search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்
    X

    கூட்டத்தில் தமிழ் அமைப்பின் விருதுபெற்ற பாஸ்கரன் பாராட்டப்பட்டார்.

    நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்

    • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாசிரியர் பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் சார்பில் "வாங்க பேசலாம்" கலை, இலக்கிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் வட்டாரக் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.

    அமைப்பின் மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி,மாவட்டப் பொருளாளர்கைலாசம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர் நாட்டுப்புறப் பாடகர்கள் கோவிரா சேந்தின், சேதுமாதவன், அகிலா, சுகன்யா, கார்த்திக் உள்ளிட்டோர் தங்களின் படைப்புகளை பதிவி ட்டனர்.

    தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாரியர் பாஸ்க ரன் கலைஇலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    நிகழ்ச்சியில், அமைப்பின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, சத்தியசிவம், செந்தில்நாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் பெரும ன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன் எழுதிய வெண்மணிக் காப்பியம் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியருக்கு பாராட்டு விழாவை ஆக.27ம் தேதி, பஞ்சநதிக்குளம் மேற்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும்இ ளம் தலைமுறையினரிடையே நேரிடும் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு,பள்ளி, கல்லூரிகளில் நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    Next Story
    ×