என் மலர்
நாகப்பட்டினம்
- சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
- நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம்:
நாைக மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் சிறந்த தூய்மை பணி மற்றும் மக்கள் நலம் சார்ந்த பணிகளில் சேவையாற்றிய மாணவிகள், அலுவலர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மங்களேஸ்வரி, என்ஜினீயர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் வரி வசூல், சுகாதாரம், அலுவலகம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையர் ஹேமலதா வரவேற்றார். மின்பிரிவு கரிகாலன் நன்றி கூறினார்.
- டிராக்டரை பறிமுதல் செய்து உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்.
- மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா செம்போடையை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மனைவி சரிதா இவருக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றிமணல் ஏடுத்தாகவேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர்ஜெயராஜ் பவுலினுக்கு தகவல் கிடைத்ததுசம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின்வேதாரண்யம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் ரவி, இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் சென்று டிராக்டரை பறிமுதல் செய்தனர் புகாரின் போரில் டிராக்டர் உரிமையாளர் ராமச்சந்திரன், செந்தில் ஆகியோரை கைது செய்தனர்
மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட கார்த்தி, பாஸ்கர், நில உரிமையாளர் சரிதா ஆகிய மூன்றுபேரை தேடி வருகின்றனர்.
- காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதியும், வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.
- நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, உம்பளச்சேரி, மணக்குடி உள்ளிட்ட ஆற்றுப் பாசன பகுதிகளில் வழக்கமாக 5000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணை ஒரு மாதம் முன்பாக திறந்ததால் சுமார் 8000 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது குறுவை சாகுபடிகள் நன்றாக வளர்ந்து கதிர் அதிகளவில் வெளிவந்த நிலையில் குறுவை சாகுபடியில் கதிர் நாவாய் பூச்சி தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. பருவம் தப்பிய மழையால் நெல் சூழ் பிடிக்கும் வேளையில் கதிரில் தண்ணீர் விழுந்தும் காற்றில் நெல் மணிகள் ஒன்றொடு ஒன்று மோதி நெல்மணிகள் வெடித்தும் வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது. உம்பளச்சேரி பகுதியில் காணப்படும் கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை வேளாண்மை துறை உதவி இயக்குனர் கருப்பையா மற்றும் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் ஆலோசனையின் பேரில் தலைஞாயிறு உதவி வேளாண்மை அலுவலர் கலைவாணி, விதை அலுவலர் ஜீவா, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்பு, நாவாய் பூச்சி தாக்குதலுக்கு வசம்பை பொடியாக்கி வயலில் தூவினால் நாவாய் பூச்சைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
- பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் இரண்டு அம்மன் சிலைகள் இருந்துள்ளது.
- சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலம் சோழ அய்யனார் கோவில் பின்புறம் கற்சிலைகள் இருப்பதாக திட்டச்சேரி போலீ சாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பெயரில் திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒன்றரை அடியில் ராகு சிலை, ஒன்றரை அடியில் கேது சிலை, 1 அடியில் அம்மன் சிலைகள் 2ம் இருந்துள்ளது.
அதனை கைப்பற்றிய திட்டச்சேரி போலீசார் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். சிலைகள் நான்கும் அகரக்கொந்தகை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் அறையில் வைத்து பூட்டப்பட்டுள்ளது. நாளை நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக தெரிகிறது.
கற்சிலைகளை யார் இங்கு கொண்டு வந்தது. எதற்காக கோவிலின் பின்புறம் வைத்து சென்றனர். மற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்டதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
- காரைக்கால் மார்க்கத்திலிருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் உள்ள புதிய வழித்தடத்தில் புதுச்சேரி போக்குவரத்து கழகம் சார்பில் புதிய பஸ் இயக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மார்க்கத்தில் இருந்து நிரவி, சேஷமுலை, இடையாத்தாங்குடி, பண்டாரவாடை, திருமருகல், திட்டச்சேரி, திருப்பட்டினம் வழியாக காரைக்கால் சென்றடைகிறது.இந்த புதிய வழித்தடத்தை காரைக்கால் மாவட்டம் விழுதியூரில் புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, நிரவி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சேஷமுலை, இடையாத்தாங்குடி, திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு பஸ்சை வரவேற்றனர். இடையாத்தாங்குடியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சந்திரகலா கிருஷ்ணமூர்த்தி, முருகன், சிவகாமிஅன்பழகன், இடையாத்தங்குடி சுப்பிரமணியன், சேஷமூலை திருநாவுக்கரசு, விழுதியூர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திட்டச்சேரி பஸ் நிலையம் அருகில் பேரூர் திமுக செயலாளர் முகமது சுல்தான் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயக்கிய பஸ்சை வரவேற்றனர்.
இதில் புதுச்சேரி மாநில போக்குவரத்து கழகத்தின் காரைக்கால் கிளை மேலாளர் அருள்ஜோதி, திருமருகல் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இந்திரா அருள்மணி, பெரியமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
- நேற்றிரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
- தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.
வேதாரண்யம்:
வேதாரணியம் சேதுர ஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 67). இவர் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலின் அருகில்மே லமட வளாகத்தில் 40 ஆண்டுகளாக ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவரது ஓட்டலின் பின்பக்கம் உள்ள கீற்று சமையல் கூடம் தீடீரென்று தீப்பிடித்து எரிந்தது தீ மளமள என்று பரவி சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது.
தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் மேலும் பரவாமல் அணைத்தனர். டிஎஸ்பி முருகவேல் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பார்னவையிட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பு பொருட்கள் எரிந்து முற்றிலும் நாசமாயின.
- அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் சமாதான புறா பறக்கவிட்டனர்.
- 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம்:
நாகையில் நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 7 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுகந்திர தின விழாவுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல்துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் சமாதான புறா பறக்க விட்டனர். தொடர்ந்து விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.
அதேபோல் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு துறைகள் சார்பில் 110 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 41 லட்சத்து மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது.
- முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி வெள்ளத்திடலில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 10-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கஞ்சி வார்த்தல், சக்தி கரகம் எடுத்தல், பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நேற்றுமுதல் நாள் முக்கிய நிகழ்ச்சியான சந்தன காப்பு அலங்காரம், தீபாராதனை, இரவு தெய்வீக வேடங்களுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. அம்மனுக்கு அபிஷேகம், அக்னி கப்பரை வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
- பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
- மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சியில், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 2.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஆசாத் மார்கெட் கட்டுமானப் பணி மற்றும் மகாலெட்சுமி நகரில் ரூபாய் 1.675 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை.
ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் ஒருங்கிணைந்த அறிவுசார் மையம் கட்டும் பணியினையும், மூலதன மான்ய நிதியின் கீழ், ரூபாய் 5.30 கோடி மதிப்பீட்டில் நாகப்பட்டினம் அக்கரைக்குளம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பாலம் கட்டுமானப் பணியினையும் நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கும் படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, நகராட்சி செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
- தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம்:
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு, வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் என தேசிய கொடிகளை பறக்கவிட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் பெரிய மினோரா வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
நாகூர் தர்கா நிர்வாகத்தின் சார்பாக தர்காவின் பெரிய மினோராவில் மூவர்ண நிறத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து செல்கின்றனர். இதேபோல நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகமும் கண்கவர் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முகப்பு பகுதி நேற்று முதல் 3 நாட்கள் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து.
- விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் 1525 வகை பாரம்பரிய மருத்துவம் கொண்ட நெல் வகைகளை பயிரிட்டு அதனை சேகரித்து வைத்து உள்ளார்.
தமிழகத்தில் நம்மாழ்வார் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் மீட்டெடுப்புகளை தமிழக அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய 1525 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர்.
அதனை தனக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விளை நிலத்தில் பாத்திகள் அமைத்து அவற்றை அடையாளப்படுத்தி ஒவ்வொரு பாத்தியிலும் ஒவ்வொரு வகையான நெல்மணிகளை விதைத்து. அதனை அறுவடை செய்யது பாதுகாத்து வருகிறார்
1525 வகையான நெல்மணிகளை ஆவணப் படுத்தும் நோக்கோடு ஒவ்வொரு வகை நெல் கதிர்கள அறுவடை செய்து அடையாள குறியின் அடிப்படையில் ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்தி வைத்துள்ளார் பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் அடைக்கப்படு அதனை காட்சிப்படுத்தி வைத்துள்ளார்இ ப்பணியை லாபநோக்கமின்றி சேவை மனப்பாண்மையில் அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது மீட்டெடுப்புகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விருதினை நாளை சுதந்திர தின விழாவில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுகிற வகையில் பாரம்பரிய வேளாண் முறைகளையும் இயற்கை உர பயன்பாட்டையும் ஊக்கப்படுத்தவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.
- 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை அருகே கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரத்தில் புனிதசெபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 51-வது ஆண்டு திருவிழாவானது கடந்த 4-ந்தேதி கொடியே ற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை மாலை நவநாள் ஜெபம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.தேரை பங்குத்தந்தை வின்சென்ட்–தேவராஜ் புனிதம் செய்து தொடங்கி வைத்தார். இதில் மின் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் முன்னதாக மிக்கேல் சம்மன்சு தேரும், அடுத்து புனிதபாத்திமா அன்னை, சூசையப்பர், திருப்பூண்டி பங்குத்தந்தை வின்சென்ட்தேவராஜ், நாகை மறை மாவட்ட அதிபர் பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது.மற்றும் செபஸ்தியார், கடை சியாக ஆரோக்கியமாதா தேர் சென்றது. அப்போது வாணவேடிக்கை நடைபெற்றது.
தேரானது முக்கிய வீதிவழியாக சென்று பின்னர் ஆலயத்தை அடைந்தது. நேற்று காலை பங்குத்தந்தை தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து குழந்தைகளுக்கு ஞானஸ்தானம், புதுநன்மை வழங்கப்பட்டது. பின்னர் மாலை கொடி இறக்கம் நடைபெற்றது.
இதில் புனித அன்னாள் சபை சகோதரிகள், புனித செபஸ்தியார் இளைஞரா நற்பணிமன்றம், ஆரோக்கிய ஆன்னை அன்பியம், புனிதசெபஸ்தியார் அன்பியம் மற்றும் பக்தர்கள் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






