என் மலர்
நாகப்பட்டினம்
- கடலோர கிராமங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
- மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் சுனாமி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்கும் அரணாகவும் பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாங்கண்ணி, காமேஷ்வரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களை பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பனை விதைகள் விதைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
பிரதாபராமபுரம், விழுந்த மாவடி, காமேஸ்வரம், , நாகூர் பட்டினச்சேரி, வேட்டைக்காரன் இருப்பு, உள்ளிட்ட 24 மீனவர் கிராமங்களில் 7.1/2 லட்சம் பனை விதைகள் விதைக்கப்பட்டு இருப்பதாகவும் இப்பணியில் கல்லூரி மாணவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் தன்னார்வு அமைப்பினர் ஈடுபட்டதா கவும் இதன் மூலம் வரும் காலங்களில் கடற்கரை ஓரம் இயற்கை பேரிடர் இருந்து பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.
குறிப்பாக பிரதாப ராமபுரம் ஊராட்சியில் உள்ள கடற்கரைப் பகுதியில் ஆய்வுமேற்கொண்ட கலெக்டர் 4 ஆண்டுகளில் இந்த கிராமத்தில் மட்டும் 5 லட்சம் பண விதைகள் நடப்பட்டு தற்போது நன்கு வளர்ந்திருப்பதாகவும், இதில் 90% மரக்கன்றுகள் நல்ல நிலையில் வளர்ந்து இருப்பதாகவும் அடுத்த கட்டமாக உள் கிராமங்களில் தமிழ்நாடு கிரீன் விஷன் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்படும் என தெரிவித்தார்.
- வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
நாகப்பட்டினம்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் ஆனால், தற்போது அதற்கு மாறாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
குறிப்பாக இன்று அதிகாலை முதல் கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சற்று கூடுதல் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.
பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படும் சூழலால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் டியூசன் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் அச்சமடைந்துள்ளனர்.
நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.
- 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர்.
- சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17), பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் சென்றனர்.
அப்போது கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்த நூஃபுலை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெல்மூட்டைகளின் எடை, சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
- அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
நாகப்பட்டினம்:
மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அதை நம்பி நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்தனர் இருந்தபோதிலும் போதிய தண்ணீர் இல்லாததால் சுமார் 40,000 ஏக்கரில் குறுவை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் எஞ்சிய பயிர்களை ஏரி குளங்கள் மூலம் இறைத்து தற்போது அறுவடை ப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் பெருங்கட ம்பனூர்,தெத்தி, சின்னத்து ம்பூர், ஆவராணி , பட்டம ங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திறக்கப்பட்ட நேரடி கொள்முதல் நிலையங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் சிவப்பிரியா நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கொள்முதல் செய்து இருப்பு வைக்கப்ப ட்டுள்ள நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்ப ட்டுள்ளதா, கொள்முதல் செய்த நெல்லின் தரம், நெல்மூட்டைகளின் எடை,சாக்கு, சணல் , தார்பாய் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அங்கு இருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
பின்னர் அவர் அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்நிலை மண்டல மேலாளர் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய நாகப்பட்டினம் மாவட்டத்தில் 114 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 12000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்காமல் உடனுக்குடன் நேரடி கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது தரக்கட்டுபாட்டு துணை மேளாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆமாதள நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மருங்கூர் கோவில்
இதேபோல், மருங்கூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.
- விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக சென்றனர்.
- விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் அமைதி அறக்கட்டளை சார்பில் குழந்தை திருமணம் இல்லா இந்தியா குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைப்பெற்றது.
மாவட்ட குற்றவியல் நீதிபதி கார்த்திகா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 1000 த்திற்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித சங்கிலியாக நின்றனர்.
தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து குழத்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எழிலரசி, மாவட்ட சமூக நல அலுவலர் சுகிர்தா தேவி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, முருகேசன், மகாலிங்கம், ராஜகோபால் உள்ளிட்ட 5 பேரும் நேற்று காலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இதேப்போல், மற்றொரு படகில் விழுந்தமாவடி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், சண்முகவேல், முருகானந்தம், செல்வம் ஆகிய 4 பேரும் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். மொத்தம் 2 பைபர் படகுகளில் 9 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென 2 விசைபடகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் சுப்பிரமணியன் படகில் ஏறி கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலை மற்றும் தொழில்நுட்ப கருவிகளை உள்ளிட்ட பொருட்களை கேட்டுள்ளனர். அவர்கள் அதனை கொடுக்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இரும்பு கம்பியால் 5 மீனவர்களையும் சராமாரியாக தாக்கினர். பின்னர், அங்கிருந்த சுமார் 600 கிலோ மீன்பிடிவலையை எடுத்து கொண்டு படகையும் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்கொள்ளையர்கள் அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான பைபர் படகிற்கு சென்று அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டி பொருட்களை தருமாறு கேட்டுள்ளனர். அவர்கள் தர மறுத்ததால் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் 4 மீனவர்களையும் சரமாரியாக தாக்கிவிட்டு படகில் இருந்த மீன்கள், தொழில் நுட்ப கருவிகள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சமாகும்.
இன்று காலை இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட 9 மீனவர்களும் விழுந்தமாவடி கடற்கரைக்கு வந்தனர். காயங்களுடன் அவர்களை கண்ட சக மீனவர்கள் அவர்களிடம் கேட்கையில் தாங்கள் தாக்கப்பட்டு குறித்து கூறினர். தொடர்ந்து, கீழையூர் கடலோர காவல் படையில் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து கடலோர காவல் படையினரும், மீன்வளத்துறை அதிகாரிகளும் தாக்கப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர்கள் அனைவரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் சம்பவம் அதிகரித்து வருகிறது. தொடரும் தாக்குதலால் மீனவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளையடித்து செல்லும் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது மத்திய- மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நவராத்திரி விழா கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
- அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள தேவூரில் தேவதுர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நவராத்திரி பெருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு லலிதா சகஸ்ர பாராயணம் நடைபெற்றது.
முன்னதாக தேவதுர்க்கை அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம் ஒரு லிட்டர் 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா சண்டி ஹோமம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது.
- மழைகாலங்களில் தண்ணீர் வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
- மேலும், தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் முதல் கொத்தமங்கலம் ஊராட்சி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிக்கொண்டான் ஆறு செல்கிறது.
இந்த ஆற்றில் கட்டுமாவடி ஊராட்சி ஆற்றங்கரை தெரு முதல் துண்டம் நீர் தேக்கம் வரை ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து ள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்க வும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமி த்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பொதுமக்களுக்கு எவ்வாறு புற்றுநோய் வருகிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- முகாமில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இன்னர் வீல் சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து முச்சந்தியில் அமைந்துள்ள எஸ்.எஸ் மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாமை நடத்தியது.
முகாமை வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவி டயானா சர்மிளா குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார் இந்த முகாமில் உடல் எடை, உயரம்,ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு,மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு நிபுணர்கள் கொண்டு அதிநவீன பிராஸ்டர் மூலம்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு புற்றுநோய் எவ்வாறு வருகிறது ,அதனை கட்டுப்படுத்தும் முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவர் ஹிரோஷா, மருத்துவர்கள் வெற்றிச்செல்வி, சித்து, மற்றும் இன்னர்வீல் சங்க தலைவர் கலைச்செல்வி சட்டநாதன் வரவேற்பு ரையாற்றினார் ரோட்டரி சங்கத் தலைவர் சுவாமிநாதன் இதில் இன்னருவில் சங்க செயலாளர் ரோட்டரி சங்க செயலாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
- ஆபத்தான நிலையில் இருந்த மரங்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.
நாகப்பட்டினம்:
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக நாகை மாவட்டத்தில் அனைத்து துறைகள் சார்பில் பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி சீயாத்தமங்கை ஊராட்சி மெயின்ரோடு பகுதியில் உயர் அழுத்தம் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை உரசி கொண்டும்,எந்நேரத்திலும் முறிந்து விழுந்து விபத்துக்க ளை ஏற்படுத்தும் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களையும் வெட்டி அகற்றும் பணி ஊராட்சி தலைவர் சிவகாமி அன்பழகன் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
- வருகிற 24-ந் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதநாயகி அம்மன்- வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம். நான்கு வேதங்களும் பூஜித்த தலம்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நவராத்திரி விழா நேற்று சிறப்பாக தொடங்கியது. முன்னதாக மூல ஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு பல்வேறு விதமான அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர், எழுந்தருளும் அம்மனுக்கு நவராத்திரி மண்டபத்தில் சக்தி அலங்காரம் செய்யப்பட்டு, வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, மகாலெட்சுமி அம்மன் கேடயத்தில் கோவில் பிரகாரத்தில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
தொடர்ந்து, 10 நாட்களும் அம்மனுக்கு வேணுகோபால் அலங்காரம், மதுரை மீனாட்சி அலங்காரம், ஆண்டாள் அலங்காரம், காலிங்கன் அலங்காரம், கப்பல் அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், வெண்ணைத்தாழி அலங்காரம், மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் என பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி சுந்தரமூர்த்தி சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்று தோப்புத்துறை ரெயில்வே கேட் அருகில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, பணியாளா்கள், உபயதாரா்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.






