என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஓசூரில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலியானார்.
    ஓசூர்:
     
    திருவண்ணாமலை மாவட் டம், ஆரணி அருகே பூசுமலை குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார்(வயது40). இவர், ஓசூர் பாரதிதாசன் நகரில் தங்கி யிருந்து, பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று,  ஓசூர் -தளி சாலையில்  ஆர்.சி. சர்ச் அருகேயுள்ள பாலத்தில் மதுபோதையில் தவறி விழுந் தார். பின்னர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப் பட்ட அவர் பின்ன மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.  அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

    இதுகுறித்து குமாரின் மனைவி சித்ரா, ஓசூர் டவுன் போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியின்றி எருதுவிடும் விழா மற்றும் ஸ்பீக்கர்கள் கட்டி விழா நடத்திய 853 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    .கிருஷ்ணகிரி கே.கே.நகர் தர்கா பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது33), சூளகிரி கவுனிகோட்டா பகுதியை சேர்ந்த மூர்த்தி(40) மற்றும் 749 பேர், அஞ்செட்டி தொட்டமஞ்சு பகுதியை சேர்ந்த கமலா (45) மற்றும் 49 பேர், சிங்காரப்பேட்டை பெரியதள்ளப்பாடி பகுதியை சேர்ந்த ரஜினி (40), மற்றும்24 பேர், மிட்டப்பள்ளி தங்கவேல் மற்றும், 14பேர் உட்பட, 853 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓசூர் பகுதியில் 2 இளம்பெண்கள் குழந்தை களுடன் மாயமானார்கள்.
    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது32). இவர் குடும்பத்துடன் ஓசூர் தேர்பேட்டை பணியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி (30). 

    இவர்களுக்கு லோகேஷ் வரன் (6) என்ற மகனும், மேகலா (12), ஸ்ரீஜா (3) என்ற 2 மகள்களும் உள்ளனர். கலைவாணி, ஓசூர் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 12-&ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறி, குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். பின்னர் மாலையில் பெரியசாமி வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டியிருப்பதையும், மனைவி, குழந்தைகள் காணாமல் போயிருப்பது அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.

    இதுதொடர்பாகஅவர் ஓசூர் டவுன் போலீசில் மனைவி, குழந் தைகளை கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

    இதே போல், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் முருகன் (31), கார்பெண்டர் கடை நடத்தி வருகிறார்.  இவரது மனைவி துர்காதேவி (27) இவர்களுக்கு நான்கரை வயதில் ரஷ்னா என்ற பெண் குழந்தை உள்ளது. 

    இந்த நிலையில், கடந்த 1 வாரத்திற்கு முன்பு குழந்தையுடன், மனைவி காணாமல் போய்விட்ட தாகவும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 
    இது குறித்து முருகன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது 15 சிறுமியை அதை பகுதியை சேர்ந்த வாலிபர் அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது15 சிறுமி. இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் (ஐடிஐ) தொழிற் பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து  வருகிறார். 

     இந்த நிலையில் இந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால் ஆசை வார்த்தை கூறி மாணவியை அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.  அலெக்ஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. 

      இது குறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார்.  தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    எட்டு மாத காலமாக தி.மு.க. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தவித பணிகளையும் சேவைகளையும் செய்யவில்லை என கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    மு.க.ஸ்டாலின்


    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு தோல்வியடைந்ததை திசை திருப்பவும் தி.மு.க.வின் நிரந்தர எதிரியான அ.தி.மு.க.வை அழிக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்யப்பட்டது. இன்று முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை செய்கின்றனர். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே கே.பி.அன்பழகன் குடும்பம் பாரம்பரியமாக தொழில் செய்யக்கூடிய செல்வந்தர் குடும்பம் ஆகும். அ.தி.மு.க.வின் தலைவர்களையும் செல்வாக்குமிக்க நபர்களையும் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.க. இது போன்ற சோதனைகளை நடத்தி வருகிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ஆட்சியாளர்களின் நிர்பந்தத்தின் பெயரால் தற்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வருகிறார்கள். அவர்களாகவே ஒரு கணக்கெடுப்பு செய்து ஊடகங்களில் தெரிவிக்கின்றனர். ஆனால் சோதனை நடத்தும் போது எந்தவித ஆதாரங்களும் கிடைப்பதில்லை. இது தான் எதார்த்தமான உண்மை.

    எட்டு மாத காலமாக தி.மு.க. அரசு மக்களுக்கு செய்யவேண்டிய எந்தவித பணிகளையும் சேவைகளையும் செய்யவில்லை. பொங்கல் திருநாளில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் 20 பொருட்களுக்கு 1088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்புக்கு மட்டும் 73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1159 கோடி ரூபாய் அரசு கொடுத்த பொருட்களை சில்லரை கடையில் சென்று வாங்கினால் கூட அதன் மொத்த விலை 350 ரூபாய்க்குள் அடங்கிவிடுகிறது. ஆனால் அரசு ஒதுக்கிய நிதி கிடைத்தால் ஒரு குடும்பத்திற்கு 570 ரூபாய் வருகிறது. அதாவது ஒரு குடும்ப அட்டைக்கு 275 ரூபாய் ஊழல் செய்து உள்ளது.

    இதனை மறைப்பதற்காகவே எங்கள் மீது பழி போட்டு தருமபுரி மாவட்ட செயலாளர் வீடுகளில் சோதனை நடத்தப்படுகிறது. எந்த வழக்காக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சட்டப்படி நிச்சயமாக வழக்குகளில் வெற்றி பெறுவோம்.

    தமிழகத்தில் ஊழலுக்கு வித்திட்ட தலைவர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. தலைவர்களுக்கும் கிடையாது. லஞ்ச ஒழிப்பு சோதனை மூலம் அ.தி.மு.க.வின் வாய்களை அடைத்து விடலாம் என்று நினைத்தால் அவர்களைப் போன்ற ஒரு ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது.

    மாநில அரசு நடத்தும் லஞ்ச ஒழிப்பு சோதனையை மத்திய அரசு விமர்சனம் செய்வது சட்ட ரீதியான முறை கிடையாது. மாநில அரசின் சோதனைகளை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. நேரம் வரும்பொழுது அது தவறு என்னும் பட்சத்தில் மத்திய அரசு கட்டாயம் நடவடிக்கை எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஓசூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற எலக்ட்ரீசியன் மீது வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஓசூர்:
     
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா பெலத்தூர் அருகே உள்ள சூடாபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பாலாஜி (வயது 19). 

    எலக்ட்ரீசியான இவர், கடந்த 17-ந் தேதி மதியம்  அதே ஊரை சேர்ந்த பரத் (20) என்பவருடன் மோட்டார்சைக்கிளில் கொளதாசபுரம் - சூடுகானப்பள்ளி சாலையில் சென்றார். 

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலாஜியையும், பரத்தையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். பரத் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். 

    இந்த விபத்து குறித்து பாகலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    கம்பி வேலியில் சிக்கி காயமடைந்த 2 வயது குட்டியானையை டிரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் 6க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றி திரிகின்றன.

    இந்த யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த 2 வயதான யானைக்குட்டி நேற்று வனப்பகுதியில் ஓரத்தில் உள்ள கம்பி வேலியில் சிக்கியது அதிலிருந்து மீள முயன்ற யானைக்குட்டிக்கு துதிக்கை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த வனத்துறையினர் அதனை மீட்க முயன்றனர் ஆனால் அதற்குள் அங்கு இருந்த குட்டி யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி மற்றும் வனசரகர்கள் முருகேசன், சுகுமார், ரவி, வனத்துறை மருத்துவர் பிரகாஷ் உள்ளிட்டோர் ஜவளகிரி வனப்பகுதிக்கு சென்று யானை குட்டியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் சென்று யானை குட்டியை தேடி வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்த்தியாக இருப்பதால் தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டது.

    இதனால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று டிரோன் கேமரா அனுப்பி குட்டி யானையை எங்குள்ளது என்பதை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    துதிக்கையில் பலத்த காயத்துடன் சுற்றித் திரியும் யானை குட்டியை 2-ம் நாளான இன்று காலையில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜவளகிரி வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் இந்த யானை குட்டியை தேடும் பணி வனத்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

    இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, ‘படுகாயம் அடைந்த குட்டி யானையை இன்று அல்லது நாளைக்குள் கண்டுபிடித்து விடுவோம். பின்னர் அதற்கு சிகிச்சை அளித்து மீண்டும் அதன் கூட்டத்தோடு சேர்க்கப்படும். ஆனால் குட்டியானை இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு இருப்பதால் தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது’ என்றனர்.


    தருமபுரி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டி வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓசூர்:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமார் (வயது 32),

    கட்டிட தொழிலாளியான இவர் ஓசூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.

    மது குடிக்கும் பழக்கம் உடைய வசந்த குமார் நேற்று இரவு கர்நாடக மாநில எல்லையான பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். இதையடுத்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் வசந்தகுமார் அங்கு தள்ளாடியப்படி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள், போதையில் நின்ற வசந்தகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது வசந்த குமார் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்து திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் வசந்த குமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் வயிறு, கண் ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து வடமாநில வாலிபர்கள், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    காயமடைந்த வசந்தகுமார் மது போதையிலேயே தமிழக எல்லைக்கு நடந்து வந்தார். தொடர்ந்து அவரால் நடக்க முடியாமல் தமிழக எல்லைப்பகுதியில் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து இரவு முழுவதும் அதே இடத்தில் கிடந்துள்ளார்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வசந்தகுமார் கத்திக்குத்து காயத்துடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டி வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காணும் பொங்கல் பண்டிகையொட்டி காவேரிப்பட்டணத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காணும் பொங்கலை ஒட்டி எருது விடும் விழா நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் காணும் பொங்கலன்று முழுஊரடங்கால் நடைபெறவில்லை. 

    இதனால்  நேற்று எருதுவிடும் விழா நடைபெற்றது.  நேற்று மதியம் 1 மணிக்கு எருதுகளை குளிப்பாட்டி வண்ணம் தீட்டி கொம்புகளில் அலங்காரம் தட்டிகளை கட்டி மதியம் 3 மணியளவில் சேலம் சாலையில் உள்ள விநாயகர் கோயில் முன் பூஜை செய்து பின்னர் ஊர் தலைவர்கள், ஊர் கவுண்டர்கள் மற்றும் இளைஞர்கள் எருதுகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். 

    எருதுகளை இளைஞர்கள் இரண்டு பக்கமும் கயிறுகளை  பிடித்துக்கொண்டு  விநாயகர் கோவிலை  சுற்றி வலம் வந்தனர். இந்த ஆண்டு இருபக்கங்களிலும் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    எருதுகளை  அடக்கும் வீரர்களை மட்டுமே உள்ளே அனுமதித்தனர் எருதுகளை துன்புறுத்தி இளைஞர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். மாலை  திருவிழா முடிக்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எருது விடும் திருவிழா காண வந்திருந்தனர்.

    எருது விடும் திருவிழா மாவட்ட எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி  உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி   விவேகானந்தன் மற்றும் கிருஷ்ணகிரி   டி.எஸ்.பி. விஜயராகவன்  மேற்பார்வையில்  காவேரிப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முரளி  கிருஷ்ணகிரி மகளிர் இன்ஸ்பெக்டர் சுமித்ரா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், ராஜா, மற்றும் 75-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 
    ஓசூரை அடுத்த பாகலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். உடன் சென்ற நண்பர் படுகாயமடைந்தார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே சூடாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி(வயது19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  பரத் (20) ஆகிய இருவரும் டெம்போ டிரைவர்கள் ஆவர். 

    இவர்கள் இருவரும் நேற்று  மோட்டார் சைக்கிளில் பாகலூரில் இருந்து சூளகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

    அப்போது, ஓசூரில் இருந்து கொளதாசபுரம் நோக்கி வேகமாக வந்த வேன் ஒன்று,  மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். 

    இதில், மோட்டார் சைக்கிளை  ஓட்டி வந்த பாலாஜி,  சம்பவ இடத்திலேயே இறந்தார், பின்னால் உட்கார்ந்து சென்ற பரத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகலூர் போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

    காயமடைந்த பரத்தை அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளியில் மின்கம்பியில் சிக்கிய 2 காகங்களை கூட்டமாக வந்த காகங்கள் உயிருடன் மீட்டன.
    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் நான்கு வழி சாலை சந்திப்பில் உள்ள ஒரு மின்கம்பத்தில் இரு காகங்கள் அமர்ந்திருந்தன. 

    தொடர்ந்து இரு காகங்களும் விளையாடி கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் காகங்களின் கால்கள் சிக்கின. 

    இதனால் இரு காகங்களும் உயிருக்கு போராடிய நிலையில் கத்திக் கொண்டிருந்தது. இதை பார்த்து அங்கு நின்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

    அந்த சமயத்தில்  நாலாபுறமும் இருந்து 100-க்கும் மேற்பட்ட காகங்கள் கூட்டம் பறந்து வந்தன. 2 காகங்களையும் உயிருடன் மீட்க போராடின. சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு 2 காகங்களும் மற்ற காகங்கள் உயிருடன் மீட்டன.

    இந்த காட்சியை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து அதிசயித்து நின்றனர். தன் இனத்துக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒரணியில் நின்று போராடிய காகங்களின் குணத்தை கண்டு அனைவரும் பாராட்டி வியந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தனியார் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியிருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி தனியார் பஸ் நேற்று மாலை வந்து கொண்டிருந்தது.

    அந்தேவனப்பள்ளி கிராமம் அருகே வரும் பொழுது அதே கிராமத்தை சேர்ந்த குப்பண்ணா மகன் மாரிமுத்து (வயது 42), சரவணன் மகன் பிரசாந்த் (22) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று சாலையில் வளைவில் திரும்பும் பொழுது எதிரே வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதி உள்ளனர்.

    இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலை, கை, காலில் அடிபட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக மாரிமுத்துவை பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கும், பிரசாந்தை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மாரிமுத்து, பிரசாந்த் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    ×