என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடத்தில் நாளை ஐப்பசி பவுர்ணமி விழா
- ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- வருகிற 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா நடைபெற உள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வடக்கு பொய்கைநல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி பீடம் உள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதிலும், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐப்பசி பவுர்ணமி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாளை மதியம் சுவாமிக்கு அன்னாபி ஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்ப டும். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.
அதனை தொடர்ந்து, வருகிற 29-ந் தேதி பரணி விழா நடைபெற உள்ளது.
அன்று இரவு 8 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்படும்.
தொடர்ந்து, 30-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.
இதற்காக இன்று காலை முதலே அதிகளவில் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்