search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Creativity"

    • புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தினார்.
    • மாணவ- மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யாமந்திர் சி.பி.எஸ்.இ.பள்ளியில் நேற்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தாளாளர் விஜயலெட் சுமி காமராஜ் தலைமை தாங்கினார்.

    பள்ளி நிர்வாகி இளை யராஜா முன்னிலை வகித்தார். சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் சாந்த செல்வி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகளின் மாவட்டக்கல்வி அலுவலர் மாயக்கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.

    மேலும் பள்ளி மாணவர்களை வாசித்தல் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க வும், தன்னார்வதிறனை மேம்படுத்தவும் வலியுறுத்தினார்.

    இதில் எல்.கே.ஜி முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.முடிவில் மெட்ரிக்பள்ளி முதல்வர் அருள் நன்றி கூறினார்.

    • பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
    • நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவைகளை தேர்வு செய்தனர்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் -ஆலக்குடி சாலையில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் "விஞ்ஞான் பெஸ்ட் "என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி ரம்யா சத்தியநாதன் கல்விக்குழும தலைவர் பொறியாளர் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.

    ரம்யா சத்தியநாதன் கல்வி குழுமச் செயலர் ஜெனட் ரம்யா முன்னிலை வகித்தார்.

    தமிழ்நாடு அறிவியல் கழகத் துணைத் தலைவர் பேராசிரியர் சுகுமாரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர்கள் காயத்ரி,

    சுந்தரநாயகி, ரமேஷ் பாபு ஆகியோர் கண்காட்சியின் நடுவர்களாக கலந்து கொண்டு மாணவர் படைப்புக்களில் சிறந்தவை களை தேர்வு செய்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் 120 தலைப்புகளில் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    முன்னதாக ரம்யா சத்தியநாதன் பள்ளி ஆசிரியர் ஹேமலதா வரவேற்றார்.சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் ஃபெர்னாண்டஸ், துணை முதல்வர் அம்பேத்கர் ஆ கியோர் நன்றி தெரிவித்து பேசினர்.

    • தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாசிரியர் பாஸ்கரன் கலை இலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் சார்பில் "வாங்க பேசலாம்" கலை, இலக்கிய அமர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் வட்டாரக் கிளைத் தலைவர் குழந்தைவேலு தலைமை வகித்தார்.

    அமைப்பின் மாவட்டத் தலைவர் புயல் குமார், மாவட்டச் செயலாளர் அம்பிகாபதி,மாவட்டப் பொருளாளர்கைலாசம் ஆகியோர் முன்னிலை வகி த்தனர் நாட்டுப்புறப் பாடகர்கள் கோவிரா சேந்தின், சேதுமாதவன், அகிலா, சுகன்யா, கார்த்திக் உள்ளிட்டோர் தங்களின் படைப்புகளை பதிவி ட்டனர்.

    தமிழ் அமைப்பின் விருதுபெற்ற தலைமையாரியர் பாஸ்க ரன் கலைஇலக்கிய பெருமன்றத்தால் பாராட்டப்பட்டார்.

    நிகழ்ச்சியில், அமைப்பின் நிர்வாகிகள் பார்த்தசாரதி, நல்லாசிரியர் வைரக்கண்ணு, சத்தியசிவம், செந்தில்நாதன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் பெரும ன்றத்தின் முன்னோடிகளில் ஒருவரான எழுத்தாளர் கவிஞர் வாய்மைநாதன் எழுதிய வெண்மணிக் காப்பியம் நூல் அறிமுக விழா மற்றும் நூலாசிரியருக்கு பாராட்டு விழாவை ஆக.27ம் தேதி, பஞ்சநதிக்குளம் மேற்கில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    தமிழறிஞர் நெல்லை கண்ணன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மேலும்இ ளம் தலைமுறையினரிடையே நேரிடும் குற்ற சம்பவங்களை கருத்தில் கொண்டு,பள்ளி, கல்லூரிகளில் நன்நெறி ஒழுக்கம் சார்ந்த பாடத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

    ×