என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • கடந்த 13-ந் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்ததது..
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவ துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    நவராத்திரி பெருவி ழாவை முன்னிட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி நாள்தோறும் சிறப்பு பூஜை நடைபெற்று வந்ததது.

    நிகழ்ச்சி நாளில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார்.

    நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மகாசண்டி யாகம் நடைபெற்றது.

    இதில் கோ பூஜை, சுகாசினி பூஜை,வடுக பூஜை, சப்த கன்னிகா பூஜை, பிரம்மச்சாரியார் பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து 7அடி அகலம், 7அடி ஆழத்தில் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு யாகத்திற்கு பழங்கள், 108 மூலிகைகள் திரவியங்கள் கொண்டு யாகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கோவிலை வலம் வந்து ஸ்ரீ தேவதுர்க்கை அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து திருப்பய த்தங்குடியில் அரசுஆரம்ப சுகாதார நிலையம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் அதற்கான இடத்தையும், அதை தொடர்ந்து வடகரை ஊராட்சியில் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது திருமருகல் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் ரஜினி தேவி பாலதண்டாயுதம், பாண்டியன், மோகன், ஊராட்சி செயலர் பிரகாஷ் குமார் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • நாகை மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

    மேலும் இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, நாளை அக்டோபர் 25 ஆம் தேதி நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்காளதேச கடற்கரையை கடக்க அதிக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

    இந்நிலையில் புயல் உருவாகிய உள்ளது என்பதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை ,எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2 எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மீன்வளத்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையின்படி நாகை மாவட்டத்தில் 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாதுகாப்பு உபகரணங்கள், கோப்புகள் சரஸ்வதி படத்திற்கு முன்பு வைக்கப்பட்டது.
    • அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட தலைமை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ளது.

    இங்கு தீயணைப்பு வாகனங்கள் அவசர ஊர்திகள் அலங்க ரிக்கப்ப ட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன தீயணைப்புக்கு தேவையான கருவிகள், தலைக்கவசம், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கோப்புகள் சரஸ்வதி தேவி புகைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

    இதைப்போல் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரணியம் உள்ளிட்ட 7 தீயணைப்பு நிலையங்களிலும் நிலை யங்களிலும் ஒரே நேரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தீபார தனை ஏற்றி வழிபட்டனர்.

    பின்பு அனைத்து வாகனங்கள் ஊர்வலமாக சென்றனர் இவ்விழாவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் முகீசன் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் பங்கேற்றனர்.

    • தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுரை அடுத்த தேவூரில் தேவதுர்கை அம்மன் கோவில் உள்ளது.

    நவராத்திரியை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக உலக அமைதி வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது.

    தேவூர் தேவபுரீஸ்வரர் கோவிலில் இருந்து விஜயேந்திர சுவாமிகள் தலைமையில் புறப்பட்ட பால்குட ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.
    • சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர், நெய்விளக்கு, பஞ்சநதிக்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் 4 ஆயிரம் ஏக்கரில் முல்லைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.

    இந்த பகுதியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை முல்லைப்பூ சீசன் காலமாகும்.

    இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லைப்பூக்கள் விளையும்.

    இங்கிருந்து பட்டுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு முல்லைப்பூ விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தற்போது வேதாரண்யம் பகுதியில் பருவநிலை மாறுபாடு காரணமாக திடீரென பனிப்பொழிவு காணப்படுகிறது.

    இதனால் முல்லைப்பூ செடிகளின் இலைகள் உதிர்ந்து பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    நாள் ஒன்றுக்கு 1 டன் முதல் 2 டன் வரை மட்டுமே வெளியூர்களுக்கு பூக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    சீசன் காலத்தில் முல்லைப்பூ கிலோ ரூ.50-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது.

    தற்போது கிலோ ரூ.500 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. பனிப்பொழிவால் முல்லைப்பூ அதிகம் விளையாததால் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

    விளைச்சல் அதிகமான காலங்களில் பூ பறிப்பதற்கான கூலிக்கு கூட கட்டுப்படியாகாத விலை கிடைக்கிறது.

    இதனால் சில நேரங்களில் பூவை பறிக்காமலேயே விட்டு விடுகிறோம்.

    இந்த நிலையில் தற்போது எதிர்பாராத வேளையில் பனிப்பொழிவு ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    • பள்ளிகளில் அருகே கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
    • விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் பள்ளி அருகில் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகை, புத்தூர், மஞ்சக்கொல்லை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோவன் ஆலோசனையின் படி, புகையிலை பொருட்கள் விற்பனை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில் குமார், நவீன்பாலா, ராகுல், தேவகுமார், விக்னேஷ், பாலமுருகன் ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

    இது குறித்து வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகை செல்வன் கூறியதாவது:-

    புகையிலை கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களை அமல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வணிக வளாகங்கள், அலுவலகங்களில் 'புகையிலை பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதி' என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகை வைக்க வேண்டும்.

    சிகரெட் பற்ற வைப்பதற்கு ஏதுவாக எரியூட்டப்பட்ட கயிறு, லைட்டர் ஆகியவற்றை கடைகளில் வைத்திருக்க கூடாது.

    பள்ளிகளில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.

    18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது இல்லை என்ற வாசகம் அடங்கிய விளம்பர பலகையை கட்டாயமாக வணிக வளாகங்களில் வைக்க வேண்டும்.

    இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டு சிறை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது பொது சுகாதார சட்டங்களை மீறிய உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அலுவலர்கள் நோட்டீஸ் வழங்கி எச்சரித்தனர்.

    • தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் ஆகிய 4 பேரும் நேற்று நள்ளிரவு கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 10 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு பைபர் படகில் இலங்கை கடல் கொள்ளையர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி படகில் இருந்த மீன்கள், ஜி.பி.எஸ். கருவி, செல்போன்கள் உள்ளிட்ட சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்நிலையில் இன்று காலை ஆறுகாட்டுதுறைக்கு கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    தொடர்ந்து இலங்கை கடல் கொள்ளையர்கள் மீனவர்களை தாக்கி கொள்ளையடித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வருவதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவல்துறையினரும் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
    • வீரமரணம் அடைந்தவர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டது.

    இதனை முன்னிட்டு உயிரிழந்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவு தூண் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்க்கீஸ் , போலீஸ் சூப்பிரண்டு ஹரிஷ் சிங் ஆகியோர் நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    தொடர்நது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு , துணை போலீஸ் சூப்பிரண்டுகள் , ஊர்க்காவல் படையினர் உட்பட அனைத்து நாகை மாவட்ட காவல்துறை யினரும் மலர் வளையம் வைத்து வீரவ ணக்கம் செலுத்தினார்கள்.

    பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்பு ஆயுதப்படை காவல் ஆய்வாளரின் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள், வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு 21 குண்டுகள் 3 முறை முழங்க அஞ்சலி செலுத்தி, போலீசார் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    • பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.
    • 5 வகையான உணவுகள் வாழை இலை போட்டு பறிமாறப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது.

    இதில் வேளாங்கண்ணி திருப்பூண்டி பூவைத்தேடி, கீழையூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100- க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர்.

    சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது.

    வேளாங்கண்ணி பேரூராட்சித் தலைவி டயானா சர்மிளா , கீழையூர் வட்டார திட்ட அலுவலர் சித்ரா ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு ஆகியோர் கலந்துக் கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர்.

    மேலும் புளி சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், எழுமிச்சை சாதம், இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.

    கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள வேண்டிய உணவு முறைகள் மற்றும் இயற்கை உணவுப் பொருட்களை அங்கன் வாடி பணியாளர்கள் கர்ப்பிணி பெண்களுக்கு செய்து கொடுத்தனர்.

    • கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது.
    • சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்

    நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி குற்றம்பொருத்தானிருப்பு கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவம் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் மற்றும் உதவி இயக்குனர் அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, சினை ஊசி, குடற்புழு நீக்கம் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டது. முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் லாரன்ஸ், பூபதி, ராதா ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வாய்மேட்டை அடுத்த அண்ணாப்பேட்டை ஊராட்சியில் நடந்த கால்நடை சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னதாக கால்நடை உதவி மருத்துவர் கமலப்பட்டு வரவேற்றார். ஒன்றியக்குழு உறுப்பினர் கோமதி தனபால், கால்நடை உதவி மருத்துவர் சிவசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை பராமரிப்பு உரிமையாளர்களுக்கு மேலாண்மைகான விருது வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    • பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்க ண்ணியை அடுத்த பிரதாபரா மபுரம் வடக்கு பாலத்தடியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீவல்லவ கணபதி கோவிலில் நவராத்திரி விழாவை யொட்டி தினந்தோறும் பல்வேறு அலங்காரங்கள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி 5 நாள் நிகழ்ச்சியான நேற்று மஹா லெட்சுமி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். முன்னதாக பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தயிர் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மஹாதீ பாரதனை காண்பிக்க ப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ×