என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
    • நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் செல்வி வழக்கம்போல் அவரது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்றுன்ளார். வீட்டில் ராஜேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது ராஜேஷின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பின்னர், நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷின் கை, கால்களை மர்மநபர்கள் கட்டி தீவைத்தனரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
    • அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.

    ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.

    அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.

    பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
    • போலீசார்- பா.ஜனதா.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாத னத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி யதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணா மலை அறிவித்திருந்தார்.

    அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    போலீசார் அனுமதி மறுத்து தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் போலீசார் பாஜக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

    • 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த ஆவராணி கிராமத்தில் பழமை வாய்ந்த அலங்காரவள்ளி சமேத அனந்தபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 8ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது.

    பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று மகா பூர்ணாஹூதி நடை பெற்றது.

    தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.

    பட்டாச்சாரி யார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமா ளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்க ப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் (மேற்கு பார்த்த சிவன்) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரி யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெ ற்றது.

    நிகழ்ச்சியில் திருப்பணி குழு தலைவர் ராஜேந்திரன், அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், தொழி லதிபர் பிரபு, கோவில் நிர்வாகி விஜயராகவன், கடின ல்வயல் பங்குதந்தை நித்திய சகாயராஜ், தோப்புதுறை ஜமாத் மன்ற தலைவர் ஷாபி, முன்னாள் ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் மற்றும் ஜமாத் மன்ற நிர்வாகிகள், கருப்ப ம்புலம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் ஆவணி பெருவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டி பூச்சொரிதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.

    30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.
    • சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரில், போகரின் ஆசி பெற்ற 18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர் சித்தர் கோவில் அமைந்துள்ளது.

    ஆன்மீகத்தையும், சித்த மருத்துவத்தையும் உலகுக்கு அறியச் செய்த கோரக்க சித்தர் ஜீவ சமாதி அடைந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பரணி விழா மற்றும் ஒவ்வொரு பௌர்ணமி தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவிலின் மூலஸ்தான கோபுரத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடு பதிக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.

    இதன் கல்வெட்டினை முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்த ம்திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பளபளவென மின்னிய கோரக்க சித்தர் கோயிலில் உள்ள சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் சங்கொலி நாதம் முழங்க, கோவில் மணி ஒலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.

    • நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.
    • நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு மீனவ கிராமங்கள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் ராஜேஷ் தலைமையில், 6 பெண் உட்பட 60 பேர் வருகை தந்தனர்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதற்றமான பகுதிகள் எவை? அடிக்கடி பிரச்சினை, கலவரம், சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கள் உள்ளதா ? என்பன உள்ளிட்ட தகவல்களை துணை கமாண்டர் ராஜேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து நாகை நகர காவல் நிலையத்திலிருந்து வெளிப்பாளையம் காவல் நிலையம் வரை கலவரத்தை கட்டுப்படுத்தும் வஜ்ரா வாகனம், கருவிகள், நவீன எந்திரங்கள் வாகனத்துடன் துப்பாக்கி ஏந்தியபடி அணி வகுப்புடன் சென்றனர்.

    இந்த மத்திய அதிவிரைவு படையினர் நாகை மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு,சிபிசிஎல், நாகை கடற்படை அலுவலகம், மீனவ கிராமங்கள், பதற்றமான, கலவரம் நடக்கும் பகுதிகள் என உள்ளூர் போலீசாருடன் இணைந்து ஆய்வு செய்கின்றனர். இதற்கான ஆய்வறிக்கையை தமிழக டி.ஜி.பி. மற்றும் உள்துறை அமைச்சகத்துக்கு சமர்ப்பிக்க உள்ளனர். 

    • சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.
    • சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி சேகல் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மின் மோட்டார்கள் மூலம் விவசாயிகள் தண்ணீர் பாய்த்து விவசாயம் செய்து வருகின்றனர்.

    திருமருகல் துணை மின் நிலையத்திலிருந்து சாலையோரம் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு சேகல்- நாட்டார்மங்கலம் சாலையில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.

    அவ்வாறு மின்விநியோகம் செய்யப்படும் சேகல் சாலையில் ஒரு புறத்திலிருந்து மறுபுறம் செல்லும் இடத்தில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் வயர்களில் இணைப்பு கொடுத்துள்ளது.

    காற்று வேகமாக வீசும் நேரங்களில் இந்த வயர்கள் அறுந்து சாலையில் விழுந்து விபத்துக்களை ஏற்படுத்துகிறது.

    மேலும் வயல்வெளிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் சேதமடைந்தும்,

    சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும்,சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் பாய்ச்ச மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே விவசாயிகளின் சிரமத்தை உணர்ந்து அதிகாரிகள் உடன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.

    • போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை மீனவ கிராம பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் மற்றும் மீனவர்கள், பொதுமக்கள் கலந்தாய்வு விழிப்புணர்வு ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு வேதாரண்யம் கடலோர காவல் குழுமஇன்ஸ்பெக்டர், ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை வகித்தார்கோடியக்கரை.

    மீனவகிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்து ராமலிங்கம் மீனவர்களிடம் பேசியதாவது

    கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்ற சம்பவங்களுக்கும் மீனவர்கள் துணைபோகாமல் குற்றங்கள் மற்றும் கடத்தல், அந்நியர்கள் வருகைகள் குறித்து உரிய நேரத்தில் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்லவேண்டும்.

    14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெஎழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது எல்லை தாண்டி மீன்பிடிக்க கூடாதுஎன்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து பேசினர்.

    • மானங்கெண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.
    • பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    வேதாரண்யம்:

    திருத்துறைப்பூண்டியில் வாய்மேடு வழியாக சென்று அங்கிருந்து ஆதனூர் ஊராட்சி வரை சுமார் 19 கிமீ தூரம் வரை சென்று பின்னர் கடலில் கலக்கும் மிகப்பெரிய வடிகால் ஆறான மானங்கெரண்டான் ஆற்றிலும், முள்ளியாற்றிலும் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேட்டில் இருந்து பிரியும் மானங்கெண்டான் ஆற்றிலும் பல கி.மீட்டர் தொலைவு வரையில் தண்ணீரையே காணாத முடியாதபடி வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.

    இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாக்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களிலும் மழை வெள்ள தண்ணீர் வடிவதையும், பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.

    இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வடிகால்ஆறுகளிலும், வாய்க்கால்களில் வெங்காயத் தாமரைச் செடிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அடர்ந்து படர்ந்துள்ளதால் வடகிழக்கு காலத்தில் மழைநீர்வடிய முடியாமல் பெருத்த வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    எனவே பருவமழை வலுக்கும் முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.
    • பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்த பெண் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறார். வாரத்தின் கடைசி நாட்களில் ஊருக்கு வருவது வழக்கம்.

    அதேபோல் நேற்று இரவு வேலை முடிந்ததையடுத்து, இன்று அதிகாலை ஊருக்கு புறப்பட்டார். திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த கேரளா அரசு பஸ்ஸில் பயணம் செய்தார். இளம்பெண்ணின் பின்னால் இருந்த இருக்கையில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.

    அவர் பஸ்புறப்பட்ட சிறிது நேரத்திலேயே முன் சீட்டில் அமர்ந்திருந்த பெண் என்ஜினியரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அந்த இளம்பெண், வாலிபரை எச்சரித்தார். இதனால் உஷாரான அந்த வாலிபர் சிறிது நேரம் எதுவும் செய்யாமல் இருந்தார்.

    பின்பு மீண்டும் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கூச்சலிட்டதுடன், அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். அப்போது பஸ்ஸில் இருந்த சக பயணிகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக வாலிபரை தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் மார்த்தாண்டத்தில் பஸ்சை விட்டு இறங்க முயன்றார். ஆனால் அவரை பஸ்சை விட்டு இறங்கவிடாமல் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பஸ்சில் நடந்த சம்பவங்களை அந்த இளம் பெண் நாகர்கோவிலில் உள்ள தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

    அவர்கள் வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும், இளம் பெண்ணிடம் சில்மிஷம் செய்த வாலிபர் பஸ்சை விட்டு இறங்கினார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட வாலிபரை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    அப்போது அவர் மதுரை பகுதியை சேர்ந்தவர் என்பதும், என்ஜினீயராக இருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் நண்பர் ஒருவரை பார்த்துவிட்டு ஊருக்கு செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    ஓடும் பஸ்ஸில் பெண் என்ஜினீயரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபருக்கு சக பயணிகள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×