search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறந்த பணியாளர்களுக்கான பரிசு வழங்கும் விழா
    X

    விழாவில் சிறந்த பணியாளருக்கான பரிசை நகர்மன்ற தலைவர் புகழேந்தி வழங்கினர்.

    சிறந்த பணியாளர்களுக்கான பரிசு வழங்கும் விழா

    • சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.
    • நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

    வேதாரண்யம்:

    நாைக மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் சிறந்த தூய்மை பணி மற்றும் மக்கள் நலம் சார்ந்த பணிகளில் சேவையாற்றிய மாணவிகள், அலுவலர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் விழா நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் மங்களேஸ்வரி, என்ஜினீயர் முகம்மது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் நகர்மன்ற தலைவர் புகழேந்தி சிறந்த சமூக பணியாற்றிய 10 பள்ளி மாணவிகள் மற்றும் வரி வசூல், சுகாதாரம், அலுவலகம் உள்ளிட்ட பணிகளில் சிறப்பு பெற்ற 15 அலுவலர்களுக்கும் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார்.

    நிகழ்ச்சியில் உமா, மயில்வாகனன், திருக்குமரன் உள்பட கவுன்சிலர்களும், ஊர்பிரமுகர்களும் கலந்துகொண்டனர். ஆணையர் ஹேமலதா வரவேற்றார். மின்பிரிவு கரிகாலன் நன்றி கூறினார்.

    Next Story
    ×