என் மலர்tooltip icon

    மதுரை

    • இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது.

    அந்த வகையில், முருக பக்தர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர்.

    • மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.
    • பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.

    மதுரை:

    உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் வேல் யாத்திரை, பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக திகழும் திருப்பரங்குன்றம் மலை மீதான சர்ச்சைக்கு பிறகு தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கியத்துவம் அளித்தும், இந்துக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வரிசையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு பிரமாண்டாக நடைபெறுகிறது. குன்றம் காக்க, கோவிலை காக்க என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த மாதம் 28-ந்தேதி கால்கோள் விழாவுடன் மாநாட்டு பணிகள் தொடங்கின.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி மதுரை வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் 5 லட்சம் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இந்த மாநாட்டிற்காக மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே அம்மா திடலில் 8 லட்சம் சதுரஅடி பரப்பளவுள்ள இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் நடந்தது. அதில் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள் கண்காட்சி கடந்த 16-ந்தேதி தொடங்கியது.

    ஒரே இடத்தில் பக்தர்கள் அறுபடை வீடுகளையும் காணும் வகையில் முகப்பு தோற்றம், கோபுரங்கள், பிரகாரங்கள் மற்றும் மூலவர் சன்னதியில் கோவிலில் இருப்பதை போன்று முருகன் சிலை வேலுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    இதனை காண மதுரை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலும் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் பூஜை பொருட்களுடன் கோவிலுக்கு வருவதை போன்று வந்து அறுபடை முருகனை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்களுக்கு முந்திரி, வேர்க்கடலை உள்ளிட்டவை பிரசாதமாக வழங்கப்பட்டது.



    மாநாட்டை பிரபலப்படுத்தும் வகையில் புதுச்சேரி மந்திரி நமச்சிவாயம், கவர்னர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), கைலாஷ்நாதன் (புதுச்சேரி), சி.பி.ராதாகிருஷ்ணன் (மகாராஷ்டிரா), த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி உள்ளிட்டோர் வந்து தரிசனம் செய்தனர். அதன் மூலம் அறுபடை வீடுகள் கண்காட்சியை கடந்த 6 நாட்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

    இதையடுத்து முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. மாநாடு நடைபெறும் பாண்டி கோவில் அம்மா திடலில் முருகனின் பிரமாண்ட தோற்றத்துடன் நுழைவு வாயில், திருப்பரங்குன்றம் மலையையும், வேல் ஏந்தியவாறு முருகப்பெருமான் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பது போலவும் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பில் 5 லட்சம் பக்தர்கள் அமரும் வகையில் தரை விரிப்புகள் போடப்பட்டுள்ளன. மேலும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் அமர 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 2 நாட்களாகவே வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்காணக்கானோர் மதுரை வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் பல்வேறு விடுதிகளில் தங்கி மதுரையை சுற்றியுள்ள கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர். இன்று காலை மாநாட்டு திடலில் பக்தர்கள் குவிந்தனர். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்ததின் பேரில் முருக பக்தர்கள் மட்டுமின்றி சாய் பாபா பக்தர்கள், ஓம்சக்தி வழிபாட்டு குழுவினர், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட் டோர் தங்கள் குடும்பத்துடன் மாநாட்டுக்கு வருகை தந்தனர். இதன் மூலம் 5 பக்தர்கள் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.

    குறிப்பாக முருக பக்தர்கள் ஏராளமானோர் மாநாட்டு கால்கோள் விழா நடந்த நாளில் இருந்து விரதம் மேற்கொண்டு இதில் கலந்துகொண்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்தும், மஞ்சள் ஆடை, மாலை அணிந்து ஆண், பெண் பக்தர்கள் கையில் வேல் ஏந்தியும், பால் குடங்களை தலையில் சுமந்தும் மாநாட்டுக்கு ஊர்வலமாக வந்தனர். அதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் வெளியூர்களில் இருந்தும் பஜனை பாடியவாறும், சஷ்டி கவசம் கோஷமாக படித்தும் மாநாட்டு திடலில் திரண்டனர்.



    அனைத்து பக்தர்களும் பிற்பகல் 3 மணிக்குள் மாநாட்டு திடலுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பக்தி கோஷங்கள் முழங்கவும், முருகன் திருப்புகழ் பாடியும் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு தமிழர்களின் பாரம்பரியமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கான சிறிய மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள், இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் வரும் வகையிலும், அதனை பார்த்தும், பக்தர்களுக்கு வழங்கப்படும் கையடக்க சஷ்டி கவசம் புத்தகம் வாயிலாகவும் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது உலகளவில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்படுகிறது. இதில் நேரில் கலந்துகொள்ள இயலாதவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மாலை 7 மணிக்கு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியும், தீவிர முருக பக்தருமான பவன்கல்யாண் சிறப்புரையாற்றுகிறார். இதற்காக அவர் ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

    மாநாட்டில் இரவு 7.30 மணிக்கு தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் உள்ளிட்ட கோவில்களை பாதுகாக்க தமிழக அரசை வலியுறுத்துவது, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முருகன் மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு மாநாடு நிறைவு பெறுகிறது.

    முன்னதாக மாநாட்டுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள், பாஸ் பெற அவசியம் இல்லை என்று கோர்ட்டு உத்தரவிட்டதால் வெளியூர்களில் இருந்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப வாகனங்களை பார்க்கிங் செய்யவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வண்டியூர் டோல்கேட் அருகே பிரதான சாலையில் மாநாடு வளாகம் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநாட்டிற்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மாநாடு வளாகத்திற்கு பொதுமக்கள் செல்ல இரு நுழைவு வாயில்களும், வி.ஐ.பி., வாகனங்கள் செல்ல ஒரு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டுள்ளது.

    வாகனங்களை ஒருங்கிணைக்கவும், பக்தர்களை வழிநடத்தவும் மாநாடு நடைபெறும் பகுதியில் மட்டும் 300 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூட்டத்திற்கு ஏற்ப பக்தர்கள் பிரித்து விடப்படுவார்கள். மாற்றுத்திறனாளிகள் மாநாட்டு திடலுக்குள் சிரமமின்றி செல்ல சக்கர நாற்காலிகளும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலுாட்ட தனி அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டு திடலில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில், 1,000 லிட்டர் தண்ணீர் டேங்குகள், தற்காலிக தண்ணீர் பந்தல்கள், 200 கழிப்பறைகள் அமைக்கட்டுள்ளன.

    மாநாட்டையொட்டி மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஐந்து துணை கமிஷனர்கள், 15 உதவி கமிஷனர்கள், 54 இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
    • மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நடிகை கஸ்தூரி மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், மார்தட்டி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் இன்று நடைபெறுவது அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு.

    கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவது அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? தி.மு.க. நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

    பவன் கல்யாண் கட்சித் தலைவராக இந்த மாநாட்டிற்கு வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை தி.மு.க. அரசு ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வது தான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.

    முருக பக்தர்கள் மாநாடு குறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் தானே. அவருடைய மூதாதையர்கள் தமிழர்கள் தானே? அவர் தமிழனாக நினைக்கவில்லையா என தெரியவில்லை.

    மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோவிலுக்கு நற்பணி செய்ததாக தான் வரலாற்றில் உள்ளது. விஜய் சரியான பாதையை பயணித்து வருகிறார். வெற்றி என்பது கட்சியின் பெயரில் உள்ளது. அதை வாழ்த்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
    • மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    மதுரை:

    மதுரையில் இன்று இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிகோவில் சுற்றுச் சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும்.

    ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென் கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணாநகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இருசக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

    • ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள்.
    • தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.

    மதுரை:

    மதுரை பாண்டிகோவில் ரிங் ரோடு வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் நாளை முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் கண்காட்சி அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த அறுபடை வீடு மாதிரி அமைப்பை இன்று பார்வையிட்டார். பின்னர் ஆறுபடை முருகனை சுவாமி தரிசனம் செய்து மனமுருகி வழிபாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சங்கம் வளர்த்து தமிழை வளர்த்த இடம் மதுரை. முருகப்பெருமான் ஆறுபடைகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையிலே அமைந்துள்ளது. அத்தகைய புண்ணியம் பெற்ற மதுரையிலே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.

    ஆறுபடைகளையும் மதுரையில் சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். இதிலே அரசியல் கிடையாது. இருப்பினும் ஆன்மிகம் என்பது மனிதனுடைய வாழ்வியல் நெறிமுறைபடுத்துவதற்கும், ஒழுக்கப்படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இந்த முருகன் மாநாட்டில் பெருமையுடன் கூறுகிறேன்.

    தமிழ் கடவுள் முருகன். அதன் அடிப்படையிலேயே முருகன் மாநாட்டில் முருகனை தரிசிக்க வழிபட இங்கே வருகை புரிந்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
    • தி.மு.க. அரசின் ஆட்சி சக்கரம் சுழல்கிறதா? சிதறிக் கிடக்கிறதா?

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நேற்று அரசு பஸ்சில் அச்சு முறிந்து சாலையில் சக்கரங்கள் ஓடிய விபத்தில் 5 மாணவர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதுதொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:

    * தி.மு.க. ஆட்சியில் விடியல் பயணமா, வாழ்க்கை முடியும் பயணமோ என மக்கம் அச்சம் கொண்டுள்ளனர்.

    * தி.மு.க. அரசின் போக்குவரத்து துறை செயல்பாடு மக்களை ஆபத்தில் இட்டுச் செல்கிறது.

    * 4 ஆண்டுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

    * பணியாளர்கள் பற்றாக்குறையால் பேருந்து பழுது பார்ப்பு சரியாக இல்லை.

    * தி.மு.க. அரசின் ஆட்சி சக்கரம் சுழல்கிறதா? சிதறிக் கிடக்கிறதா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
    • மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது.

    மதுரை:

    மதுரையில் இந்து முன்னணி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிக்கோவில் சாலையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து அரசியல் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஆதீனங்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினர்களாக, உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர். இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் வரை பங்கேற்ப இருப்பதாக தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    முருக பக்தர்கள் மாநாட்டு திடலில் அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சிகளாக அமைக்கப்பட்டுள்ளன. அறுபடை கோவில் கோபுரங்களுடன் முகப்பு தோற்றமும், உள்ளே சென்றால் முருகப்பெருமானை தரிசிப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன் உள்ளிட்ட பலர் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை, மாநாட்டில் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசத்தை லட்சக்கணக்கானோர் இணைந்து பாடி கின்னஸ் சாதனையும் படைக்க இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    • அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை.
    • வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மதுரை முருக பக்தர் மாநாடு நாளை மறுநாள் (22-ந்தேதி, ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு வரக்கூடிய பக்தர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து வாகனத்திற்கான அனுமதி பாஸ் வாங்கி வர வேண்டுமென தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    இந்த உத்தரவினை எதிர்த்து இந்து முன்னணி சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் நீதிபதி ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அனந்தபத்மநாபன், வாகனத்தில் வரக்கூடியவர்கள் முறையான வாகன அனுமதி பாஸ் இருந்தால் மட்டுமே மதுரை மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மதுரை அண்ணா நகர் காவல் துறை இணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு இவருக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. ஆனால் அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

    அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, "இதுபோன்று அதிக அளவில் பொது மக்கள் கூட கூடிய மாநாடுகளுக்கு வரக்கூடிய வாகனங்களை முறைப்படுத்து வதற்காக அனுமதி பாஸ் வழங்குவது வழக்கமான நடைமுறை இந்த உத்தரவுகளை தலைமை காவலருக்கு மேல் உள்ள அதிகாரிகள் வழங்கலாம் என சட்டம் உள்ளது" என தெரிவித்தார்.

    மேலும், "இந்த உத்தரவு என்பது மாநாடுக்கு வரக்கூடிய வாகனங்களை கட்டுப்படுத்துவதற்கு இல்லை, வாகனங்களை முறைப்படுத்தும் நோக்கில் தான் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாநாடுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் காவல்துறை போலீஸ் சோதனை மையம் அமைக்க வேண்டும். மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுனர் உரிமம், ஓட்டுனரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை காவல்துறையிடம் வழங்க வேண்டும்.

    இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? நீதிமன்றம் கேள்வி.
    • நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு செய்யப்பட்டு நித்யானந்தா ஆசிரமத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

    மருத்துவரின் இடத்தில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இருந்து பக்தர்களை வெளியேற்ற ஆர்.டி.ஓ. ஆணையிட்டார். வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து நித்யானந்தா ஆசிரமம் சார்பில் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

    திருவண்ணாமலை நித்தியானந்த பீட அறங்காவலர் சந்திரசேகரன் என்பவர் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

    விசாரணையின்போது நித்யானந்தா எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது ? நீங்கள் அங்கு சென்றுள்ளீர்களா? அங்கு செல்வதற்கு பாஸ்போர்ட்டு, விசா ஏதும் உள்ளதா? போன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    நித்யானந்தா ஆஸ்திரேலியா அருகில் உள்ள யுஎஸ்கே (United States of Kailasa) என்ற கைலாசா என்கிற தனி நாட்டில் உள்ளார். யுஎஸ்கே நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது என நித்தியானந்தாவின் சீடர் பதில் அளித்தார்.

    மேலும், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என நித்யானந்தா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கறிஞரை மாற்ற நித்யானந்தா தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் வழக்கு விசாரணை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம்.
    • இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    திருப்பரங்குன்றம்:

    சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து அருகில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளி வாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சனைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். இதன்பின் அவர் கூறியதாவது:-

    தர்கா மலை உச்சியிலே இருக்கிறது. அதேபோல, இந்துக்கள் வழிபாடு செய்கிற காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில்தான் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று.

    மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோவில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் முதல் படை வீட்டு முருகன் கோவில் இருக்கிறது. இங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில மதவாத அமைப்புகள் இதில் தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே பகையை வளர்க்க முயற்சிக்கிறது.

    அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. எனவே இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் இன்றைக்கு திருப்பரங்குன்றம் வருகை தந்தேன். முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம். ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன், தி.மு.க. கவுன்சிலர் ஆகியோரை சந்தித்தேன்.

    அவர்களிடம் சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்கள். ஆகவே மதவாதசக்திகள் இந்த பிரச்சனையை பெரிதாக்க கூடாது. தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக்கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை.
    • நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும்.

    மதுரை:

    மதுரை முடக்கத்தான் பகுதியில் நேற்று இரவு நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

    ஆளுங்கட்சியோடு நாம் கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும் அவர்கள் மற்ற கொடிகளை காட்டிலும் நமது கட்சி கொடிகளை அகற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுபோன்ற பல பிரச்சனைகளை எதிர்கொண்டு, சமாளித்துக்கொண்டு, போராடிக்கொண்டு இன்னும் ஆளுங்கட்சி கூட்டணியில்தான் நீடிக்கிறோம்.

    ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என கேட்பது சராசரி மனிதனின் சிந்தனை. அரசியல் களத்தில் அது சரிவராது.

    அரசியலில் நாம் இருக்கும்போது எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும். ஒரு பிரச்சனையை கவனத்தில் கொண்டு மட்டும் நாம் செயல்பட முடியாது.

    அரசியலில் தெளிவு, பொறுமை, நிதானம், சகிப்புதன்மை தேவை. நமக்கு ஆதரவான சக்திகள் யார்? எதிரான சக்திகள் யார்? என்பதை தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அதனால் தான் பா.ஜ.க., பா.ம.க. கட்சிகள் இடம்பெறும் அணிகளில் நாம் சேர மாட்டோம் என தெளிவாக முடிவெடுத்துள்ளோம்.

    அ.தி.மு.க.வோடு சேருவீர்களா? சேரலாம். பிரச்சனை இல்லை. ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் இருப்பதால் அது முடியாது. இப்படி கதவுகளை எல்லாம் மூடி வைத்துக்கொண்டால் யார் கூட்டணிக்கு அழைப்பார்கள் என்று சிலர் கேட்கிறார்கள். எதையும் எதிர்பார்த்து, யாரையும் மிரட்டி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

    நாங்கள் அதற்காக கட்சி தொடங்கவில்லை. அம்பேத்கரின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே கட்சியை தொடங்கியுள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது.
    • வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜிம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்காக வழக்கறிஞர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. எங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் தலைவர்கள் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களாக இருந்து வருகின்றனர்.

    மேலும் சங்கம் சார்பாக மேற்கொள்ளப்படும் பெரும்பாலான நீதிமன்ற புறக்கணிப்புகள் சட்டத்திற்கு புறம்பானது. சிலர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மிரட்டும் நோக்கில் இது போன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். வழக்கறிஞர் சிலர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகள் ஈடுபடும் போது நடவடிக்கைக்கு உள்ளாகின்றனர்.

    அவர்களுக்கு ஆதரவாக பணி புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். இது போன்று 90 சதவீத நீதிமன்ற புறக்கணிப்புகள் நியாயமற்றவையாகவே உள்ளது. மேலும் உச்சநீதிமன்றம் இதுபோன்று சட்டவிரோத பணி புறக்கணிப்புகளுக்கு கடும் கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

    எனவே இதுபோன்று நியாயமற்ற கோரிக்கைகளுக்காக சட்டவிரோதமாக நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடும் சங்க நிர்வாகிகள் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் மரியா கிளீட் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் பல்வேறு கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

    வழக்கறிஞர்களின் கோரிக்கை நிறைவேற்ற நீதிமன்ற பணி புறக்கணிப்பு ஒரு தீர்வாகாது. அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் அதுவே சரியான முறையாகும். சட்டத் தொழில் ஒரு உன்னதமான தொழில். மேலும் வழக்கறிஞர்கள் சாதாரண ஊழியர்கள் கிடையாது.

    வழக்கறிஞர்கள் வழக்குரைஞர்களின் நலனையும் நீதிமன்றங்களின் மகத்துவத்தையும் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள். எனவே, அற்பமான காரணங்களுக்காக அல்லது எந்தவொரு வழக்கறிஞரின் சில தனிப்பட்ட குறைகளின் அடிப்படையில் அடிக்கடி நீதிமன்றங்களைப் புறக்கணிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

    ஏதேனும் பொதுவான காரணம் ஏற்பட்டால் மட்டுமே, வழக்கறிஞர் பார் கவுன்சிலையோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதை தவிர்த்து நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

    வழக்கறிஞர்கள் தான் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அவர்கள் நீதி வழங்கும் அமைப்பில் பங்குதாரர்கள். அவர்கள் இல்லாமல் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. நீதி வழங்கும் அமைப்பில் நீதிமன்றத்திற்கு அவர்களின் உதவி மிக முக்கியமானது.

    இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் பெயர், முகவரியை கொண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் கொடுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    ×