என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது.
    • நிறுத்திய கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை தாலுக்கா பூ.கிள்ளனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 19). இவர் தனது நண்பர்கள் 10 பேருடன் சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மின் பஸ் ஹாரன் அடித்தபடி வந்தது. இதனால் பயந்து போன ஒரு சிலர் சாலையில் தடுமாறி விழுந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மினி பஸ் மீண்டும் வரும் வரை சாலையிலேயே காத்திருந்தனர். சிறிது நேரம் கழித்து மினி பஸ் அதே சாலையில் வந்தது. அதனை நிறுத்திய இந்த கும்பல் பஸ் கண்ணாடியை உடைத்தனர். மேலும், பஸ்சின் ஹாரனை அடித்து நொறுக்கினர். இது குறித்து மினி பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிவப்பிரகாசம், அவருடன் வந்த 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்
    • உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வரிசையில் வரச் சொன்ன விற்பனையாளர் ராமர் என்பவர் மீது இரண்டு வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில், சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், வாலிபர்களை அடையாளம் கண்டனர். அதன்படி, உளுந்தாண்டவர் கோவில் காலனியை சேர்ந்த அஜய் (வயது 32), செங்குறிச்சியை சேர்ந்த பூமிநாதன் (20) தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து விரைந்து சென்ற உளுந்தூர்பேட்டை போலீசார் அஜயை கைது செய்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள பூமிநாதனை தேடி வருகின்றனர்.

    • போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்.இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், இளங்கோவன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் வடமாமாந்தூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர் கண்டாச்சிபுரம் அடுத்த தாங்கல் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி(20) என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான சென்னையை சேர்ந்த பால்ராஜ் உள்பட 2 பேருடன் சேர்ந்து வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்த மெல்கியோர் (68) என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ரூபாய் 4 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார்கைது செய்தனர். மேலும் பால்ராஜ் உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.

    • ராமர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார்.
    • ஊழியர் ராமரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார். இவர் நேற்று மாலை வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியை செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரிசையில் நிற்காமல் வந்தனர். தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்கள்.

    அப்போது பணியில் இருந்த ராமர், வரிசையில் வரும்படி கூறினார். இதையடுத்து வரிசையில் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள், எங்களையே வரிசையில் வர சொல்கிறாயா எனக் கேட்டு ஊழியர் ராமரை தாக்கினர். 

    இதில் காயமடைந்த ராமரை, அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை க்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து. 2 வாலிபர்களை அடை யாளம் கண்டனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், பெட்ரோல் பங்க் விற்பனையாளரை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார்.
    • மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை (வயது 26). கூலி வேலை செய்து வருகிறார். இவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி க்கொண்டு தோட்டப்பாடியில் இருந்து சின்னசேலத்திற்கு சென்று மீண்டும் தோட்டப்பா டிக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது கூகையூர் செல்லும் சாலையில் ெரயில்வே கேட் அருகே சென்றார். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அங்கு நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு ரெயில்வே கேட்டில் நின்ற கொண்டிருந்த லாரி பின்னால் வந்தது.

    லாரி ஓட்டுனர் பிரேக் போட முயற்சித்தும், லாரி நிற்காமல் பின்நோக்கி சென்றது. இதனைக் கண்ட சின்னதுரை, மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு, தாயாருடன் எகிறி குதித்தார். லாரியின் பின் சக்கரத்தில் மாட்டிய மோட்டார் சைக்கிள் நசுங்கி சேதமானது. எகிறி குதித்ததில் சின்னதுரையும், அவரது தாயாரும் லேசான காயங்களு டன் உயிர்தப்பினர். இது தொடர்பான புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடக்கீரனூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 52) தொழிலாளி. இவர் வடபொன்பரப்பி காப்புக்காடு எதிரே உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் இருந்த ஒரு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாதிக்பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்பாஷா தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.
    • திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அடுத்த சோழத்த ரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தம்பியாபிள்ளை மகன் லெனின் (வயது 30). அதே ஊரைச் சேர்ந்த சேர்ந்த 27 வயது பெண்ணை கடந்த 2017-ல் இருந்து காதலித்துள் ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் அந்த பெண் கருவுற்றார். திருமணம் செய்து கொள்ள இளம்பெண் வலியுறத்தி னார். தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வ தாக உறுதி கூறிய லெனின், இளம்பெண்ணின் கருவை கலைத்ததாக கூறப்படு கிறது.

    கடந்த மார்ச் மாதம் லெனின் அக்காவிற்கு திரு மணம் நடந்துள்ளது. இருந்த போதும் இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் காலங்கடத்தி யுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த இளம்பெண், சேத்தியாத் தோப்பு மகளிர் போலீ சாரிடம் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில், ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்வ தாக போலீசாரிடம் லெனின் உறுதியளித்துள் ளார். இதையடுத்து அந்த இளம்பெண் லெனினை தொடர்பு கொண்டு கேட்ட போது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். மேலும், ஊரை விட்டு வெளியூ ருக்கும் சென்று விட்டார். இந்நிலையில் பாதிக்கப் பட்ட இளம்பெண், சேத்தி யாத்தோப்பு மகளிர் போலீ சாரிடம் மீண்டும் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை ஏமாற்றிய லெனினை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • முத்துசாமி விவசாய தொழில் செய்து வருகிறார்.
    • அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெரியம்மாள். இவரது கணவர் முத்துசாமி (வயது 70). விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக சென்றார். அப்பொழுது அங்கு நின்ற மாடு எதிர்பாராத விதமாக முதியவர் முத்துசாமியை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த முத்துசாமியை அருகில் இருந்தவர்கள் மேல் நாரியப்பனூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது ஆஸ்ப த்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலன்னிற்றி முத்துசாமி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பெரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
    • தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கி ரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தது. இவற்றை நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனிதாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

    அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்ட3 வீடுகளின் முன்பகுதி சுவர் அரசு புறம்போக்கு இடத்தில் இருந்ததாக தெரிகிறது.அதனை அகற்றியபோது, அந்த வீடுகளின்பிற பகுதியும் சேதமடைந்ததாக தெரிகிறது.இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தனிதா சில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்ய ப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 300- க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம்முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், தனிதாசில்தார் மனோஜ் முனியன் சஸ்பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், அதனை உடனடியாக ரத்து செய்து அவருக்கு அதே இடத்தில் பணி வழங்கக்கோரியும் கலெக்டர் அலுவலக ம் உள்ளே சென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்ததுணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையிலான 100-க்கும் மேற்பட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகளை கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி கேட்டை இழுத்து மூடினர்.

    ஆனால் அதனை மீறி அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது அவர்க ளுக்கும் போலீசா ருக்கும்இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் வருவாய்த்து றை அதிகாரிகள் கேட்டை தள்ளி திறந்து உள்ளே புகுந்தனர். அதன்பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகஅறை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 149 பேரை போலீசார் நேற்று இரவு 8 . 30 மணியளவில் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்பு நள்ளிரவு 12 மணியளவில் அனைவரும் விடுவிக்க ப்பட்டனர். இவ்வாறு கள்ளக்குறிச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்களை கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் வருவாய்த்துறையினர் பணிகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுப டட்டனர். கள்ளக்கு றிச்சி யிலும் இன்று வருவாய் துறையினர் பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.இதனால் மாவட்ட ங்களில் உள்ள தாலுக்கா அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக த்தில் அதிகாரிகள் பணிக்கு வந்தும் எவ்வித பணிகளும் நடைபெற வில்லை. இதனால் பொது மக்கள்ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

    நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்றிய தாசில்தாரின் இடைக்கால பணிநீக்க த்தைரத்து செய்ய வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் அறவழியில் காத்திருப்பு போராட்டம் நடத்திய தமிழ்நாடு வருவா ய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களை கைது செய்த நடவடி க்கைகளை கண்டித்தும், தாசில்தார் மனோஜ் முனியன் இடைக்கால பணிநீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், இன்று (புதன்கிழமை)காலை 10 மணிக்கு திட்டக்குடி வருவா ய்த்து றை அலுவ லர்கள் வருகை பதிவேட்டில் கை யொப்ப மிட்டு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்" உள்ளி ட்ட அனைத்து பணிகளையும் 100 சதவீதம் புறக்கணிப்பு செய்து திட்டக்குடி தாசில்தார் ரத்னகுமார், துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் தலைமையில் ஊழியர்கள் தாசில்தால் அலுவலகம் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போரா ட்டம் நடத்தி னர். இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து பணிகளும் முடங்கின.

    • மணிகண்டன் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
    • இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள சந்தவாசல்வெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் மணிகண்டன் (வயது 36) இவர் கள்ளக்குறிச்சி அருகே ரிஷிவந்தியம் பகுதியில் தனியார் உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று தனது உறவினரின் காரி யத்திற்கு திருவண்ணாமலை செல்வ தற்காக ரிஷிவந்தியத்தில் இருந்து தனியார் பஸ் ஏறி தியாகதுருகம் சென்றார். தியாகதுருகம் பஸ் நிலையத்தில் அனைத்து பயணிகளும் இறங்கி சென்றனர். மணிகண்டன் மட்டும் சீட்டில் அமர்ந்திருந்தார். அப்போது சக பயணிகள் அவரை இறங்கச் சொன்ன போது அவர் இறந்து கிடந்தது தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் கமலகாசன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டன் உடலை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்திற்கு வந்த அவரது உறவினர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டதாகவும், எனவே மாரடைப்பால் இறந்திரு க்கலாம் என கூறினர். இதனைத் தொடர்ந்து போலீசார் மணிகண்டன் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பஸ்சில் வந்த பயணி இறந்து போன சம்பவம் தியாகதுருகம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கள்ளக்குறிச்சியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • குழந்தைராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில்விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியை சேர்ந்தவர் நிவேதிதன்(31) வேலை பார்த்து வந்தார். இவர் கள்ளக்குறிச்சியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். மையனூர் தீவாங்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, முன்னாள் சென்று கொண்டிருந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிவேதிதன் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தைராஜ், அவரது மனைவி மற்றும் மகன்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். இதில் நிவேதிதன் மேல்சிகிச்சை க்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நிவேதிதன் பரிதாபமாக இறந்தார். இதனிடையே கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் குழந்தைராஜ் உள்ளிட்ட 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • திருட்டு கும்பல் தலைவனை பிடிக்க மதுரைக்கு விரைந்துள்ள போலீசார்
    • ஆம்னி வேனில் பின்தொடர்ந்து கைவரிசை

    கள்ளக்குறிச்சி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் டாஸ்மாக் குடோன் உள்ளது. இங்கிருந்து 770 மதுபான பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வேலூருக்கு கடந்த 20-ந்தேதி லாரி புறப்பட்டது. இந்த லாரியை திருவண்ணா மலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள சூரியகுப்பத்தை சேர்ந்த முத்துமணி (வயது 45) என்பவர் ஓட்டிவந்தார். தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி வழியாக வேலூர் செல்லும் வழியில், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள எறையூரில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடித்தார். பின்னர் அங்கிருந்து லாரியை எடுத்துக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். காட்டுக்கோவில் அருகே சென்ற போது வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதை கழிக்க சென்று திரும்பினார்.

    அப்போது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்ப ட்டிருந்தது. இத்தகவலை டாஸ்மாக் அதிகாரிகளிடம் கூறிவிட்டு லாரியை வேலூர் குடோனுக்கு எடுத்து சென்றார். அங்கு மதுபான பாட்டில்கள் அடங்கிய பெட்டியை ஊழியர்கள் இறக்கினர். இதில் 45 பெட்டிகளை காணவில்லை. அதிலிருந்த 2160 பாட்டில்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உளுந்தூர்பேட்டை அருகே டீ குடிக்க நிறுத்திய இடத்தில் திருடு போயிருக்கலாம் என்று சந்தேகமடைந்த முத்துமணி, இது தொடர்பாக எலவனா சூர்கோட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 7 பேர் கொண்ட கும்பல் தார்ப்பாயை பிரித்து அதிலிருந்த மதுபான பாட்டில் வைக்கப்பட்டிருந்த அட்டை பெட்டிகளை கொள்ளையடித்தை கண்டறிந்தனர்.

    இது தொடர்பாக கடந்த 26-ந்தேதி வழக்குப் பதிவு செய்த போலீசார், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த விஜயன் (37), விக்கிரமங்கலத்தை சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், உசிலம்பட்டியை சேர்ந்த பொட்ராசு (45) என்பவர் தலைமையில் 7 பேர் மாருதி வேனில் பின் தொடர்ந்துள்ளனர். எறையூரில் நின்றிருந்த லாரியில் மதுபான பாட்டி ல்களை கொள்ளையடித்து, வேனில் ஏற்றிச் சென்று அனைவரும் பிரித்துக் கொண்டதாக கூறினார்கள். இதனையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார், மதுபாட்டில்களை திருடும் கும்பல் தலைவன் பொட்ராசு மற்றும் 4 பேரை பிடிக்க மதுரை விரைந்துள்ளனர். மேலும், மதுபாட்டில்களை திருடப் பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×