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் வரவேற்றார்.
நிர்வாக கணக்கு திட்ட உதவிஅலுவலர் முருகேசன், உதவித்திட்ட அலுவலர் சரவணன் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற 25 மகளிர் சுயஉதவிகுழு உறுப்பினர்களுக்கு தலைமை திட்ட இயக்குனர் முருகேசன் பரிசுகள் வழங்கினார்.
- பொதுமக்களுக்கு மஞ்சப்பை, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
- மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், கரகம், தப்பாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேசிய பசுமை படை சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகா ப்பதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறினார்.
பின்னர் பொதுமக்க ளுக்கு மஞ்சப்பை விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவ மாணவி யருக்கு மூலிகைக் கன்றுகள் வழங்கினார்.
சுற்றுச்சூ ழல் விழிப்பு ணர்வு நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் செ.சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு
ஏ.நிர்மலா ராணி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளிகள் முருகன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தெர்லின் விமல், பள்ளித்துணை ஆய்வாளர் ராமநாதன், நகராட்சி துணைத் தலைவர் செந்தில்கு மார், நாகூர் சித்திக் சேவை குழுமத்தை சேர்ந்த நாகூர் சித்திக் வேளாங்கண்ணி அந்தோணிசாமி நாகை மோகன், அமிர்தா பள்ளி முதல்வர் என் சித்ரா, சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் எஸ்.செங்குட்டுவன், தேசிய பசுமைப்படை ஆசிரியர்கள் பால சண்முகம், ரமேஷ், மங்கலம், ரகு, காட்சன், அருண் முன்னாள் என்சிசி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் கலை குழுவினரின் கரகம் தப்பாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி வரவேற்றார்.
முடிவில் தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் நன்றி கூறினார்.
- சாலை விபத்துக்கள் அதிகமாக தினமும் நடைபெறுகின்றன.
- பொதுமக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் அதிகமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
திருமருகலை சுற்றியுள்ள சுமார் 20 ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த சந்தைப்பேட்டை சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் அதிவேகத்திலும் கட்டுபா டின்றி செல்வதாலும், சாலை விபத்துக்கள் அதிகமாக தினந்தோறும் நடை பெறுகின்றன.
பொதுமக்கள் அனை வரும் மிகவும் அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நலன் கருதியும்,சாலை விபத்து ஏற்படாமல் இருப்ப தற்கும்,அரசு மருத்துவமனை அருகில் வேகக்கட்டுப்பாட்டு தடையும், சந்தைப்பேட்டை சாலையிலும், அண்ணாமலை நகர் சாலையும் சந்திக்கும் இடத்தில் வேகக்கட்டுப்பாட்டு தடையும் அமைத்து தரும்படி பொதுமக்கள் சார்பாகவும், திருமருகல் வர்த்தகர்கள் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை நாணயக்கார தெருவில் உள்ள உச்சமாகா ளியம்மன் கோவிலில் வைகாசி உற்சவம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து காளியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள் பூந்தட்டுகள் எடுத்து ஊர்வலமாக காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர், அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்துகொண்ட பெண்களுக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
அதனைய டுத்து கலசம்பாடி முத்து பூசாரி குழுவினரின் காளியாட்டத்துடன் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
- விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் அக்கினி நட்சத்திரம் நிறைவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக்கி வந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு திடீர் கனமழை பெய்தது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட திட்டச்சேரி, திருமருகல், நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், பரவை, வேளாங்கண்ணி, திருப்பூண்டி, மேலப்பிடாகை, திருவாய்மூர், எட்டுக்குடி, ஈசனூர், வாழக்க ரை, கீழையூர்,சாட்டியக்குடி, கீழ்வேளூர், சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனால் பல்வேறு நகர் பகுதிகளில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதோடு பெரும்பாலான வாகன ஓட்டிகள் நனைந்த படி பயணம் மேற்கொண்ட னர்.
மேலும் இந்த திடீர் மழை வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் ஜூன் 12 தண்ணீர் திறந்து விடப்பட உள்ள நிலையில், குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் உழவு பணியை மேற்கொள்ள இந்த திடீர் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்துள்ளனர்.
- நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
- பொதுமக்களிடம் சாலையில் குப்பைகளை கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வேதாரண்யம்:
சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவின்படி, வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் ஹேமலதா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பினர்கள், ஈகா, பிரியம் அறக்கட்டளைகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
பின், நந்தவன குள தெருவில் பொதுமக்கள் பங்களிப்புடன் குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து, அகஸ்தியர்கோவில் குளம் தூய்மை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, தூய்மை பணியாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக நகராட்சி நுண்ணிய உரக்கிடங்கில் பணிபுரியும் 8 பணியாளர்களுக்கு நற்சான்றிதழை நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆகியோர் வழங்கினர்.
பின்னர், தோப்புத்துறை இலந்தயடி ரஸ்தா பகுதியில் கொட்டப்பட்டிருந்த கட்டிடக்கழிவுகள் அகற்றப்பட்டு பொதுமக்களிடம் குப்பைகளை சாலையில் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
- ஒவ்வொரு ஞாயிற்றுகிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
- அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் உள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 28-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், திருவிழாவின் கடைசி ஞாயிற்றுக்கிழமையை யொட்டி பக்தர்கள் மாவிளக்கு வைத்தும், படையலிட்டும், பால் காவடி, பன்னீர் காவடி, வேப்பிலை காவடி மற்றும் பாடை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அங்கு நடந்த பாரம்பரிய கோலாட்டத்தை கண்டு ரசித்தனர்.
- கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினார்.
- தப்பி ஓடிய குற்றவாளியை நாகூர் போலீசார் தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக வாஞ்சூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாஞ்சூர் சோதனை சாவடி வழியே புதுச்சேரி மாநிலம், காரைக்காலிருந்து வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர்.
சோதனையில் மோட்டார் சைக்கிளில் 180 மில்லி அளவுள்ள 197 கோட்டர் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மதுகடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், அவரிடமிருந்து 197 மதுபாட்டில்களும் மற்றும் கடத்தலுக்கு பயன்ப டுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளைய போலீசார் கைப்பற்றினார்.
இதேபோல் நாகூர் புறவழி சாலையில் நடைபெற்ற சோதனையில் மோட்டார் சைக்கிளை மறித்த போது மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு மர்மநபர் தப்பி ஓடி விட்டார்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்த 100 புதுச்சேரி சாராய பாட்டில்களையும் கைப்பற்றப்பட்டன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த நாகூர் போலீசார் தப்பி ஓடிய குற்றவாளியை தேடி வருகின்றனர்.
- பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
- முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தில் தேசிய தலித் கண்காணிப்பகம், புதுடெல்லி தலித் மனித உரிமைக்கான தேசிய அமைப்பு, மதுரை காஸ்கோ சேவை நிறுவனம் மற்றும் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்றம் ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பேரணி நடந்தியது. ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.
முன்னதாக பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, தனிப்பது, பேரிடருக்கான முன்னெச்சரிக்கை தயார்படுத்துவது மற்றும் அரசு செயல்படுத்தி வரும் சமூக பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்து மாநில அளவிலான பயிற்சியாளர் அன்னப்பூ ரணி, மாநில அளவிலான தேசிய கண்காணிப்பு ஒருங்கிணைப்பாளரும், காஸ்கோ நிறுவனருமான துரைபாண்டி ஆகியோர் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாகை மாவட்ட தலித் கூட்டமைப்பு தலைவர் முருகேசன் செய்திருந்தார். முடிவில் ஊராட்சி செயலாளர் ரெங்கராசு நன்றி கூறினார்.
- நாகை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படுகிறது.
- நெல்கள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நவீன அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
மஞ்சகொல்லை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான அடிக்கல்லை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்மு றையாக அமைக்கப்படும் இந்த நவீன அரிசி ஆலை மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கும் எனவும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன், அரிசி ஆலையின் நிர்வாக இயக்கு னர் கணேசன் ஆறுமுகம் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
- எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ஆயக்காரன்புலம் இரா. நடேசனார் மேல்நிலைப் பள்ளியில் 164 ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3 நாள் பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பழனிச்சாமி (பொ), வட்டார கல்வி அலுவலர்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் மற்றும் சமூக அறிவிய லுக்கான பயிற்சியை மாவட்ட கருத்தாளர்கள் நீலமேகம், முருகானந்தம், பரமசிவம், சிவபாலன் ஆகியோர் எண்ணும் எழுத்திற்கான களஞ்சியங்களை காட்சிப்படுத்தி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு இந்த திட்டத்தை எடுத்து செல்வதற்கு ஆயத்தமாக பயிற்சி அளிக்கப்ப ட்டதாக பயிற்சி யாளர்கள் தெரிவித்தனர்.
- கள்ளநோட்டுகள், ஸ்கேன் எந்திரம், கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 3 சிறுவர்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
நாகப்பட்டினம் :
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வேதாரண்யம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15, 16 வயதுடைய 3 சிறுவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 200 ரூபாய் ,100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை கத்தரிப்புலத்தில் உள்ள உறவினர் ஒருவருக்கு சொந்தமான ஸ்டுடியோவில் ஸ்கேன் செய்து , அந்த கள்ளநோட்டுகளை கணினி மூலம் பிரிண்ட் எடுத்து புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.
இதையடுத்து கள்ளநோட்டுகளையும், ஸ்கேன் எந்திரம் , கணினி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து அவர்களை வேதாரண்யம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், காரியப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகள் மற்றும் ஸ்கேன் எந்திரம், கணினி ஆகியவற்றை பார்வையிட்டார்.
ரூபாய் நோட்டுகளை ஸ்கேன் செய்து கள்ளநோட்டுகள் தயாரித்து புழக்கத்தில் விட்ட 3 சிறுவர்கள் கைது செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






