என் மலர்tooltip icon

    மயிலாடுதுறை

    • ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
    • கொடியம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் 2000-க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ரூ.2.85 கோடி மதிப்பிலான மீன்பிடி இறங்கு தளம், வலை பின்னும் தளம், ஏல கூடம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மற்றும் மேற்குவ ங்கம் நேஷனல் என்வராயில்மெண்ட் வைல்டு லைப் சொசைட்டி மூலம் சதுப்புநில காடுகள் (மாங்குரோவ் காடுகள்) விரிவாக்கம் செய்வதற்கான இடம் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் லலிதா படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து கொடிய ம்பாளையம் கிராமத்தில் உள்ள பள்ளிகள், குளம் கட்டுமான பணி ஆகியவற்றைபார்வையிட்ட ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது காவல் கண்கா ணிப்பாளர் நிஷா, மேற்கு வங்கத்தை சேர்ந்த நேஷனல் என்விரான்மென்ட் சொசைட்டியின் நிர்வாகி அஜந்தா டே, மாவட்ட கடல் சார் சட்ட அமலாக்க பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, வனத்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.
    • ஏமாற்றமடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை பெற்றுத்தருமாறு சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்நிதி நிறுவனத்தில் சீர்காழி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராள மான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

    குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு தங்களது முதலீட்டை திருப்பி தருமாறு பணம் கட்டியவர்கள் கேட்ட போது நிதி நிறுவனம் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளது.

    பலமுறை நிதி நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தொடர்பு கொண்டும் உரிய பதில் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நிதி நிறுவனம் அறிவிப்பு எதுவும் இன்றி மூடப்பட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வர்த்தகர்கள் பாதுகாப்பு நல சங்கத் தலைவர் ஞானமணி தலைமையில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த வணிகர்களும் மற்றும் பொதுமக்களும் தங்களது பணத்தை திருப்பி பெற்றுத்தருமாறு சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பொது மக்களின் முதலீட்டை திருப்பி கொடுக்கா மல் நிதி நிறுவன ம்மூட ப்பட்ட சம்பவம் சீர்காழி யில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செந்தில்நாதன் என்பவர் நேற்றிரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை உடைத்து தகராறு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோவில் பத்து பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 24).

    இவர் நேற்று இரவு மது போதையில் அப்பகுதியில் சாலையின் நடுவே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் வந்த நகர அரசு பஸ்சை நிறுத்தி வைக்குமாறு கூறினார்.

    இதனை அடுத்து பஸ்சை ஒட்டி வந்த பெரம்பூர் தியாகராஜன் (59) பஸ்சை சிறிது நேரம் நிறுத்தினார்.

    பின்னர் பஸ் எடுக்க முயன்ற போது செந்தில்நாதன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அரசு பஸ் முகப்பு விளக்கு உடைத்து டிரைவர் தியாகராஜனை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த தியாகராஜன் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

    அப்போது அவ்வழியாக வந்த தனியார் மினி பஸ்சையும் நிறுத்தக் கூறி கண்ணாடியை செந்தில்நாதன் உடைத்து தகராறு செய்துள்ளார்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவலின் பெயரில் சீர்காழியின் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்தில்நாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடும், படகும் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
    • நாதல்படுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து இல்லாத அளவுக்கு மாறி விட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய திட்டு கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமானதால் தண்ணீரில் மூழ்கின.

    இதனால் கிராமங்களில் இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டு நான்கு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    இந்நிலையில் தண்ணீர் ஆறு நாட்களுக்குப் பிறகு வடிய ஆரம்பித்தவுடன் மீண்டும் முகாம்களில் இருந்து கிராம மக்கள் குடியிருப்புகளை நோக்கி திரும்பினர்.

    திரும்பிச் சென்று வீடுகளை பார்த்த பொழுது பல குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

    சின்னபிள்ளை என்பவருக்கு சொந்தமான குடிசை வீடு கொள்ளிடம் ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    அவருக்கு சொ ந்தமான படகும் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

    நாதல்படுகை கிராமம் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று விட்டது.

    மேலும் கரை அருகாமையில் உள்ள சில குடிசை வீடுகளை அகற்றும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆற்றுநீர் கிராமத்துக்குள் புகுந்து அதிவேகமாகச் சென்றதால் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து நாதல்ப டுகை கிராமத்துக்கு செல்லும் சாலை பெரும்பகுதி தண்ணீர் வேகத்தால் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து

    இல்லாத அளவுக்கு மாற்றி விட்டது. எனவே சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தோட்ட பயிர் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

    கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் 45 நாட்களில் 3 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த வருடம் மட்டுமே என்றும் இதனால் இந்த வருடம் மட்டும் 100 மீட்டர் தூரத்துக்கு நாவல் படுகை கிராமம் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

    கடந்த 10 ஆண்டு காலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு விட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது.
    • தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஈசானிய தெருவில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கில் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். மலை போல் தேங்கியுள்ள குப்பைகளை அங்கு தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் இரவு திடீரென குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

    காற்றின் வேகத்தால் தீ மளமளவென குப்பை கிடங்கு முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சிய ளித்தது.

    தீயை கட்டுப்படுத்த முடியாததால் நகராட்சி ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    இதனையடுத்து விரைந்து வந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

    • கோவிலை புணரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.
    • 4-ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

    சீர்காழி,:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அருகே கீழப்பெரும்ப ள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இக்கோவில் முதல் அமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்காஸ்டாலின் குடும்பத்தினருக்கு குலதெய்வ கோயிலாகும்.

    சிதிலமடைந்த இக்கோவில் குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளை கடந்து விட்டதால் கோயில் புண ரமைக்க துர்கா ஸ்டாலின் முன்னிலையில் பல லட்சம் செலவில் திருப்பணிகள் நடைபெற்றது.

    திருப்பணிகள் நிறைவடை ந்து 4 கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. 3


    3 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜை நடைபெற்றது.

    இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேள, தாளங்கள் முழங்க புறப்பட்டது.

    துர்கா ஸ்டாலின், அவரது மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், ஸ்டாலின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தி மற்றும் அவர்களது குடும்பத்தினர் புனித நீர் அடங்கிய கடங்கள் முன்பு கோவிலை வலம் வந்தனர்.

    பின்னர் கோவில் விமான கலசம், ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்கள் சன்னதி கலசங்களில் துர்கா ஸ்டாலின் பச்சைக் கொடியை அசைத்து காட்டிட புனித நீர் சிவாச்சாரியார்களால் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம்,கலெக்டர் லலிதா,

    எஸ்.பி நிஷா மற்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

    • கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர்.
    • தண்ணீரின் வேகத்தால் கிராமம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தடுப்புச் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையின் காரணமாக வெளியே ற்றப்பட்ட வெள்ளநீர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவை எட்டியதால் வெள்ளநீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது.

    இந்த தண்ணீரானது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடந்த 6 நாட்களாக கடலில் கலந்து வருகிறது.

    இதனால் ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்ப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளை மணல், கோரை திட்டு உள்ளிட்ட கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தாழ்வான பகுதி மக்கள் நிவாரண முகாம்களிலும் தஞ்சம் அடைந்திருந்தனர்.

    இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக செய்யப்பட்டது.

    இந்நிலையில் நேற்று முதல் தண்ணீரின் அளவு குறைந்ததால் நிவாரண முகங்களிலிருந்து மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் மெய்யநாதன் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    குடும்பம் ஒன்றுக்கு போர்வை, கைலி, துண்டு மற்றும் தலா ரூ.500 பணம் உள்ளிட்ட நிவாரண தொகுப்பை தனது சொந்த நிதியிலிருந்து 826 குடும்பங்களுக்கு வழங்கி பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் விரைவில் அந்தந்த கிராமத்திற்கு அருகே புயல் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும் எனவும் தண்ணீரின் வேகத்தால் கிராமம் பாதிக்கப்படுவதை தடுக்க நிரந்தர தடுப்புச் சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

    அடுத்த கிராமத்திற்கு சென்ற அமைச்சரின் காரை வழியில் நிறுத்திய நாதல்படுகை வடக்கு தெரு மக்கள் தங்கள் பகுதியையும் நேரில் பார்வையிட கோரிக்கை விடுத்தனர்.

    அதனை ஏற்று காரில் இருந்து இறங்கிய அமைச்சர் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டதுடன் அவர்களின் கோரிக்கை குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்.

    அமைச்சரின் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், திமுக மாவட்ட பொறுப்பாளரான நிவேதா.எம்.முருகன் எம்.எல்.ஏ, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் செந்தில்குமார், கொள்ளிடம் ஒற்றிய குழு தலைவர் ஜெயபிரகாஷ், தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் செல்ல சேது ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன் உடனிருந்தனர்.

    • மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதியடைந்து வந்தனர்.
    • முதல்- அமைச்சர் தங்கள் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து காத்திருப்பு கண்டமங்கலம், கொண்டத்தூர், பாகசாலை, கதிராமங்கலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக மயிலாடுதுறைக்கு அரசு பஸ் இயங்கி வந்தது.

    இந்த அரசு பஸ் சேவை 10 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

    இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கும், கிராம மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கும் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதி அடைந்து வந்தனர்.

    இது குறித்து சீர்காழி எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்திடம் கிராம மக்கள் சார்பில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அடுத்து நிறுத்தப்பட்ட அரசு பஸ் சேவை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறுத்தப்பட்ட பஸ் சேவை தொடக்க விழா காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணிமணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் காத்திருப்பு ஊராட்சி மன்ற தலைவர் அன்புமணி மணிமாறன் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர் மகேந்திர குமார், மயிலாடுதுறை கிளை மேலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

    பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பஸ் சேவை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசுகையில், தமிழக முதல் அமைச்சர் தொகுதியில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளை பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

    அதன்படி சீர்காழி சட்டமன்றத் தொகுதியிலும் நீண்ட ஆண்டு பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து முதல் அமைச்சர் சிறப்பாக சேவையாற்றி வருகிறார் என்றார்.

    பின்னர் அதே பஸ்சில் காத்திருப்பில் இருந்து சீர்காழி வரை 4 கிலோமீட்டர் தூரம் மக்களோடு எம்.எல்.ஏ பயணம் செய்தார்.

    இதில் தொ.மு.ச மத்திய சங்க பொறுப்பாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகி மணிமாறன் பங்கேற்றனர்.

    • முகாமில், இ.சி.ஜி. மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
    • ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாமை சூரியனார்கோயில் ஆதீனகர்த்தர் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர் தனலெ ட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் குத்தாலம் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமில், இதய நோய், நுரையீரல் ரத்த அழுத்த நோய், இருதய தசைநார் நோய், பிறவி இருதய குறைபாடு மற்றும் இருதயம் தொடர்பான அனைத்து நோய்களுக்கு இலவச பரிசோதனை நடத்தப்பட்டது.

    மேலும், முகாமில், இசிஜி மற்றும் எக்கோ பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ள ப்பட்டன.

    இதில், சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு குத்துவிள க்கேற்றி முகாமை தொடங்கி வைத்து அருளாசி கூறினார்.

    அவருக்கு நிர்வாகிகள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

    முகாமில் முதியோர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    இதில், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், பேரூராட்சி உறுப்பினர் சுகன்யா சுரேஷ், குத்தாலம் லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சின்னதுரை,தனலட்சுமி சீனிவாசன் ஒருங்கிணைப்பாளர் அன்வர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அந்தியோதயா, மன்னை உள்ளிட்ட பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை.
    • சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறங்கி சீர்காழி வரும் சூழ்நிலை உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரெயில்வே நிலையத்திற்கு வந்த தென்னக திருச்சி கோட்ட மேலாளர் மணிஷ்அகர்வால் ஆய்வு மேற்கொண்டார்.

    ரெயில்வே நிலைய கட்டிடங்கள், டிக்கெட் வழங்கும் இடம், பயணிகள் காத்திருக்கும் அறைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது சீர்காழி ரெயில் நிலையத்தில் கழிவறை பயன்படுத்த முடியாமல் பூட்டி கிடப்பது குறித்து பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    ரெயில் நிலையம் வந்த பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ மற்றும் வர்த்தக சங்க பொறுப்பாளர்கள், ரெயில் உபயோகிப்பாளர்கள் கோட்ட மேலாளர் மணிஷ் அகர்வாலை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ ரெயில்வே அதிகாரியிடம் வழங்கிய மனுவில், கடந்த 2019 ம் ஆண்டு வரை சீர்காழி ரெயில் நிலையத்தில் பெரும்பாலான விரைவு ரெயில்கள் நின்று சென்றன.

    கொரோனா காலக் கட்டத்திற்கு பிறகு அந்தியோதயா, மன்னை உள்ளிட்ட பெரும்–பாலான ரெயில்கள் நிற்பதில்லை.

    சீர்காழி ரெயில் நிலையத்திற்கு சென்னை மற்றும் தொலை தூரத்திலிருந்து வரும் பயணிகள் அருகில் 20 கி.மீ தூரம் உள்ள சிதம்பரம் அல்லது மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் இறங்கி சீர்காழி வரும் சூழ்நிலை உள்ளது.

    இதனால் காலவிரயம், அலைச்சல் ஏற்படுகிறது. அதனால் சீர்காழியில் அந்தியோதயா உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களும் இரு மார்க்கங்களிலும் செல்லும் போது நின்று செல்லவேண்டும் என தெரிவித்தார்.

    இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மணிஷ் அகர்வால் தெரிவித்தார்.

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    • போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 17-ந்தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப் பெற்றுள்ளது.

    இதன்படி 2022ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் 17-ந்்தேதி பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

    அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும்மா ணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம்பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    மேலும்அ ரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர்எ னத்தெரிவு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.

    போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.போட்டிகள் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளன.

    பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கும் வருகையை உறுதிசெய்திடுதல் வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

    • குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை காலை நடைபெற இருக்கிறது.
    • அம்மன் அருள் பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குலதெய்வக்காரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்களால் நாளை 5-ந்தேதி காலை நடைபெற இருக்கிறது. இந்த மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனின் அருளைப்பெற பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ×