search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடத்தில் நாளை ஐப்பசி பவுர்ணமி விழா
    X

    கோரக்கர் சித்தர்.

    கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடத்தில் நாளை ஐப்பசி பவுர்ணமி விழா

    • ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • வருகிற 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடம் உள்ளது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதிலும், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐப்பசி பவுர்ணமி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு நாளை மதியம் சுவாமிக்கு அன்னாபி ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்ப டும். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

    அதனை தொடர்ந்து, வருகிற 29-ந் தேதி பரணி விழா நடைபெற உள்ளது.

    அன்று இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும்.

    தொடர்ந்து, 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    இதற்காக இன்று காலை முதலே அதிகளவில் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    Next Story
    ×