search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடன்குடி பகுதியில் மின் கம்பிக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்
    X

    உடன்குடி பகுதியில் மரக்கிளைகள் அகற்றப்பட்ட காட்சி.




    உடன்குடி பகுதியில் மின் கம்பிக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்

    • மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மின் வாரிய ஊழியர்களின் பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

    உடன்குடி:

    உடன்குடி நகரப் பகுதியில் அவ்வபோது பலத்த காற்று வீசும் போது, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் தேய்த்து அடிக்கடி பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மின்சார கம்பிகளுக்கு இடையூறான மரங்களின் கிளைகளை வெட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மின்சார அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கை ஏற்று உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் மின்சார துறையினர் செயல்பட்டனர். ஒவ்வொரு டிரான்ஸ்பார்மாக மின்சாரத்தை நிறுத்தி இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இவர்களது பணியை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    Next Story
    ×