என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.
    • பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பாக போதை பொருட்களுக்கு எதிரான சமுதாய விழிப்புணர்வு பேரணி நாகை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நாகூர் தர்கா அலங்கார வாசல் வரை நடைபெற்றது.

    கலெக்டர் அருண் தம்புராஜ், போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேரணியில் மாணவர்களுடன் ஷாநவாஸ் எம்.எல்.ஏ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நவுஷாத், நாகூர் தர்கா மேனேஜி டிரஸ்டி காமில் சாஹிப், தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டி உறுப்பினர் கலீபா சாஹிப், நாகூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் சாஹா மாலிம், நாகை நகர்மன்ற உறுப்பினர் நத்தர், கௌத்தியா மேல்நிலை பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் சாதிக் சாஹிப் கலந்து கொண்டனர்.

    பேரணியில் மது, சிகரெட், கஞ்சாவினால் ஏற்படும் தீமைகள் பற்றி துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு கோஷமிட்டனர்.

    நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பென்னட் மேரி நன்றி கூறினார்.

    • நாகை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
    • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேர் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்படியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்ட மீனவர்கள் 9 பேரையும் திரிகோணமலை கடற்படை முகாமுக்கு இலங்கை கடற்படை கொண்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

    இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனே மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம் :

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் பழைமை வாய்ந்த நல்லமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலின் ஆண்டு திருவிழா கடந்த 12ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் இரவு நடைபெற்றது.

    30 அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    அதனை தொடர்ந்து மாவிளக்கு, அர்ச்சனை செய்தும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

    • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாசிரியர் பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் சார்பில் "வாங்க பேசலாம்" கலை, இலக்கிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் வட்டாரக் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.

    அமைப்பின் மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி,மாவட்டப் பொருளாளர்கைலாசம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர் நாட்டுப்புறப் பாடகர்கள் கோவிரா சேந்தின், சேதுமாதவன், அகிலா, சுகன்யா, கார்த்திக் உள்ளிட்டோர் தங்களின் படைப்புகளை பதிவி ட்டனர்.

    தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாரியர் பாஸ்க ரன் கலைஇலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    நிகழ்ச்சியில், அமைப்பின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, சத்தியசிவம், செந்தில்நாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் பெரும ன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன் எழுதிய வெண்மணிக் காப்பியம் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியருக்கு பாராட்டு விழாவை ஆக.27ம் தேதி, பஞ்சநதிக்குளம் மேற்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும்இ ளம் தலைமுறையினரிடையே நேரிடும் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு,பள்ளி, கல்லூரிகளில் நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    • 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.
    • உட்கட்டமைப்பு உள்ளிட்ட–வைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த நாகூரில் உள்ள தமிழ்நாடு ஜெயலலிதா மீன்வளபல்கலை க்கழகத்தி ன் 7வது பட்டம ளிப்பு விழா நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர்.

    215 இளங்கலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுகலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்டங்கள் உள்ளிட்ட 339 மாணவ- மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் பட்டங்களை வழங்கினார்.

    பின்னர் ஆளுநர் வாசிக்க பட்டம் பெற்ற மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொ ண்டனர்.

    நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுகையில்;

    உலக பொருளாதாரம் வேகமாக முன்னேறி கொண்டு இருக்கும் சூழலில், அதே வேகத்தில் நாமும் முன்னேற வேண்டும். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம்.

    அடுத்த வர 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்கவேண்டும்.

    நாட்டின் முன்னேற்றத்திற்கு இளை–ஞர்கள் பொறுப்பேற்க வேண்டும். மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

    மகளிர் மேம்பாடு, தொழிற்துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்டவைகளில் தமிழ்நாடு இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்தார்.

    விழாவில் நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், பல்கலைகழக துணை வேந்தர்கள், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, நிவேதாமுருகன், மீன்வளத்துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பட்டமளிப்பு விழாவிற்கு கவர்னர் வருகை தந்ததை அடுத்து நாகை மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிட பணிகள் நடைபெறுகிறது.
    • ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினை ஆய்வு செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி நாகூர் நகரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.80 லட்சம் மதிப்பீட்டில், தங்கும் வசதியற்றவர்கள் தங்குவதற்கான கட்டிடப் பணி நடைபெறுகிறது.

    அதனை ஷாநவாஸ் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், நாகூர் பீரோடும் தெருவில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணி, நாகூர் வள்ளியம்மை நகரில் நிறைவடைந்துள்ள சிமெண்ட் சாலை பணி, சாமந்தான்பேட்டை பகுதியில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியின் கீழ், ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் நகர் நல மையம் கட்டும் பணியினையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் செயற் பொறியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • சுமார் 1,036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ஆகியவை சேர்த்து சுமார் 1036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்குவீட்டிற்கே சென்று தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளாகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2வது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பினமாக 18 முதல் 59 வயதுடைய அனைவரும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார்.
    • விவசாயிகள் காளான் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழிதேவன் கிராமத்தில் 2022-23 வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி நடைப்பெற்றது.

    திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொறுப்பு கலைச்செல்வன் தலைமையில் பயிற்சி நடைப்பெற்றது. பயிற்சிக்கு ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் வரவேற்றார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி இன்றைய காலகட்டத்தில் காளாண் வளர்ப்பின் அவசியம் அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து கூறினார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சந்திரசேகரன் காளாண் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் பற்றி விரிவுரை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தார்.

    விவசாயிகள் காளாண் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் வட்டாரத்தில் நடைமுறை படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலவலர் சிந்து மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரபு ஆகியோர் செய்து இருந்தனர்.

    • புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகையிலிருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.
    • எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்துள்ள ஆரியநாட்டுதெரு கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிமாறனின் மகன் ஹரிஹரமாதவன். தனியார் கல்லூரியில் ஏரோஸ்பேஸ் படித்து வரும் இவர் புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகையில் இருந்து 2000 கிலோமீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டார்.

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இவரது சைக்கிள் பயணத்தை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    புவி வெப்பமயமாவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லூரி மாணவன் ஹரிஹர மாதவன் நாகையில் இருந்து ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி அங்கிருந்து கோவை, தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, கும்பகோணம் என 2000 கிலோமீட்டர் சைக்கிளிலேயே தனது பயணத்தை தொடர்கிறார்.

    இதன் மூலம் வழி நெடுகிலும் சந்திக்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் இவர் புவி வெப்பமயமாதல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்கிறார்.

    • நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.
    • லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைப்பெற்று வரும் பணிகள் குறித்து தமிழக சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனர்.

    மன்னாா்குடி எம்.எல்.ஏ டி.ஆா்.பி. ராஜா தலைமையில் எம்.எல்.ஏக்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சுணன், ஈஸ்வரன், ராமச்சந்திரன்,அருள், அன்பழகன், பாலசுப்ர மணியன், செல்லூர் ராஜு, ராஜ்குமார் , முகமது ஷாநவாஸ் உள்ளிட்ட 11 பேர் இந்த குழுவில் வந்தனர். வேதாரண்யம் தாலுகா ஆலங்குடியில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்று வரும் ட்ரோன் மூலமான பூச்சி மருந்து தெளிப்புப் பணியை பாா்வையிட்டனர்.

    தொடர்ந்து ஆசியாவி லேயே 2வது மிகப்பெரிய சேமிப்பு கிடங்கான கோவில்பத்து கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொ ருள் வாணிபக் கழக தானிய சேமிப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டார்.

    கஜா புயலின் போது சேதமடைந்த நெல் சேமிப்பு கிடங்கில்மேற்கொ ள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள் குறித்து, பார்வை யிட்டு இருப்பில் உள்ள நெல்மணிகளின் தரம் மற்றும் ஈரப்பதத்தின் அளவினை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

    மேலும் தற்போது ரூ.6 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள தரைதள பணிகள் மற்றும் தானியங்கு முறையில் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல்மணியை சேமிப்பு கிடங்குக்கு அனுப்ப உள்ள திட்டப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கோடியக்கரை, கோடியக்காடு வனவிலங்கு பகுதியில் ஆய்வு மேற்கொ ண்டனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி முச்சந்தி பகுதியில் தெற்குபொய்கைநல்லூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன் (வயது 40) என்பவர் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

    அதே பகுதியை சேர்ந்த நண்பருடன் அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து மனோகரனை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் மணி வேலுக்கும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தகவல் அறிந்த நாகை போலீஸ் சூப்பிரண்ட் ஜவகர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • வீட்டில் தனியாக வசித்து வரும் ரெத்தினசபாபதி நேற்றிரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார்.
    • கட்டிலில் படுத்திருந்த ரெத்தினசபாபதியை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலத்தில் வீட்டில் தனியாக இருந்த முதியவர் ரெத்தினசபாபதி (வயது 82) அடித்து கொலை செய்யபட்டுள்ளார்.

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தில் வசிப்பவர் ரெத்தினசபாபதி. விவசாயி இவர் கருப்பம்புலத்தில் வீட்டில்தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூங்கிகொண்டிருந்தார். காலையில் பால் எடுத்து வந்த பாலமுருகன் பார்த்தபோது ரெத்தினசபாபதி வீட்டின் முன்பு கட்டிலில் படுத்திருந்த வரை அடித்து யாரோ கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    புகாரின் போரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் சுப்ரியா சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை நடந்தது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×