search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 People died"

    • 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் சென்றனர்.
    • சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஸ்வான்(17), பாஸித்(17), நூஃபுல்(17) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்களில் திருவாரூர் - நாகை நெடுஞ்சாலையில் சென்றனர்.

    அப்போது கூத்தூர் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது திருவாரூரிலிருந்து நாகை நோக்கி வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் இதில் ரிஸ்வான் மற்றும் பாசித் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கீழ்வேளூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்ற படுகாயம் அடைந்த நூஃபுலை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து கீழ்வேளூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மகேஸ்வரி சம்பவத்தன்று தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
    • மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள மரப்பேட்டையை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 45).

    சம்பவத்தன்று இவர் தனது கணவருடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார். மொபட் உடுமலை - பொள்ளாச்சி ரோட்டில் சென்ற போது அந்த வழியாக சென்ற லோடு வேன் மொபட் மீது மோதியது.இதில் மகேஸ்வரி தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (35). லோடு மேன். சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் பாப்பம்பட்டி - செட்டிப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மசக்காளி பாளையத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 42). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் விளாங்குறிச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அய்யப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் கணக்குப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 55). இவர் நேற்று மதியம் மோட்டார் சைக்கிளில், உடையாப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக பாஸ்கரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பாஸ்கரன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் மோகன் கொடுத்த புகார் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், சேலம் மணியனூர் அருகே உள்ள நாட்டாமங்கலம் பகுதியில் தங்கி இருந்து வேலை பார்த்து வரும் பீகாரைச் சேர்ந்த வாலிபர் பரூன் சிங் (25), நேற்று இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பரூன் சிங் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இவரது சகோதரர் ரூபேந்திர சிங் கொடுத்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் மன்னார்பாளையம் வாய்க்கால் பட்டறை காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (35). இவர் நேற்று முன்தினம் மதியம் மோட்டார் சைக்கிளில், காந்தி நகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையை கவனிக்காமல் வேகமாக சென்றதால், நிலை தடுமாறு கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் தினேஷை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தினேஷின் மனைவி லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சாம்பல் ஏற்றிக்கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர்.

    கடலூர்:

    விருத்தாச்சலம் அருகே தொரவலூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா அருளரசன். இந்த தம்பதி மகள் ஓவியா (வயது 15). விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஓவியாவின் பெற்றோ ர்கள், மேல்ம ருவத்தூர் கோவிலுக்கு சென்றதினால், பள்ளி யிலிருந்து அவர்களது மகளை, வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக, அதே ஊரை சேர்ந்த, உறவினரான குமாரசாமி (64) என்பவர் தனது பேரனான தருணுடன் (6), மோட்டார் சைக்கிளில் சென்றார். பள்ளியில் மாணவி ஓவியாவை அழைத்து கொண்டு தொரவளுர் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குமாரசாமி ஓட்டி வந்துள்ளார்.

    அப்போது நெய்வே லியில் இருந்து சாம்பல் ஏற்றிக்கொ ண்டு, கோயமுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, கோமங்கலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு லாரியை நிறுத்தாமல் ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக விருத்தா ச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    தகவல்அறிந்த போலீசார் 3 பேர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரியை, வேப்பூரில் ேபாலீசார் மடக்கிப் பிடித்தனர். லாரி ஒட்டி வந்த விருத்தாசலம் அருகே மாத்தூரை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவரை போலீசார் கைதுசெய்தனர். சாலை விபத்தில் பள்ளி மாணவி உட்பட 3 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவத்தால் தொரவலூர் கிராமம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

    • ரவி காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.
    • கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது.

    கோவை,

    கோவை சூலூரை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவர் சுல்தான்பேட்டை மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது காரில் ஒடக்கால்பாளையத்தில் இருந்து சுல்தான்பேட்டை நோக்கி சென்றார்.

    கார் எஸ்.எஸ். நகர் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த முள்வேலி மீது ேமாதியது. இதில் படுகாயம் அடைந்த ரவியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சுல்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூர் தொட்டிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன் (36). டெய்லர்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான பரமக்குடியை சேர்ந்த சண்முகநாதன் (25) என்பவரை தனது மொபட்டில் ஏற்றிக்கொண்டு அன்னூர்-கரியம் பாளையம் ரோட்டில் சென்றார்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் நின்று கொண்டு இருந்த தனியார் பஸ் மீது மொபட் மோதியது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டியராஜன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செட்டிப்பாளையம் அருகே உள்ள அருகம்பாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரதாப் (24).

    சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சரவணம்பட்டி சத்தி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் விஷ்ணு பிரதாப் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • இளங்கோவன் சம்பவத்தன்று கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.
    • காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காட்டூரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 57). காவலாளி. சம்பவத்தன்று இவர் கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் இளங்கோவன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இளங்கோவன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சூலுர் அருகே உள்ள அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கவேலு (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் அவினாசி - கோவை ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகிறார்கள்.

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கசாமி (36). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை -மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • உத்தமபாளையம் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற வாலிபர் விபத்தில் பலியானார்.
    • மேலும் பெண் மற்றும் மற்றொரு வாலிபர் விபத்தில் உயிரிழந்தனர்.

    உத்தமபாளையம்:

    கேரளமாநிலம் எர்ணாகுளம் திருகளத்தூர் பகுதியை சேர்ந்த அனுப்(32). இவர் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள கிரசரில் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    அனுப் மற்றும் அவருடன் வேலைபார்த்த 4 பேர் கேரளமாநிலத்தில் உள்ள தூக்குபாலத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் சின்னமனூருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    பைபாஸ் சாலையில் கோகிலாபுரம் விளக்கு பகுதியில் காரை நிறுத்திவிட்டு அனுப் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் அனுப் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதை பார்த்ததும் அதிருப்தி அடைந்த அவரது நண்பர்கள் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பை சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அனுப் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில் உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சின்னமனூரை சேர்ந்தவர் வீரக்குமார்(35). இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சின்னமனூர்-ஓடைப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஜீப் வீரக்குமார் பைக் மீது மோதியது.

    இதில் காயமடைந்தவரை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு வீரக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள்(30). இவர் தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் வடுகபட்டி-இ.காமாட்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அதிவேகமாக சென்றதால் நிலைதடுமாறிய பைக் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற கவிழ்ந்த பேச்சியம்மாளுக்கு படுகாயம் ஏற்பட்டது.

    பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×