என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அதிக மத நல்லிணக்கத்தை பார்க்கலாம்- நடிகை கஸ்தூரி
- முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
- மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மதுரை:
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வந்த நடிகை கஸ்தூரி மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய ஒவ்வொருவர் மனதிலும் நடக்கிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், மார்தட்டி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையில் இன்று நடைபெறுவது அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு.
கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவது அரசியல் இல்லை. மக்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமா? மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தல் பொன் சட்டியா? தி.மு.க. நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பவன் கல்யாண் கட்சித் தலைவராக இந்த மாநாட்டிற்கு வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது மிகப்பெரிய பெருமை. அதை தி.மு.க. அரசு ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வது தான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்து அமீர் கருத்து தெரிவித்துள்ளார். மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் தானே. அவருடைய மூதாதையர்கள் தமிழர்கள் தானே? அவர் தமிழனாக நினைக்கவில்லையா என தெரியவில்லை.
மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோவிலுக்கு நற்பணி செய்ததாக தான் வரலாற்றில் உள்ளது. விஜய் சரியான பாதையை பயணித்து வருகிறார். வெற்றி என்பது கட்சியின் பெயரில் உள்ளது. அதை வாழ்த்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






