என் மலர்
நாகப்பட்டினம்
- குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
- மீன்பிடி தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும்.
தண்ணீர் திறந்துவிடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் செய்யவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.
பொதுமக்கள் யாரும் ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று செல்பி எடுக்க வேண்டாம். குழந்தைகள் எவரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் இறங்கி விடாமல் தடுத்திடுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் திறந்து விடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாத்திட விவசா யிகளுக்கு அறிவுறுத்தப்படு கிறது. 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.
இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.
- கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து 500 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் ராமநாயக்கன் குல வடகரை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அருள்மொழித் தேவன் சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து 500 சாராய பாட்டில்களும், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.
- நெய்விளக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- 2 டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்தர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் (பொ) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நெய்விளக்கு பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியில்லாமல் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இரண்டு டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்தும், டிராக்டர் டிரைவா் அகஸ்தியன்பள்ளி தாமரைசெல்வன் (வயது 28), கைலவனம்பேட்டை வீரமணி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். டிராக்டா் உரிமையா ளா்களை தேடி வருகின்றனர்.
- படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
- அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.
மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.
படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.
மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள நெய்தல் கோடை விழா-2023 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நெய்தல் கோடை விழா- 2023 நிகழ்ச்சி நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தோட்டக்கலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை, காவல்துறை (ம) போக்குவரத்து துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தூர்வாரும் பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.
- ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே பன்னத்தெரு ஊராட்சியில் வேலையடி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.
விவசாய சங்க செயலாளர் பிரபு, இயற்கை விவசாய சங்க தலைவர் வேனு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆஸ்திரேலியா தமிழர்கள் பொதுநல அமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா பொது நல அமைப்பை சேர்ந்த நிர்மல்குமார், வக்கீல் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
- இதனால் மாற்று வழியில் 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்த மாவடி மணல்மேட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது எல்லைரோட்டையும் -சடச்சி கச்சல் சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
சாலையின் நடுவே இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்ற வாகனங்கள் என அனைத்தும் மாற்றுவழியில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் சாலை பணியையும் மேற்கொள்ள முடியாமல் மணல் சாலையாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
- சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சி சார்பில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் சரஸ்வதி ஆகியோரின் உத்தரவுபடி வேதாரண்யம் நகராட்சி பகுதியில் மக்கள் தூய்மை இயக்கம் ஓராண்டு நிறைவு பெற்றது,
உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியில் மெகா தூய்மை பணி நடைபெற்றது.
கடற்கரை மற்றும் கடற்க ரைக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி பணியாளர்கள் சேகரித்து குப்பை கிடங்குக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் தூய்மை பணி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணை தலைவர் மங்கள நாயகி, உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கடற்க ரைக்கு வந்த சுற்றுலா பயணிகளிடம் பொது இடங்களில் குப்பைகள் கொட்டக்கூடாது என விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டு துண்டு பிரசு ரங்கள் வழங்கப்பட்டது.
- வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆதனூர், கருப்பம்புலம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா அலுவலகத்தில் கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புஷ்பவனம், தேத்தாக்குடி வடக்கு, செம்போடை, குரவப்புலம், ஆதனூர், கருப்பம்புலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இதில் ஆதரவற்ற விதவை சான்று கோரி விண்ணப்பித்திருந்த ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீ ரேகா தேவி என்பவருக்கு உடனடியாக ஆதரவற்ற விதவை சான்றை கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் வழங்கினார்.
அப்போது தாசில்தார் ஜெயசீலன், வருவாய் கோட்ட நேர்முக உதவியாளர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கவியரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
- தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
- அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது இறந்து தெரிய வந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது.
இந்த சிகிச்சை மையத்தில் மதுபோதையை மறப்பதற்காக 30 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளாங்காடு ஊராட்சி கரையங்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முருகேசன் (வயது 47) என்பவரும் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர் நேற்று மறுவாழ்வு மையத்தின் பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிகிச்சை மையத்தை சேர்ந்தவர்கள் அங்கு உள்ள தூணில் முருகேசனை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர், வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் மதுபோதை மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் முருகேசன் அடித்துக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வேதாரண்யம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிகிச்சை மைய உரிமையாளர் மணிகண்டன் (36), மேலாளர் வேல்மு ருகன்(38), பணியாளர்கள் ஷியாம் சுந்தர்(35), தீபக்குமார்(33) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
முன்னதாக மறுவாழ்வு மையத்தில் சிகிச்சையில் இருந்த சரண்ராஜ்(32), பிரபாகரன்(35), பாலமுருகன் (25) ஆகிய 3 பேரும் காயம்பட்டிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.
மீதம் இருந்த 26 பேரில் 17 பேரை வேதாரண்யத்தில் உள்ள பல்நோக்கு சேவை கட்டிடத்துக்கும், 9 பேரை நாகை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும் வேதாரண்யம் உதவி கலெக்டர் மதியழகன், தாசில்தார் ஜெயசீலன் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.
அதைத்தொ டர்ந்து வருவாய்த்துறை மற்றும் போலீசார் மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு 'சீல்' வைத்தனர்.
இந்த சம்பவம பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
- மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்த கோகூரில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, கொடி ஊர்வலம் ஆலயத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து, தஞ்சை மறை மாவட்ட பரிபாலர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர், கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான மின் அலங்கார பெரிய தேர்பவனி வருகிற 17ந் தேதி நடைபெற உள்ளது.
- கஞ்சா விற்பனை செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறு வதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங்குக்னு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைய டுத்து அவரது உத்தரவின் பேரில் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கஞ்சா விற்ற வேதாரண்யம் அடுத்த கீழ ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த கபிலன் (வயது 26), உச்சகட் ( 24), ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தி நெடுமாறன் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்து 580 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






