search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power line"

    • மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.
    • பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் வனப்பகுதி, தனியார் வருவாய் நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செடி, கொடிகள் காய்ந்து சருகுகளாக காணப்படுகிறது.

    வெப்பத்தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு அரிய வகை மரங்கள் மூலிகை செடிகள் எரிந்து நாசமாகி வருகின்றன. பழனி சாலையில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து குறிஞ்சி நகர் பகுதியில் காட்டுத்தீ பற்றியது. மேலும் மலைப்பகுதிகளில் தொடர்ந்து பற்றி எரியும் காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறை வனப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பற்றியது. வனப்பகுதி வழியாக சென்ற மின் வயரில் காட்டுத்தீ பற்றி சேதமடைந்தன. இதனால் கிளாவரை, பூண்டி, போளூர் உள்ளிட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டது.

    காட்டுத்தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் மின் வயர்களை சீரமைக்க முடியாமல் மின் ஊழியர்கள் தவித்தனர். ஓரளவு காட்டுத்தீயின் வேகம் குறைந்த பின்னர் போராடி மின் வயர்களை சீரமைத்தனர். இதனால் மலை கிராமங்களில் பல மணி நேரம் மின் தடையால் சிக்கித் தவித்த கிராம மக்கள் நிம்மதியடைந்தனர்.

    கொடைக்கானலில் இந்த ஆண்டு அதிக அளவு காட்டுத்தீ பற்றி வருகிறது. வனப்பகுதி மட்டுமல்லாது குடியிருப்பு பகுதியிலும் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து வருவதால் பொதுமக்கள், சுற்றுலாபயணிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டுத்தீயை கட்டுபடுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

    ஹெலிகாப்டர் மூலம் காட்டுத்தீயை அணைப்பது, நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என வன ஆர்வர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் கொடைக்கானல் வனப்பகுதி பசுமையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்டுத்தீ ஏற்படும் இடங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மின் வயர்களை காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து நடவடிக்கை
    • தீயணைப்பு படையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

    அருவங்காடு, 

    குன்னூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குன்னூர் நகரப்பகுதி மட்டுமல்லாமல் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    இதில் மண் மற்றும் மரங்கள் விழுந்தும் குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்புள்ளாகி வருகின்றனர் இதனிடையே குன்னூர் தீயணைப்புத் துறையினர் ஒன்றிணைந்து தனித்தனி குழுவாக பிரிந்து மீட்பு பணிகளில் நேரம் காலம் பாராமல் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    மலைப்பாதை மட்டு மல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் இடர்பாடு களுக்கு இடையே சிக்கி தவிக்கும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

    இதில் இன்று அதிகாலை 1 மணி அளவில் குன்னூர் பகுதியில் உள்ள புருக்லேண்ட்ஸ் பகுதியில் ராட்சத மரம் மின் கம்பி மீது சாய்ந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.

    அந்த இருட்டு நிறைந்த நேரத்திலும் தீயணைப்புத் துறையினர் நான்கு மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் மரத்தை அகற்றினர். இதனைத் தொடர்ந்து இந்தக் குழுவினர் மாறி மாறி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அதிகாலை நேரத்திலும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
    • கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலி.

    கர்நாடக தலைநகர் பெங்களூருவில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை மிதித்த தாய் மற்றும் 9 மாத குழந்தை தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்த பெண், சென்னையைச் சேர்ந்த சவுந்தர்யா (23) என தெரியவந்துள்ளது. மின்வாரிய அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை பேருந்து மூலம் பெங்களூரு வந்து சாலையை கடக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

    கணவர் கண் முன்பே மனைவியும், குழந்தையும் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    கும்பகோணம்:

    திருநாகேஸ்வரம் துணை மின்நிலையத்தை தரம் உயர்த்துவதற்காக மின்பாதை அமைக்கும் பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.

    இதனால் அந்த துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான திருநீலக்குடி, திருநாகேஸ்வரம், விட்டலூர், ஏழாம்கட்டளை, அந்தமங்கலம், திருபுவனம், அம்மாசத்திரம், திருபுவனம் இன்டஸ்டிரியல் எஸ்டேட், முருக்கங்குடி, தண்டந்தோட்டம், ஆண்டளாம்பேட்டை, பவுண்டரீகபுரம், நெடார், புத்தகரம், அம்மன்குடி, தேப்பெருமாநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.
    • இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அடுத்த கரசூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி இவரின் வீட்டின் எதிரே உள்ள மின்சார ஒயர் கம்பி நேற்று இரவு வீசிய சூறைக்காற்றில் அறுந்து விழுந்தது.

    இந்நிலையில் மணி என்பவர் வீட்டுக்கு எதிரில் இருந்த மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியவில்லை.

    மணியின் மனைவி தனம் (வயது 45)  துணியை துவைத்து மின் கம்பம் அருகே கட்டப்பட்டிருந்த கொடியில் துணியை காய வைக்க சென்ற பொது மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார்.

    அதனைப் பார்த்த அவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19) தனத்தை இழுக்க முயற்சிக்கும் பொது அவரும் மின்சாரம் தாக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இவர்கள் இருவரும் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தூக்க வந்த பிரியதர்ஷினி மற்றும் குமாரையும் மின்சாரம் தாக்கியதில் தலை உள்ளிட்ட பகுதி கருகி தூக்கி வீசப்பட்டனர்.

    இதனைப் பார்த்து ஓடி வந்த பக்கத்து வீட்டு சேர்ந்த காந்தலட்சுமி என்பவரும் மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடி யாக போலீசாருக்கும் மின்சார துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    மின்சாரத் துறையினர் இந்த கிராமத்திற்கு வரும் மின்சாரத்தை துண்டித்து ஊருக்குள் வந்தனர். மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்த 4 பேரும் அங்கிருந்த வாகனத்தில் ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காந்த லட்சுமி மட்டும் லேசான காயத்துடன் சிகிச்சை பெறுகிறார்.

    தனம்,பிரியதர்ஷினி, குமாரி ஆகிய 3 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேதராப்பட்டு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
    • பொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பாளையத்தில் கஸ்தூரிபாய் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அங்கு எதிர்பாரதவிதமாக நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்தது. நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்சார கம்பியால் அவழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

    அதிகாலை 4 மணிக்கு தனது மகனை ஹாக்கி பயிற்சிக்காக அழைத்துச் சென்ற பைக் மெக்கானிக் ரமேஷ் என்பவர் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டார்.

    உடனே அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து மரக்கிளைகள் மற்றும் தனது பைக் வாகனத்தையும் சாலையின் குறுக்கே நிறுத்தி பொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து திருபுவனை மின்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மின்துறையினர் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மீண்டும் இணைத்தனர். அவர் துரிதமாக செயல்பட்ட தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
    • ஆதலையூர், பாக்கம் கோட்டூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின்வினியோகம் இருக்காது.

    திருவாரூர்:

    நன்னிலம் துணை மின் நிலையம் மற்றும் அதிலிருந்து செல்லும் நன்னிலம், ஏனங்குடி, கங்களாஞ்சேரி, ஆணைகுப்பம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை 17-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.

    எனவே நன்னிலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்லமாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசா கருப்பூர், மூலமங்கலம்,

    ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்காகோட்டூர், ஆனைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதிவிடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம்,

    வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார்.
    • அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கடலூர்:

    காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி கீழக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (45) விவசாயி. இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அதே பகுதியிலுள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது வயல்வெளிகளில் தரையில் மின்சாரகம்பி கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக ரமேஷ் மின்கம்பியை மிதித்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

    இதை பார்த்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து ரமேஷை மீட்டு சிதம்பரம் காமராஜ் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர்.
    • முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் இன்று காலை மின் கம்பத்தில் இருந்த மின் கம்பி திடீரென்று அறுந்து சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அலறியடித்து ஓடினர் இதனை தொடர்ந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணத்தினால் உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இதனையடுத்து மின்சார துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்ததின் பேரில் மின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின் கம்பி அறுந்து விழுந்த காரணம் என்ன? என்பதனை பார்வையிட்டனர். பின்னர் அறுந்து விழுந்த மின் கம்பியை மீண்டும் சரி செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்த தெருவில் தனியார் மருத்துவமனைகள், ஆயிரக்கணக்கான வீடுகள், மற்றும் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் தினந்தோறும் வாகனங்க ளிலும், நடந்தும் சென்று வருகின்றனர். மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், குழந்தைகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது . இதன் காரணமாக மிக முக்கியசாலையாக கருத ப்படும் பகுதியில் இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் தற்போது தொடர்ச்சியாக இடி மின்னலுடன் கூடிய கனமழைபெய்து வருகின்றது. மேலும் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் காற்றும் வீசி வருவதால் ஆங்காங்கே தற்போது மின் கம்பிகள் பழுது ஏற்பட்டு தளர்ந்து உள்ளது . இது போன்ற தொடர்ச்சியாக மழை பெய்யும் சமயங்களில் மின்சாரத்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஒவ்வொரு பகுதியாக உள்ள மின்கம்பிகள், டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள் போன்றவற்றை உரிய முறையில் ஆய்வு செய்து இது போன்ற மின்கம்பி அறுந்து விழும் நிகழ்வுகளை தவிர்க்காமல் இருந்து வருவது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட ம் பேரிடர் மாவட்டமாக உள்ளதால் எந்நேரத்திலும் மழை அதிகளவிலும், காற்று சூறாவளி காற்றா கவும் மாறக்கூடிய அவல நிலையில் உள்ள பகுதியாக இருப்பதினால் மின்சாரத்துறை அதிகாரிகள் மழைக்காலங்கள் தொடங்கு வதற்கு முன்பு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடலூர் மஞ்சக்குப்பம் பாஷ்யம் தெருவில் திடீரென்று மின் கம்பி சாலையில் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மின் வாரிய ஊழியர்களின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

    உடன்குடி:

    உடன்குடி நகரப் பகுதியில் அவ்வபோது பலத்த காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் மின்சார துறையினர் செயல்பட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மாக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    • இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
    • இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பேராவூரணி :

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பின்னவாசல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்திற்குள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன.

    மேலும், பள்ளி வளாகத்திற்குள்ளேயே மின்மாற்றியும் உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளையாடும் பள்ளி மாணவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இது குறித்து, முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ராஜமாணிக்கம், சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் வீரமணி ஆகியோர் கூறுகையில், "மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், இதுகுறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த பதில் கடிதத்தில், 100 தினங்களுக்குள் அகற்றப்படும் என கூறப்பட்டது.

    ஆனால் தற்போது கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்கம்பி அகற்றப்படாமல், மின்மாற்றி இடமாற்றம் செய்யப்படாமலும் உள்ளது. இதனால் மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதியில் உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததில், அதே கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு உத்தரவிட்டும் மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். எனவே, இம்மாத இறுதியில் மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமத்தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளனர்.

    • லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
    • காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள சிகார்பாளையம் சாலை வளைவில், காரைக்கால் துறைமுகத்திலிருந்து, டால்மியாபுரம் சிமெண்ட் தொழிற்சாலைக்கு, நிலக்கரி ஏற்றி வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

    இதில் நிலக்கரி முற்றிலுமாக சாலையோரத்தில் கீழே கொட்டியது. லாரியை ஓட்டி வந்த மதுராந்தகம் பெரிய தெருவை சேர்ந்த லாரி ஓட்டுநர் பிரிதிவிராஜ் (வயது 25) லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஒரு மின்கம்பியில் மோதி கவிழ்ந்ததில், உயிர் இழப்பு இல்லாமல் தப்பித்தது, அதிர்ஷ்டவசமாக நிகழ்வாகும். இவ்விபத்து குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×