search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெயிண்டர் சாவு"

    • தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் மோரை மேட்டு தெரு சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருக்கு காயத்ரி என்கிற மனைவியும், 2சிறு வயதுகுழந்தைகளும் உள்ளனர். நேற்று நெல்லிக்குப்பம் அடுத்த குமராபுரம் தனியார் கல்லூரி வளாகத்தில் பெயிண்டிங் பணியில் மணிகண்டன் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென்று தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இத்தகவல் அறிந்த மணிகண்டன் மனைவி காயத்ரி, அவரது உறவினர்கள், கவுன்சிலர் முத்தமிழன் உள்ளிட்ட பலர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். இத் தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிறகு பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இறந்த மணிகண்டன் மனைவி மற்றும் உறவினர்கள் தனியார் கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணிகண்டன் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நெல்லிக்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • கோனசேரி சாலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார்
    • தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜகுமார் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில், மே.23-

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு அடுத்த சூரியகோடு புதுச்சேரிவிளை வீட்டை சேர்ந்தவர் ராஜ குமார் (வயது 55). ஒர்க் ஷாப்பில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்தது.

    சம்பவத்தன்று ராஜ்குமார் அதிக அளவில் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோனசேரி சாலையில் அவர் மயங்கி கிடந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் ராஜகுமாரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ராஜகுமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி ஸ்டெல்லா பாய் அளித்த புகாரின் அடிப்படையில், கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×