search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் கடத்திய இருவர் கைது
    X

    மணல் கடத்திய இருவர் கைது

    • நெய்விளக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்தர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் (பொ) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெய்விளக்கு பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியில்லாமல் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து இரண்டு டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்தும், டிராக்டர் டிரைவா் அகஸ்தியன்பள்ளி தாமரைசெல்வன் (வயது 28), கைலவனம்பேட்டை வீரமணி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். டிராக்டா் உரிமையா ளா்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×