search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வருகிற 17-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்
    X

    வருகிற 17-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்- கலெக்டர் தகவல்

    • வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
    • போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்கு சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

    தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 17-ந்தேதி பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தியடிகள், ஜவகர்லால்நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப் பெற்றுள்ளது.

    இதன்படி 2022ம் ஆண்டு பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் அனைவருக்கும் 17-ந்்தேதி பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன.

    அப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும்மா ணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2ம்பரிசு ரூ.3000, 3ம் பரிசு ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    மேலும்அ ரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை ரூ.2000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும்.

    கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப் போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேர் தெரிவு செய்து அனுப்ப வேண்டும். 6 முதல் 12 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாகப் பள்ளிகளிலேயே பேச்சுப் போட்டிகள் நடத்தி பள்ளிக்கு ஒருவர்எ னத்தெரிவு செய்து மாணவர்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.

    போட்டிகளுக்குரிய தலைப்புகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கைகள் மூலம் தெரிவிக்கப்பெற்றுள்ளன.போட்டிகள் மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளன.

    பள்ளி மாணவர்கள் அன்று காலை 9.15 மணிக்கும் கல்லூரி மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கும் வருகையை உறுதிசெய்திடுதல் வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ,மாணவிகள் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இவ்வாறுஅவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×