search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே  தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
    X

    சங்கராபுரம் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

    • கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் வடக்கீரனூர் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 52) தொழிலாளி. இவர் வடபொன்பரப்பி காப்புக்காடு எதிரே உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் இருந்த ஒரு கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாதிக்பாஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சாதிக்பாஷா தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×